தகவல் பலகை


         கொடுமையிலும்.   
                கொடுமை 

ஹோமியோபதி மேதை டாக்டர் ஜே.டி.கெண்ட் அவர்களின் பிறந்த நாள் !

வணக்கம் நண்பர்களே!

இன்று ஹோமியோபதி மேதைகளில் ஒருவரான மரு.ஜே.டி.கெண்ட் அவர்களின் பிறந்த நாள்.

அவர் ஹோமியோபதி சமூகத்திற்கு ஆற்றிய பணிகள் மற்றும் படைப்புகளை நினைவில் கூர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்துவோமாக...

💐💐💐💐💐💐

உலக இட்லி தினம்!

ஆவியால் அவித்த அழகி
ஆளையே மயக்கும் நழுவி

ஆகாயம் பூலோகம்
அயல்நாடு உள்நாடு
எங்கெங்கு தேடினாலும்
கிடைக்காது உன்னைப் போல
ஒரு சுவையான நிறமி..

கூட்டாளிகளுக்குத் தகுந்தபடி
தன்னிலை மாற்றும் மாயவி...

சட்னியானாலும்
சாம்பாரானாலும்
மிளகாய்ப் பொடியானாலும்
அனைவரோடும் ஒத்துப்போகும்
தன்னிகரில்லாத் தலைவி...

நிலாவைப்போல வெள்ளை
உன் ருசிக்கு இல்லை எல்லை...

அனைத்து
சத்துக்களையும்
உள்ளடக்கியும்
தலைக்கனம் ஏறாத
மிருது உள்ளம்...

தமிழ்நாட்டு
காலை உணவின் கெத்து...
"இட்லியே" நீ தான்
எங்க பரம்பரை சொத்து...

*மார்ச்-30: உலக இட்லி தினம்.*

23 மார்., 2021

கலைவண்ணம்

பட்டுப்போன மரத்திலிருந்து பாயும் குதிரை! 

22 மார்., 2021

ஆன்மீக சிந்தனைகள்

🌸🌻🌸🌻🌸🌻🌸
ஓம் மகத்தான அகத்தீசாய நமஹ!!

ஓம் அகஸ்திய பரமசித்தாய நமஹ!!!

நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகளே அதாவது இறைவனின் அம்சமே நமது உயிர். இவ்வாறு இருப்பின் ஒருவர் செல்வந்தராகவும், மற்றொருவர் ஏழையாகவும், ஒருவர் ஆரோக்கியமாகவும் மற்றொருவர் ஊணமாகவும், நோய் வாய்ப்பட்டும் இருப்பது ஏன்? நம் பிறப்பை , இறப்பை நிர்ணயிப்பது எது?

இதற்கு விடை நாம் இப்பிறப்பிற்கு முன் பற்பல பிறவிகளில் செய்த பாவ புண்ணியங்களே தான்.

அவரவர் செய்த செயல்களே புண்ணியம் என்றும் பாவம் என்றும் இரு வினைகளாகி அதற்குரிய பலன்களை அவரவரே அனுபவிக்க செய்கிறது. இதுவே இறை நியதி.

எத்தனையோ பிறவிகளாக நாம் செய்த நல்வினை, தீவினைகள் இப்படி மூட்டை மூடையாக இருக்கிறது. ஆனால் இறைவன் நம் மீது இரக்கம் கொண்டு, கருணை கொண்டு அவ்வளவு வினைகளையும் நம்மிடம் தராமல் நல்வினை தீவினை இரண்டிலும் கொஞ்சமாக எடுத்து நம் உயிரோடு இணைத்து பிரார்த்துவ கர்மத்துடன் விதிக்கப்பட்ட கர்மத்துடன் நம்மை மனிதனாக இப்பூவுலகில் பிறப்பிக்க செய்துள்ளார். பிறப்பின் ரகசியம் இது.
இப்பிரார்த்துவ வினைகள் போக மீதம் உள்ளது சஞ்சிதம் (சஞ்சித கர்மம்) எனப்படும்.

பிராரத்துவ வினைகளோடு பிறந்த மனிதன் புரியும் கர்மங்கள் ஆகாமியம் எனப்படும். பிராரத்துவம் – விதி-ஆகமியத்தொடு சேர்ந்து வினை கூடவோ குறையவோ , அதாவது புண்ணியம் செய்து நல்வினை கூடலாம், அல்லது பாவம் செய்து தீவினை கூடலாம். இப்படி எதாவது செய்து எதையாவது பெற்று அந்த வினைகளோடு மரிக்கிறான்.

ஒவ்வொரு மனிதனும் செத்து உடன் கொண்டு போவது அவனவன் செய்த வினை பயன்கள் மட்டுமே.

ஆதலின் சத்தியம், தர்மம், பரோபகார சிந்தனை, நல்லொழுக்கம், மேலும் நற்பண்புகளை வளர்த்துக் கொள்வோமாக!!!

🌸🌻🌸🌻🌸🙌🙌

நலக்குறிப்புகள் : உடலில் ஆக்சிஜன் அளவு 98 -100க்குள் இருக்கவேண்டும்

உடலில் ஆக்சிஜன் அளவு.     98 -100க்குள் இருக்கவேண்டும் என்று சொல்லுகிறார்கள்; 43 க்கு கீழ் ஆக்சிஜன் சென்றுவிட்டால், ஆக்சிஜன் சிலிண்டர் தேவை;
ORAC-Oxygen Radical Absorption Capacity என்று ஒரு கணக்கீடு உள்ளது; இதன்படி இந்த அளவுகோலில் *ஆக்சிஜன்* *அதிகம்* *உள்ள* *பொருட்களை* *அவ்வப்போது* *நாம்* *சாப்பிட* *வேண்டும்* .

1.கிராம்பு.      314446 ORAC
2. பட்டை. ....   267537 ORA
3. மஞ்சள்.......102700 ORA
4. சீரகம்........... 76800 ORA
5. துளசி..........67553 ORAC
6. இஞ்சி..........28811 ORAC

சரி, இவைகளைத் தினமும் எடுத்துக்கொள்ள ஏதாவது சுருக்கு வழி உள்ளதா?... அதற்கு ஒரு ரெசிபி உள்ளது! அதனை குறித்து வைத்துக்கொண்டு பின்பற்ற முயற்சி செய்யுங்கள்;

1. *ஓமம்* ........100 கிராம்
2. *சோம்பு* .......50 கி.
3. *கிராம்பு* ........5 கி.
4. *பட்டை* .........   5 கி
5. *சுக்கு* ............10 கி
6. *ஏலக்காய்* .....10 கி.

இவைகளை எண்ணெய் ஊற்றாமல் லேசாக வறுத்து பொடி செய்து ஒரு பாட்டிலில் அடைத்துக் கொண்டு காலை மாலை டீ போடும்போது இரண்டு பேருக்கு ஒரு ஸ்பூன் வீதம் கலந்து சாப்பிட்டால்  டீ  மசாலா டீ ஆக மாறும் ; நமக்கும் ஆக்ஸிஜன் அபரிமிதமாக கிடைக்கும். வாழ்க வளமுடன்! அனைவருக்கும் ஷேர் செய்யவும்....எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க  வேண்டுகிறேன் ...🙏🙏🙏