15 அக்., 2021

குட்டிக்கதை : அன்பு உலகை ஆளும்

அன்பு உலகை ஆளும்.....*

*கணவனுக்கு வீட்டில் காபி ஊற்றிக் கொடுத்தாள் மனைவி...* 
*உள்ளே ஓர் எறும்பு கிடந்தது.* *அதைக்கண்ட கணவன் காபியை விடக் கொதிக்க ஆரம்பித்து விட்டான். காபியை வீசினான்... விளைவு?*
*சண்டை ...*
*சந்தோசமானவீடு மூன்று நாள் துக்கவீடாக மாறிவிட்டது.*
*இதே சம்பவம் இன்னொரு வீட்டிலும் நடந்தது.* 
*அந்த வீட்டில் உள்ள கணவன் காபியில் செத்து மிதக்கும் எறும்பை எடுத்தான். அவன் மனைவியை அழைத்து மெதுவாகச் சொன்னான்.*
*"உன் காபிக்கு என்னை விடவும் தீவிர ரசிகன் இந்த எறும்புதான்.*
*உன் காபிக்காக உயிரையே கொடுத்து விட்டது பார்.*
 *இது போல் ரசிகர்களை வீணாய் இழந்து விடாதே."*
*மனைவி சிரித்தாள்.* *தன் தவறை உணர்ந்தாள்.-*
*அதன்பிறகு அவர்கள் வீட்டு சர்க்கரையை கவனமாகப் பாதுகாத்தாள்.* *அதனால் காபியில் எறும்பும் சாகவில்லை.* *அவர்கள் வீட்டின் மகிழ்ச்சியும் சாகவில்லை .....* 
*வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்வதும் சங்கடத்தில் முடிப்பதும் நாம் பிரச்சனைகளை எவ்வாறு கையாள்கிறோம் என்பது மட்டுமே தீர்மானிக்கிறது.*
 *நமக்கு மட்டும் தான் கோபம் வரும் எனவும்...* 
*நாம் தவறே செய்யமாட்டோம் எனவும் நாம் நினைக்கக் கூடாது...*
*தவறுகளை நகைச்சுவையாகவோ*
 *அன்பாகவோ சொல்லிப்பாருங்கள்..*
 *அந்தத் தவறு மறுபடி நடக்காது...*
 *ஆனால் காட்டுக்கத்தல் கத்தியோ அதிகாரமாகவோ தவறுகளை சுட்டிக் காட்டினீர்கள் என்றால் அதை விட அதிகமான தவறுகள் நடக்கும் என்பதை மறவாதீர்கள்!!*
*சாவியைப் பார்த்து சுத்தியல் கேட்டது.*
*"உன்னைவிட நான் வலிமையானவனாக இருக்கிறேன்.*
ஆனாலும் 
*ஒரு பூட்டைத் திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன்.* 
ஆனால் 
*நீ சீக்கிரம் திறந்து விடுகிறாயே*
*அதெப்படி?"*
*அதற்கு சாவி,* 
*"நீ என்னை விட பலசாலிதான்.* 
*அதை நானும் ஒப்புக் கொள்கிறேன்.*
 *பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய்,*
ஆனால் 
*நான் பூட்டின் இதயத்தைத் தொடுகிறேன்" என்றதாம்.*
பொறுமையைவிட மேலான தவமுமில்லை.*
திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.*
இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.*
மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக