15 மார்., 2020

பெரும்பாலும் இன்றைய சூழ்நிலையில்......???

*வீரம்* என்பது 
பயப்படாத மாதிரி 
நடிப்பது;

*புத்திசாலித்தனம்* என்பது 
அடுத்தவனை 
முட்டாளாக்குவது; 

*அமைதி* எனப்படுவது 
அடுத்து என்ன பேசனும்னு 
தெரியாமலிருப்பது; 

*குற்றம்* என்பது 
அடுத்தவர் செய்யும்போது மட்டும்
தெரிவது; 

*தானம்* என்பது 
வீட்டில் உள்ள 
பழையதை கொடுப்பது; 

*பணிவு* என்பது 
மரியாதை இருப்பதுபோல் 
நடிப்பது;

*நேர்மை* என்பது 
நூறை திருப்பிக் கொடுத்து 
இருநூறாய் கேட்பது; 

*நல்லவன்* என்பது 
கஷ்டப்பட்டு 
நடிப்பது; 

*எதார்த்தம்* என்பது 
நெல்லை விற்றுவிட்டு 
அரிசி வாங்கிக்கொள்வது; 

*மனிதம்* என்பது 
இன்னமும் கண்டுபிடிக்க 
முடியாதது...!!

🌹படித்ததின் விளைவு 
பகிர்வு......🌹

கருத்துகள் இல்லை: