12 டிச., 2007

நெல்லையப்பன் கவிதைகள்-11: "துன்பத்தை நெய்தவன்!"

துன்பத்தை நெய்தவன்!

அடுப்பில் பூனை,
தறியில் குருவிக்கூடு,
நெய்தவை வீட்டுக்குள்,
நெய்தவனோ தெருவில்.

பசங்க பள்ளிக்குப் போகல,
தறி வெகுநாளா ஓடல,
காரணம் "நூல்" இல்ல.

பசங்க பாடம் எழுதல,
அவங்க வயிறும் நிறையல,
காரணம் "நோட்டு" இல்ல.

நெய்தத வாங்கல,
புது நூலும் கொடுக்கல,
காரணம் அரசிடம் "நாணயம்" இல்ல.

வியர்வையும் கண்ணீரும்
கலந்து நெய்த கைத்தறிய
விற்பதற்கு என்ன வழி?

பொருளில் தரமிருந்தால்
விற்பதற்கு என்ன தடை?

தரமற்ற நூலிலும் , சாயத்திலும்
வியர்வயையும், உழைப்பையும்
வீணடித்து விட்டார்களோ?

களர் நிலத்தில் விதைக்கலாமா?
கிழிந்த காகிதத்தில்
ஓவியம் வரையலாமா?

பட்டினிச் சாவும்
கஞ்சித் தொட்டியும் தொடருமா?
ஆட்சிகள் மாறுது காட்சிகள் மாறுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக