_புன்னகையோடு வலம் வந்தேன்_
_*"கள்ளச்சிரிப்பு"*_என்றார்கள்!_
_கோபங் கொண்டேன்_
_*" சிடுமூஞ்சி"*_ _என்றார்கள்!_
_அதிகம் பேசாமலிருந்தேன்_
_*" ஊமையன்"*_ _என்றார்கள்!_
_சளசளவென்று_ _பேசினேன்_
_*"ஓட்டவாய்"*_ _என்றார்கள்!_
_தகவல் பல பரிமாறினேன்_
_*"கருத்து கந்தசாமி "*_ _என்றார்கள்!_
_பிறரின் வார்த்தைகளுக்கு
செவி சாய்த்தேன்-
_*"ஜால்ரா"*_ _என்றார்கள்!_
_செயல்கள் பல_
_முன் நின்று_ _செய்தேன்_
_*"முந்திரிக்கொட்டை"*_ _என்றார்கள்!_
_அவர்களைப் பின் தொடர்ந்தேன்,_
_*"நடிப்பு"*_ _என்றார்கள்!_
_யாரைப் பார்த்தாலும்
வணங்கினேன்_
_*"ஏமாற்றுக்காரன்"*_ _என்றார்கள்!_
_வணங்குவதை நிறுத்தினேன்_
_*"தலைக்கனம்"*_ _என்றார்கள்!_
_ஆலோசனை வழங்கினேன்_
_*" படிச்ச திமிர்"*_ _என்றார்கள்!_
_சுயமாக முடிவெடுத்தேன்_
_*"அதிபுத்திசாலி"*_ _என்றார்கள்!_
_கண்ணீர் விட்டு அழுதால்_
_*"வேஷக்காரன்"*_ _என்றார்கள்!_
_நான் சிரித்த போதெல்லாம்_
_*"மரை கழண்டுப் போச்சு"*_
_என்றார்கள்!_
_எதிர்கேள்வி கேட்டால்_
_*"வில்லங்கம்"*_ _என்றார்கள்!_
_ஒதுங்கி இருந்தால்_
_*"பயந்தாங்கொள்ளி"*_ _என்றார்கள்!_
_உரிமைக்குப் போராடினால்_
_*"கலகக்காரன்"*_ _என்றார்கள்!_
_எதற்கும் கலங்காமல் இருந்தால்_
_*"கல் நெஞ்சன்"*_ _என்றார்கள்!_
_*"நாலுபேர்*_ _*என்ன*_ _*நினைப்பார்கள்*_
_*நாலுபேர் என்ன பேசுவார்கள்?"*_
_*என்றஞ்சி,*_
_யாரோ_
_நாலு பேருக்காக வாழ்ந்தேன்!_
_*தொலைவில் கிடந்தது*_
_*என் வாழ்க்கை!*_
_*அந்த*_ _*நாலுபேரை*_ _*கழற்றி விட்டு,*_
_*என்னை அணிந்து கொண்டேன்!*_
_துலங்கத்_ _துவங்கியது_
_எனக்கான_ _வாழ்வின் துளிர்!_
_*வாழ்கிறேன்...*_
_*முழுமையாக,*_ _*இன்பமாக!*_
_*குறிப்பாக...*_
_*மிக நிம்மதியாக!*_
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக