30 நவ., 2017

நெல்லையப்பன் கவிதைகள்-90:

 நெல்லையப்பன் கவிதைகள்

படிப்பினை
பிள்ளையாரப்பா ... 
புத்தகம் இல்லாம
எவ்வளவு நல்லாருக்கு!
இது இப்படியே இருந்தா
எவ்வளவு விசயம் கத்துக்கலாம்!

எங்க வாத்தியாருக்கு 
என்ன வெல்லாம் தெரியுமுன்னு
இப்பத்தான் தெரியுது!

இதையெல்லாம்
ஏன்  சொல்லித்தரல
இத்தனை நாளா?

சாதாவோ, சமச்சீரோ
இந்த ஒரு மாதம்
நாங்க படிச்சது
எந்த புத்தகத்திலுமில்ல.

புத்தகம் வந்தா
எங்க சந்தோசமெல்லாம்
காணாத பூடும்.

இப்ப  நான் கத்துக்கிட்டது 
புத்தகத்திற்கு வெளியேயும்
நிறைய படிக்கணும்.



3 கருத்துகள்: