23 மார்., 2025

இன்றைய புத்தகம்


விளம்பர யுகத்தின் வண்ணங்கள் காட்டும் மாயையில் இன்று நாம் சிக்கியிருக்கிறோம். இந்த வானவில்லின் பின்னால் அனைத்தும் சோகம். இயற்கையைப் பார்த்து. அதைப் போல் தானும் வர்ணங்களை சிருஷ்டிக்க முடிந்த மனிதன். புலியைப் பார்த்து பூனை சூடிட்டுக் கொண்டாற்போல் அவதியுறுவதை சுப்ரபாரதிமணியன் மறக்க முடியாத – அல்ல, மறக்கக் கூடாத புதினமாக வடித்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தரையில் உதிர்ந்த பவழ மல்லி மலர்களைப் பிழிந்து தம் உடைக்குக் காவி ஏற்றிய புத்த பிக்குகள் இயற்கையை அழிக்கவில்லை. இன்று இயற்கையின் மகத்தான படைப்பாம் மனிதனை இந்த வண்ண மோகம் எப்படி அரித்துக் கொண்டிருக்கிறது. அழித்துக் கொண்டிருக்கிறது என்ற அவலத்தை சாயத்திரை நாவல் எடுத்துச் சொல்கிறது.

இன்றைய சிந்தனைக்கு

ஆன்மீக மஞ்சரி


🌹ஆலயங்களும்_அறிவியலும்

கோயில்களுக்குச் செல்வதன்
நன்மைகள் 

1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும். 

2. சக்தியும், நேர்மறை சக்தியும் அதிகம் கொண்டிருக்கும், இது வடதுருவம், தென்துருவம்  சேர்ந்த  காந்த அலைகளின் கூட்டு ஆகும். 

3. கருவறை அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர்  சிலைதான் இந்த மையப்பகுதியில் இருக்கும்.

4. இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்தம் மற்றும் நேர்மறை சக்தி அதிகம் காணப்படும் இடம் ஆகும். 

5. இந்த முக்கிய கருவறையின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே இருக்கும் அச்சக்தியை அப்படியே பன்மடங்காக்கி வெளிக் கொண்டுவரும்.

6. அதுபோக எல்லா  கருவறையும் மூன்று பக்கமும்  மூடி வாசல் மட்டும் தான் திறந்திருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த சக்தியை  வெளியிடாமல் இருந்து  ஒரே வழியாக, அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் பக்தர்களுக்கு இச்சக்திக்  கிடைக்க செய்யப்பட்டதாகும்.

7. கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றி வரும் காரணம்  ஆற்றலின் சுற்று பாதை இது தான். அதனால் தான்  நாம் கருவறையைச் சுற்றும் போது அப்படியே  ஆற்றலின் சுற்றுபாதை கூட நாமும் சேர்ந்து சுற்ற அநச்சக்தி, அப்படியே  நம்  உடலில்  வந்து சேரும். 

8. இச்சக்தி  நமது உடம்புக்கும், மனதிற்கும், மூளைக்கும் தேவையான  நேர்மறை  ஆற்றல்.

9. மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாகத் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போகவும்  விக்கிரகத்திற்கு பின்னேயும்  ஒரு விளக்கு இருக்கும்;அதை சுற்றி கண்ணாடி ஒன்றிருக்கும்.

10. அது அச்சக்தியை அப்படியே வெளிப்படுத்தும் ஒரு அமைப்பே.

11. அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் நமது சக்தியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாகக்  கொண்டு வரும் ஒரு அபரிதமான  சக்தி நிறைந்த யந்திரம் போன்றது தான்  மூலஸ்தானம் என்பது.

12. பூக்கள், கற்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு  செம்பாலான பாத்திரத்தில் வைக்கபட்டு, கொடுக்கும் தீர்த்தம்  நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்தது.

13. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

14. இந்த தீர்த்தம்  நினைவாற்றலை அதிகரிக்கும், நோய்களைத்  தீர்க்கும்  மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை. கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்தவர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை! என்பதற்கு இதுதான் காரணம்.

15. கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் எனத் தென்பகுதிக்  கோயில்களில் கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம். அந்த  சக்தி அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும்! என்பது  நம்பிக்கை.

16. பெண்கள்  மாங்கல்யம் அணியும் காரணமும் இது தான்.  பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம், தங்கம்  இதயத்தின் வெளியே நல்ல  நேர்மறை சக்தியை  உள்வாங்கி உள்ளேயுள்ள கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக கூறுகின்றனர்.

17. பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும்,  மூலவரின் தரிசனம் கிட்டும்போது,  அந்த சில நொடிகளில் அந்த உடம்பில் ஏற்படும் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஏற்படுகிறதென்றால், அதன் காரணம், கோயிலின் மூலஸ்தானம் மற்றும் அதிலுள்ள 
சக்தியாகும்.

18. கோயிலின் கொடி மரத்திற்கும், கருவறைக்கும் ஒரு நேரடி  தொடர்பு உண்டு. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழிருந்து கிளம்பும்  மின்காந்த அலைகள் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

19. அதுமட்டுமன்று  பெரும்பாலும் கோயில்களில்  இடி
தாக்குவதில்லை.  ஏனென்றால்  கோயில் கோபுரத்தில் உள்ள  கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தியாகும்.

20. மனிதர்கள்  இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால்   உடல் மட்டுமல்ல,  மனதும், மூளையும் சுத்தமாகும்.

    இவ்வளவு புனிதத்துவம் வாய்ந்த கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வரவேண்டும். அதிகாலையிலேயே எழுந்து, நீராடி  கோயில்களுக்குச் செல்லும்படி குழந்தைகளையும்  பழக்க வேண்டும். அப்பொழுது தான் தேவையற்ற எண்ணங்கள் விலகி, மனதில் ஆன்மீக உணர்வு நிரம்பும்;  அது நம்முள் தெய்வீகச் சக்தியை அதிகரிக்கச் செய்யும். 🙏

நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏

 எங்கும்  நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி .🌹

சிவாய நம🙇 சிவமே ஜெயம் ‌ சிவமே தவம்.

நலக்குறிப்புகள்

அருள்வாக்கு

22 மார்., 2025

இன்றைய புத்தகம்


அத்தைக்கு மரணமில்லை (Athaikku Maranamillai) (Novella) (Tamil Edition) 


மூன்று பெண்கள், மூன்று தலைமுறைகள், மூன்று உலகங்களைக் கோர்த்துப் பின்னப்பட்ட கதை இது. பால்யத்தில் விதவையாக்கப்பட்ட அத்தையம்மாவுக்கு அவரிடமிருந்து பறிக்கப்பட்ட இளமைகாலக் கனவுகள், ஆசைகள் இவற்றின் இடத்தை அவர் வைத்துக்கொண்டிருக்கும் நகைகளின் மதிப்பு அளித்துள்ள அதிகாரம் ஈடுசெய்கிறது. மரணத்திற்குப் பிறகும் அவரது ஆசைகள் மடிவதில்லை; மணமாகி அக்குடும்பத்துக்குள் வரும் மருமகளிடம் நகைப்பெட்டியை ஒப்படைத்த பின்பும் நகைகள்மீது அவருக்கிருக்கும் பிடிப்பு போய்விடவில்லை. அவரது ஆவி அவளைக் கண்காணித்தபடியே இருக்கிறது. எளிய குடும்பத்திலிருந்து வரும் மருமகளுக்கு தனது துணையைத் தேர்வுசெய்யும் உரிமை இருக்கவில்லை என்றாலும், தானும் தடுமாறிக்கொண்டிருக்கும் தனது குடும்பமும் செல்லவேண்டிய பாதையை முடிவுசெய்யும் துணிச்சலை நகைப்பெட்டி அளிக்கிறது. மூன்றாவது தலைமுறைக்காரியான அவளது மகளுக்கு தனக்கான இலக்கையும் வாழ்க்கையையும் அமைத்துக்கொள்ளும் சுதந்திரம் கிடைத்துவிடுகிறது. நகைப்பெட்டிக்கு அவளிடம் வேலையில்லை. அத்தையம்மாவின் ஆசைகள் இவள்மூலமாக நிறைவேறுகிறதா?

இயல்பான மொழியில் உயிரோட்டமான நடையில் ஒரு மர்மக்கதையின் விறுவிறுப்புடன் புனையப்பட்டிருக்கிறது இந்தக் குறுநாவல்.

வாழ்த்துக்கள்

இன்றைய சிந்தனைக்கு

அருள்வாக்கு