குறள் : 778
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்
மு.வ உரை :
போர்வந்தால் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர் அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவர்.
கலைஞர் உரை :
தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை ஆற்றுபவர்கள்தான், போர்களத்தில் உயிரைப் பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர்.
சாலமன் பாப்பையா உரை :
போர் வந்தால் தம் உயிர்க்கு அஞ்சாது செல்லும் வீரர், அப்போரை வேண்டா என்று அரசு சினந்து தடுத்தாலும், தம் வீரத்தில் குறைய மாட்டார்.
Kural 778
Urinuyir Anjaa Maravar Iraivan
Serinum Seerkundral Ilar
Explanation :
The heroes who are not afraid of losing their life in a contest will not cool their ardour even if the king prohibits (their fighting).
💐
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக