6 செப்., 2011

எனக்குப் பிடித்த கவிதை-64: விஜிலா தேரிராஜனின் கவிதை


தாத்தா செத்ததும்
ஒலக்க ஒரல்
அம்மி ஆட்டுக்கல்லுன்னு
ஒவ்வொன்றுக்கும் போட்டி
கறவைமாடும், கன்றும் எனக்கு
காளையும் கிடாரியும் எனக்குன்னு
அப்பாவுக்கும், சித்தப்பாவுக்கும்
அத்தனை அடிதடி.
பாயில் சுருண்டு கிடக்கும்
பாட்டியை
எனக்கு எனக்குன்னு
யாரும் சொல்லக் காணோம்!



விஜிலா தேரிராஜன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக