31 ஆக., 2022

அஞ்சலி!

பள்ளத்தூர் சீதாலெட்சுமி ஆச்சி கல்லூரி முன்னாள் ஆங்கிலத்துறை தலைவரும் சிறந்த போராளியும் சமூக சேவகியும், வழக்கறிஞர் கமல் தயாளனின் தாயாருமான  ஆவுடையம்மாள்  காரைக்குடியில் மறைவு 

      பேராசிரியை ஆவுடையம்மாள்  சீதாலட்சுமி மகளிர் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் இருந்தார் கல்லூரியில்  பிரச்சினை ஏற்பட்டபோது  MUTA  தொழிற்சங்கத்தின் சார்பில் சாலை ஒரக்   கல்லூரி 4  மாத காலம்   நடைபெற்றது .இந்த சாலையோர கல்லூரியின் முதல்வராக இருந்து சாதனை படைத்தவர். பல்வேறு அச்சுறுத்தல்கள் வந்த போதும் அஞ்சாமல் பணிசெய்த பெண் சிங்கம் அவர். உரிமைக்காக குரல்  கொடுத்தவர் காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தக கண்காட்சியில் சிறப்பான பங்காற்றுபவர். சிறந்த தொழிற்சங்கவாதி. மனித நேயம்   மிக்கவர். 
பத்து நாட்களுக்கு முன்பு மகன் வீட்டில் சென்று அவரைப் பார்த்தோம் அப்பொழுது அவர் யாரையும்  பார்க்கவும் இல்லை பேசவும் இல்லை  படுத்த படுக்கையாக இருந்தார். அவரது மகனும் மருமகளும் அவரைமிக நன்றாகப பார்த்துக் கொண்டனர்.  இன்று செவ்வாய்க்கிழமை  மாலை ஆறரை மணிக்கு அவர் மண்ணுலகை விட்டு விண்ணுலகம் அடைந்தார். நீண்டநாள் நண்பர். அவர் மறைவதற்கு முன் நேரில் பார்த்ததில் சற்று நிம்மதி. 
அவர்கள் மறைவு தொழிற்சங்கங்களுக்கு பேரிழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அவரது மகன் வழக்கறிஞர் கமல், மருமகள், பேத்திகள் கணவர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். 

அருள்வாக்கு

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனிகிடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
(அவ்வையார்)
-இன்று விநாயகர் சதுர்த்தி நாளில் பூக்களைக் கொண்டு சிவந்த மேனியுடைய விநாயகரது 
பாதங்களைத் துதித்து வாக்குத் திறமையும், நல்ல மனமும், 
பெருமலரை உடைய லக்ஷ்மியின் கடாக்ஷமும், நோயற்ற வாழ்வும் 
பெற்று வாழ்க வளமுடன்.
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

30 ஆக., 2022

அபூர்வமான படம்

  அன்றைய எலக்ட்ரிக் கார்

அருள்வாக்கு

 

இன்றைய குறள்

நூல்நயம்


"அர்த்தமுள்ள இந்துமதம் "கண்ணதாசன் பதிப்பகம் வெளியீடு.கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதியது .ஓவியர் சில்பி வரைந்த அற்புத ஓவியங்களுடன். மொத்த பக்கங்கள் 800 .விலை ரூபாய் 275/-முதல் பதிப்பு 2009 .ஆறாம் பதிப்பு 2011. 
   
கவிஞர் கண்ணதாசனை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது .கண்ணனை தெரிகின்றதோ இல்லையோ அவனது தாசனை கண்ணதாசனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இதை உணர்த்தும் வகையில்தான் ;
அவன் அன்றே ;
*நானே அவன் 
அவனே நான் .
இதைக்காலம் உணர்த்தும்*
என்று சொன்னான்  .

வனவாசம் சென்று விட்டு 
மனம் திருந்தி 
குணவாசம் பெறுவதற்காக 
மனவாசத்தில் வாழ்ந்து விட்டு இப்பொழுது தின வாசம் கண்ணதாசம் ஆக முழுமையான மனிதனாக முழுமையான கண்ணதாசன் ஆக "அர்த்தமுள்ள இந்து மதம் *எழுதியிருக்கிறார். 

       பாரதி ,பாரதிதாசனைத் தொடர்ந்து வந்த கவிஞர் கண்ணதாசன் ,
தமிழ் கவிதை யை மேலும் எளிமையாக்கி விரிவான களத்தில் இயங்க செய்தார். கவிஞர் தன்னுடைய வாழ்வில் ஆதிக்கத்திற்கும் நாத்திகத்திற்கும் இடையில் நிகழ்த்தும் போராட்டங்களும் கூட அருமையான கவிதைகளாக வெளியிடப்பட்டுள்ளன. கண்ணனைத் தவிர பிற கடவுள்களும் இயேசு குறித்து அவர் கவிதைகள் ,காவியங்கள் புனைந்துள்ளார் .
     நன்மைக்கும் தீமைக்கும் இடையில் இருதலைக்கொள்ளி ஒளிபோல ஓயாமல் போராடிக் கொண்டிருந்ததால் அவர்கள் வாழ்க்கையின் முழுமையை தேடுமாறு இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருந்தது. உண்மையான எதார்த்தமான வாழ்வின் தன்மையை அறிவு ரீதியாகவும் ,அனுபவ ரீதியாகவும் கண்டறிந்தவர் .இயற்கையான பிரபஞ்ச இயக்கத்தில் இறைவனோடு இரண்டற கலந்து இருப்பதாக அவர் தன்னை இனம் கண்டு கொள்கிறார்.
        மனிதன் சம்பந்தப்பட்ட வாழ்க்கை இயற்கை ஆண் பெண் காதல் நினைவு நாடு அரசியல் தத்துவம் போன்ற பல வகையான அவற்றின் அனுபவங்கள் எல்லாம் கவிதை வடிவம் பெற்றுள்ளன .
   
   கவிஞர் கண்ணதாசன் பன்முகத்தன்மை கொண்ட ஒரு கலைஞர்.
 கவிஞராக ,கட்டுரையாளராக, நாவலாசிரியராக ,கதாசிரியராக திரைப்பட கலைஞராக ,பாடகராக ,அரசியல்வாதியாக பேச்சாளராக ,பத்திரிக்கை ஆசிரியராக, தன்னுடைய வாழ்க்கையில் பல மாறுபட்ட தளங்களில் இயங்கியவர் .தனது வாழ்க்கை தளங்களில் அவர் பெற்ற அனுபவமே அவருடைய கலை இலக்கிய வெளிப்பாடுகள் ;அர்த்தமுள்ள இந்துமதம் எழுதிட அவருக்கு அடித்தளமாக அஸ்திவாரமாக அமைந்தது ;அவரின் எல்லா அனுபவங்களும்.
    இந்தப் புத்தகத்தில் கண்ணதாசனின் ஒரு இடத்தில் குறிப்பிடுவார் .தனக்கும் கண்ணனுக்கும் உள்ள தொடர்பை *விட்டகுறை தொட்டகுறை *என்று .அவரும்  எட்டு,கண்ணனும் எட்டு. பிறப்பு ,என்பதாக சொல்லிக் கொண்டே போவார் .அது போலவே எனக்கும் கண்ணதாசன் அவர்களுக்கும் உள்ள தொடர்பு* விட்டகுறை தொட்டகுறை* என்று தான் நினைக்கிறேன் .எனது 12 13 வயதிலேயே அவரைப் பார்த்திருக்கிறேன் .அதன்பிறகு இரு முறை பார்த்திருக்கிறேன் .அவருடைய மகன் என்னுடன் பணிபுரிந்து இருக்கிறார். அவரது  பேரனுடன் பழகி இருக்கிறேன். அவரது ஒரு பேரன் டல்லாஸ் நகரில் சந்தித்து பேசி இருக்கிறேன் .அவர் மூலமாக கொள்ளுப்பேரன் தொட்டுப் பேசி இருக்கிறேன் .இதுதான் விட்டகுறை தொட்டகுறை என்று இந்து மதத்தில் சொல்லுவது உண்மை போலும்...
   
*******
ஸ்ரீ காஞ்சி காமகோடி முனிகள் ,தவத்திரு கிருபானந்தவாரியார் முதலானோர் அணிந்துரை வழங்கியுள்ளார்கள்.
     வானதி பதிப்பகம் திருநாவுக்கரசு அவர்கள் தனது பதிப்புரையில் :"இது ஒரு ஞானக் களஞ்சியம் .இந்து மதம் தழைப்பதற்கும் மக்களின் மன நலம் பிழைப்பதற்கும் கவிஞர் கண்ணதாசன் அவளுடைய செழுமையான கருத்துக்கள் நிச்சயம் பயன்படும் "என்கிறார் .

     கவிஞர் கண்ணதாசன் தனது முன்னுரையில் :"இந்து மதத்தின் தத்துவங்களில் எனக்கு நீண்ட கால ஈடுபாடு  உண்டு.நான் நாத்திகனாக இருந்த காலத்திலும் கூட சில தத்துவங்களின் உள்ளர்த்தத்தை வியப்போடு நோக்கி இருக்கிறேன் .அவற்றைப் பற்றி எல்லாம் பின்னால் நாம் எழுதப் போகிறோம் என்று கருதியது இல்லை .கருதி இருந்தால் இன்னும் பல விஷயங்களை குறித்து வைத்திருப்பேன் .காஞ்சி பெரியவர்களைப் போலவே வாரியார் சுவாமிகளைப் போலவே ஆழமான தத்துவ அறிவு எனக்கு இல்லை .அனுபவ ரீதியான உண்மைகளை பெரும்பாலும் இதில் கூறி இருக்கிறேன்" என்கிறார் முன்னுரையில் கண்ணதாசன்.
      மேலும் ,
*நோக்கம் *என்று தலைப்பிட்டு கூறுகிறார்: "கடவுளையும் புராணங்களையும் கேலி செய்ததற்காக கந்தபுராணம், பெரியபுராணம் ,கம்பனின் இராமகாதை, திருவாசகம் ,திருப்பாவை ,திருவெம்பாவை உள்ளிட்ட நாலாயிர திவ்ய பிரபந்தம், வில்லிபாரதம் ,அனைத்தையும் படிக்கத் தொடங்கினேன் ,
      கம்பனைப் படிக்கப் படிக்க நான் கம்பனுக்கு அடிமையானேன் .மேலும் மேலும் கம்பனைப் படித்தேன் ;கடவுளை படித்தேன் .
    என் சிறகுகள் விரிந்தன; சொற்கள் எழுந்தன ;பொருள்கள் மலர்ந்தன; காண்கின்ற காட்சிகள் எல்லாம் 
கவிதை களாகட் தோன்றின .என் வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு நிகழ்வுலும் நான் அடிக்கடி சொல்வது ,"நம் மூதாதையர்கள் முட்டாள்கள் அல்ல ".
   ஆலமரம் போல் தழைத்துக் குலுங்கி நிற்கும் இந்துமதம் உன் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் ஒவ்வொரு வினாடியையும் அளந்து கொடுக்கிறது .
   பல பூர்வீக மதங்களையும் தன்னுடைய கிளை அலுவலகமாக  ஆக்கிக்கொண்டு தானே தலைமை தாங்க தொடங்கிய காலம் ராமானுஜர் காலம் .
      அத்தகைய இந்து மதத்தை பற்றி என்னுடைய குறைவான அறிவில் தோன்றிய குறைபாடான கருத்துக்களை தொடர்ந்து எழுத ,அவற்றின்  தத்துவங்கள் வாழ்க்கைக்கு எவ்வளவு பயன்படுகின்றன என்பதை மட்டும் எழுதுவேன்", என்று கண்ணதாசன் முன்னுரையில் அழகாக தன்னை தெளிவுபடுத்திக் கொண்டுள்ளார்.
*******
இனி அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகம் குறித்து பார்ப்போம்:.
அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்கள் ஆக பகுக்கப்பட்டுள்ளது .இந்து மதத்திற்கு புனிதமான நூல் பகவத் கீதை .தமிழில் அதற்கு அடுத்தபடி கவிஞரின் அர்த்தமுள்ள இந்துமதம் .
தினமணி கதிர் இதழில் அர்த்தமுள்ள இந்துமதம் தொடராக வந்தபோது 1972ஆம் ஆண்டு படித்து இருக்கிறேன் .
பிறகு சிறுசிறு புத்தகமாக வந்தது .அதை வாங்கிப் படித்திருக்கிறேன் .இப்பொழுது பத்து பாகம் ,ஒரே புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்கள்.
   கருவறை முதல் கல்லறை வரை வாழ்கின்ற ஒரு மனிதனின் வாழ்க்கை எவ்வாறெல்லாம் நடத்திச் செல்லப் படுகிறது என்பதை இந்து மதம் ஏற்கனவே அழகாக ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்றவாறு பதில் அளித்திருப்பதாக நம்பிக்கையோடு இந்த அர்த்தமுள்ள இந்துமதம் எழுதப்பட்டிருக்கிறது. 
      கர்மா என்ற வார்த்தை இந்து மதத்தில் மிகவும் பிரபலம் .ஒருவர் தவறு செய்தால் கர்மாவில் இருந்து தப்பிக்கவே முடியாது என்பதை பல சம்பவங்களை தன் வாழ்க்கையில் எடுத்துக்காட்டுகளாக கூறியிருக்கிறார் .எனக்கு பயமில்லை துணிந்தவனுக்கு துக்கமில்லை என்பதுபோல இவர் பயத்தினால் புலன்கள் மென்மையாகி விடும் என்றும் அதனால் தான் அவைகளை என்று தெளிவாகக் கூறுகிறார்.
 முதல் பாகத்தில் ,
உறவு ,ஆசை ,துன்பம் ,ஒரு சோதனை பாவமாம் புண்ணியமாம் ,புண்ணியம் திரும்ப வரும் ,விதிப்படி பயணம் ,தாய் குறித்து ,மங்கல வழக்குகள் எப்படி எல்லாம் உங்கள் வாழ்க்கையில் கடைபிடித்து  கல்லானாலும் புல்லானாலும் புருஷன் என்கிறார் .தாத்பரியம்  ,இந்த நல்ல மனைவி ,நல்ல நண்பன் ,கீதையில் மனித மனம் உயர்ந்தோர் ,மரணம் , கண்ணனை நினைப்பவர்கள் சொன்னது பலிக்கும், பூர்வ ஜென்மம் ,பிற மதங்கள் ,சமதர்மம், குட்டி தேவதைகள் ,உலவும் ஆவிகள், சோதனையும் வேதனையும் , பாவிகளே பிரார்த்தியுங்கள் என்று முதல் பாகத்தில் குறிப்பிடுகிறார் .
    பெண்ணைப் பற்றியும் குடும்ப வாழ்வில் பெண்ணின் கடமை பற்றி கூறும்போது அவர் பெண்ணடிமைத்தனம் கொண்டவராக  நினைக்கத்தோன்றும். ஆனால் அவர்தான் திரைப்படத்தில் *நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் *என்று பெண்ணுக்கு, ஈஸ்வரி ஈஸ்வரனுக்கும் சரி சமமாக பாவித்து பாடல் எழுதியிருக்கிறார் .
    ஆசையை மூன்று விதமாகப் பிரிக்கிறது இந்து மதம் .
மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை மண்ணாசை வளர்ந்துவிட்டால் கொலை விழுகிறது .
பொன்னாசை வளர்ந்துவிட்டால் களவு நடக்கிறது .
பெண்ணாசை வளர்ந்துவிட்டால் பாபம் நிகழ்கிறது .இந்த மூன்றில் ஒரு ஆசைகூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு. ஆகவேதான் பற்றற்ற வாழ்க்கையை இந்து மதம் போதித்தது.

      இரண்டாம் பாகத்தில் இதிகாசங்கள், ஜாதிகள் ,வாசலில் அமீனா நிற்கிறான் ,ஒரு புதிய சிந்தனை ,வரும் -ஏற்றுக் கொள் ,தரும் -பெற்றுக்கொள் ,நெஞ்சுக்கு நிம்மதி, ஆண்டவன் சந்நிதி ,வள்ளுவர்  ஓர் இந்து,கனவுகள் ,சகுனங்கள் ,ஏன் இந்த நம்பிக்கை ,இந்து மங்கையர் ,
அங்காடி நாய் ,ஆண்டாள் தமிழை ஆண்டாள் ,அறிவும் திருவும் , இன்றைய இளைஞனுக்கு,என்று இரண்டாம் பாகத்தில் எழுதியிருக்கிறார் .
      ஆண்டாளைப் பற்றி எழுதும் போது இவரை தன்னை காதலியாக நினைத்துக்கொண்டு கண்ணனை நினைந்து உருகி எழுதியிருக்கிறார். 

*கண்ணன் என்னும்
 மன்னன் பேரைச் 
சொல்லச் சொல்ல 
கல்லும் முள்ளும் 
பூவாய் மாறும் 
மெல்ல மெல்ல .*
கண்ணனை நினைக்காத 
நாள் இல்லையே 
காதலில் துடிக்காத 
நாளில்லையே *என்றெல்லாம் அவர், காதலியாகவே, தனியாகவே வாழ்ந்து இருக்கிறார்,கண்ணன் மீது காதல் கொண்டு.

       மூன்றாம் பாகம் : 
என் பணி  , அவனவன் தருமம், விரும்பாதவனும்,முடியாதவனும், இரத்தங்களின் யுத்தம் ,குடும்பம் என்னும் தர்மம் ,மெய்யுணர்வு , மனிதாபிமானம் மாலைக்குள் பாம்பு ,மரத்தைத் தண்ணீரில் போடு ,கோபம் பாவம் சண்டாளம் , காம உணர்ச்சி,மதுவும் மதமும் ,பக்குவம் ,இறைவனின் நீதிமன்றங்கள் . இன்று மூன்றாம் பாகம் முடிகிறது.

நான்காம் பாகத்தில்,
தனது அனுபவங்களையும் முழுமையாக எழுதுகிறார் .
40 வயதை தாண்டிய பிறகு ஒருவன் கை வீசியபடி முடிந்த வரை நீண்ட தூரம் நடக்க வேண்டும் .
வாயு பதார்த்தங்களை சாப்பிடாமல் இருத்தல் வேண்டும் .
கடலை மாவு கடலை எண்ணெய் தவிர்க்கவும் .
தவறான உணர்வுகள் கொள்ளாதிருக்க வேண்டும்.
 விழுந்து குளித்தல் .
இனம் அறிந்து சேர்ந்து 
இருத்தல்.
இருதயத்திற்கு துன்பம் கொடுக்க கூடிய தொடர்புகளில் மாற்றிக் கொள்ளாது இருத்தல் .
எதையும் அளவோடு வைத்திருக்கலாம்* என்று ஆரோக்கிய அறிவுரை 
வழங்குகிறார்.

பகவத் கீதையில் "கூடுகின்ற பெருங்கூட்டத்தில் வெறுப்புக் கொள்"என்று தனிமையில் இனிமை தான் அவன் அப்படி கூறுகின்றார் .தனிமை கண்டதுண்டு அதிலே சாரம் இருக்குமா என்றான்  பாரதி. தனிமையிலே இருந்து உன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்

 ஐந்தாம் பாகம் :
இது ஞானம் பிறந்த கதை ;
"உலக வாழ்க்கையில் நான் செல்வத்தை மட்டுமல்ல அனுபவங்களையும் 
திரட்டியவன் .உலகம் புள்ளிகளால் ஆனது என்றால் ஒவ்வொரு புள்ளியும் எதனால் ஆனது என்று எனக்கு தெரியும் "என்கிறார் கண்ணதாசன் . அருணகிரி  கதையும். அழகாக விவரிக்கப்படுகிறது.அவரது சீடர் பத்திரகிரியார் கதையும் அலசப்படுகிறது. ஒவ்வொருவரும் இந்த இரண்டு கதைகளையும் அறிவுபூர்வமாக வாசித்து உள் வாங்கிக் கொள்வது நலம் .பட்டினத்தார் பாடல் கேட்கும் போதெல்லாம் கண்ணில் கண்ணீர் வராமல் போகாது .
"அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே விழியம்பொழுக  மெத்திய மாதரும் வீதி மட்டே விம்மிவிம்மி இரு "என்பதைத்தான் வீடு வரை உறவு 
வீதி வரை மனைவி 
காடு வரை பிள்ளை 
கடைசி வரை யாரோ 
என்று கண்ணதாசன் பாட்டாக வடித்திருப்பார்.

ஆறாம் பாகம்:
   நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி, இதில் இசையும் கலையும் ,சேவையில் நிம்மதி  ,பூஜையில் நிம்மதி, நம்பிக்கையில் நிம்மதி ,இல்லறத்தில் நிம்மதி ,படிப்பதில் நிம்மதி ,ஆரோக்கியத்தில் நிம்மதி தூக்கத்தில் நிம்மதி.

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே அந்த தூக்கமும் அமைதியும் நானானால் என்று பாடலை கேள்வி கேள்விப்பட்டிருப்பீர்கள் இதை சேக்ஸ்பியர் கவிதைகள் தமிழாக்கம் ரோமியோ ஜூலியட்டில்.
Sleep Dwell upon Thine Eyes 
Peace in Thy  breast 
Would i were Sleep and Peace
So Sweet to Rest
தூங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு .

உனக்குள்ளே நிம்மதி முடிவுரை என்று ஆரம்பத்தில் அழகாக நிம்மதி குறித்து பக்கம் பக்கமாக எழுதி இருக்கிறார் .

         ஏழாம் பாகம்:
 சுகமான சிந்தனைகள் :
காலங் களே தருகின்றன அவையே பறிக்கின்றன.
 காலங் களே சிரிக்க செய்கின்றன  ;அவையே அழவும் வைக்கின்றன .
காலம் பார்த்து காரியம் செய்தால் பூமியையே விலைக்கு வாங்கலாம். காலங்களிலேயே காரியங்களில் வெற்றி தோல்விகள் அடங்கியிருக்கின்றன.

 பத்து விதமான சுகமான சிந்தனைகளை பிட்டுப் பிட்டு வைக்கிறார் அத்தனையும் தூத்துக்குடி முத்துக்களாக ஜொலிக்கின்றன.

எட்டாம் பாகம் : பரலோக வாழ்க்கைக்கும் இகலோக வாழ்க்கைக்கும் இடையே உள்ள தராதம்மியங்களை குறிப்பிட்டு உலகத்துக்குச் சொல்லிவிட்டால் என் கடைசி காலம் பெருமைக்கு உரியதாக ஆகி விடாதா என்று போகம் குறித்தும் , ரோகம் குறித்தும்,யோகம் குறித்து இந்த எட்டாம் பாகத்தில் அழகாக எழுதுகிறார் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்.

    ஒன்பதாம் பாகத்தில் ,மனிதனின் மிகவும் குறைந்தபட்ச தேவை நிம்மதி,. அதை தெய்வத்திடம் இருந்து பெற்றுக் கொள்பவன் பெயர்தான் இந்து .
ஞானத்தை தேடி என்கிற தலைப்பில் சிறிது மவுனம் , உண்ணாவிரதம், இச்சாபத்தியம், குரு-சிஷ்ய பாவம் ,கடவுள் மனிதனாக ,சொர்க்கம் நரகம், புனர்ஜென்மம் ,கள்ளம் கபடம் வஞ்சகம், தெய்வத்தை அணுகும் முறை, எப்படி தெய்வத்தை வணங்கவேண்டும் என்று தெளிவாக குறிப்பிடுகிறார் ..
 

பாகம் 10 :
எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன். ஆகவே இப்படித்தான் வாழ வேண்டும் என்று புத்தி சொல்லக் கூடிய யோகிதை எனக்கு உண்டு என்கிறார் கவிஞர் கண்ணதாசன் .

சாமி நீ !சாமி நீ !கடவுள் நீயே;
 தத்துவமசி ;தத்துவமசி ;நீயே  அஃதா ஆம் பூமியிலேயே நீ கடவுள் இல்லை என்று புகழ்வது நின்மனத்துள்ளே புகுந்த மாயை சாமி நீ ;அம்மா யை தன்னை நீக்கி சதாகாலம் சிவோஹ  மென்றுசாதிப்பாயே!   
          மகாகவி பாரதியார் .
இந்த பாகத்தில் ;பதில் இல்லாத கேள்வி, சேரிடம் அறிந்து சேர் ,பகுத்தறிவு, ஈஸ்வராலயம் ,பொய்யெல்லாம் வாழ்க்கை, சித்திரவதைகள் ,வாழ்க்கை என்பது வாழவே ,என்ற தலைப்புகளில் எழுதி முடிக்கிறார் .
 
விசையுறு பந்தினைப்போல் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன் என்றான் மகா கவி பாரதி.
 மனம் சொல்ல வேண்டுமாம். உடல் போக வேண்டும் .மனதை அடக்கி உடம்பை நன்றாக வைத்துக் கொள்ளுங்கள் என்று நான் அடிக்கடி சொல்கிறேன் காரணம் நான் அனுபவித்து சொல்கிறேன், என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.
 ****
எண்ணூறு பக்கங்களில் உள்ள அர்த்தமுள்ள இந்து மதத்தை 20 ஆயிரம் வார்த்தைகளில் சுருக்கி எழுத முடியுமா என்ன ?படித்துப் பாருங்கள் .
   கம்பன் சொன்னது போல கடல்மிசை,
மிசை  முன்வந்து நீரை நக்கி குடிப்பது போலத்தான் எனது இந்த சுருக்க உரை.
    

   போகாத வாசமில்லை 
   வைக்காத பாசம் இல்லை 
   செய்யாத மோசமில்லை 
   ஆசாபாசம் முற்ற உணர்வில் 
   பேசாமல் அர்த்தமுள்ள இந்துமதம் வாசி!!!!

    காதற்ற ஊசியும்
    வாராது காணுங்கள்
    கடைவழிக்கே....

நன்றி:
திரு கருணாமூர்த்தி 
வாசிப்பை நேசிப்போம் 
முகநூல்

சுற்றுச்சூழல்

பிறந்தநாள் நடவு

நம் குழுவின் துணைத்தலைவர்.
#பிரவீன் அவர்களுக்கு 
#இனிய_பிறந்தநாள்_வாழ்த்துக்களை #தெரிவித்துக்கொள்கிறோம் 
வாழ்க வளமுடன்🎉🌳

நன்றி :

நலக்குறிப்புகள்

29 ஆக., 2022

குட்டிக்கதை

*படித்ததில் சிரித்தது*

ஒரு பஸ்ஸில் ஜன்னலோர சீட்டில் இரண்டு பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். பஸ் போய்க் கொண்டிருந்தது. அதில் ஒரு பெண் யோவ் கண்டக்டர் இங்க வாய்யா இந்த ஜன்னலக் கொஞ்சம் திறந்து வைத்து விட்டுப் போ என்றாள். கண்டக்டர் வந்து ஜன்னலை திறந்து வைத்து விட்டுப் போனார். அந்தப் பெண்ணுக்கு அடுத்து உட்கார்ந்திருந்த பெண் யோவ் கண்டக்டர் இங்க வாய்யா வந்து இந்த ஜன்னலை சாத்தி விட்டுப் போய்யா என்றாள். கண்டக்டர் வந்து என்னம்மா அந்தம்மா ஜன்னல திறந்து வைக்கச் சொல்லுது நீங்க ஜன்னல சாத்தி வைக்கச் சொல்றீங்க கொஞ்ச நேரம் அட்ஜஸ்ட் பண்ணி பிரயாணம் பண்ணக் கூடாதா என்று கேட்டார்.

அதற்கு முதல் பெண் சொன்னாள் இங்க பாரு நீ ஜன்னல அடைச்சன்னா நான் மூச்சு முட்டி செத்துப் போவேன் என்றாள்.  இரண்டாவது பெண் இங்க பாரு நீ ஜன்னல திறந்து வச்சின்னா நான் குளிர்ல விறைச்சி செத்துப் போவேன்னாள்.  கண்டக்டர் என்ன செய்றதுன்னு திகைச்சி நின்னுகிட்டிருந்தப்ப, கடைசி சீட்டில் சட்டை போடாமல் பீடி குடிச்சிகிட்டிருந்த ஒரு மனுசன் கண்டக்டர கூப்பிட்டு அங்க என்ன பிரச்னை என்று கேட்டான்.

கண்டக்டர் சொன்னார் அத ஏன் கேட்கிற ஒரு அம்மா ஜன்னல அடைச்சா மூச்சு முட்டி செத்துப் போவேன்ங்குது  இன்னொரு அம்மா ஜன்னல திறந்து வச்சா குளிர்ல விறைச்சி செத்து போவேங்குது. ஒருத்தருக்கு ஒருத்தர் அட்ஜஸ்ட் பண்ணிப் போகக் கூடாதா கொஞ்ச நேரத்தில் இறங்கப் போறாங்க அதுக்குள்ள இப்படி சண்டை போட்டுகிட்டா என்ன செய்றது.

அந்த மனுசன் நான் ஒரு யோசனை சொல்லவா என்று கேட்டான். கண்டக்டர் சரி சொல்லுய்யா நீ என்ன சொல்லப்போறேன்னு பார்ப்போம் என்றார்.

அவன் சொன்னான் கொஞ்ச நேரம் ஜன்னல அடைச்சி வை அந்த அம்மா செத்துப் போகும் அப்புறம் கொஞ்ச நேரம் ஜன்னல திறந்து வை இந்தம்மா செத்துப் போகும் நாம நிம்மதியா போகலாம் என்றான்.

கண்டக்டர் சொன்னார் நல்ல ஆளுய்யா நீ அப்படி அவங்க ரெண்டு பேரும் செத்துப் போனா அந்தப் பொம்பளைகளோட புருசங்க வந்து கேட்டா நான் என்னய்யா பதில் சொல்றதுன்னு கேட்டார்.

அதற்கு அவன் சொன்னான் அதப் பத்தி நீ கவலைப் படாதே அந்த ரெண்டு பொம்பளைகளோட புருசன் நான் தான் என்றான் அதனால தான் அந்த யோசனையை சொன்னேன் என்றான்.

கண்டக்டர்: ? ? ? ? ? ? ? ? ? ?

*அய்யா தென்கச்சி கோ.சுவாமிநாதன் பேச்சிலிருந்து.*

26 ஆக., 2022

இன்றைய குறள்

நூல்மயம்

உங்கள் கவனத்திற்கு

பெண்கள் சமத்துவ தின வாழ்த்துக்கள்

அன்னை தெரசா பிறந்த தினம்

அருள்வாக்கு

இன்று ஒரு தகவல்

*What a Great ACHIEVEMENT by the "SIKKIM CM"*

ஒரு அவசியமான... அவசரமான... முக்கியமான.... பத்திரிகைச் செய்தியை "வாட்ஸ் ஆப் மக்கள் " தந்துள்ளார்கள்...!
*   *   *   *    *    *    *    *    *    *  
*இந்தியாவிலேயே முற்றிலும் இயற்கை வேளாண்மைக்கு மாறிய பெருமையைப் பெற்றிருக்கிறது, நாட்டின் வடகிழக்குப் பகுதியில் ஒதுங்கி நிற்கும் மாநிலமான சிக்கிம்.*

*முதல்வரின் முழு முயற்சி*

இதற்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவர் அந்த மாநிலத்தின் *முதல்வர் பவன்குமார் சாம்லிங்.* தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதல்வராக இருக்கும் இவர், அடிப்படையில் ஒரு விவசாயி. உணவையும் நிலத்தையும் நஞ்சாக்கும் நவீன விவசாயத்திலிருந்து மாற்றத்தை விரும்பிய பவன்குமார், 2003-ல் சிக்கிம் மாநிலத்தை ’ஆர்கானிக் ஸ்டேட்’ எனச் சட்டப்பேரவையில் பிரகடனம் செய்தார். ‘மாநிலத்தில் ரசாயன உரங்களுக்கும் பூச்சிக்கொல்லிகளுக்கும் முற்றாகத் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறுவோருக்கு ‘ஒரு லட்ச ரூபாய் அபராதம்; மூன்றாண்டுகள் சிறை தண்டனை’எனவும் தடாலடியாக அறிவித்தார்.

வழக்கம் போல இந்த அறிவிப்பு அரசியலாக்கப்பட்டு எதிர்ப்புகள் தூண்டிவிடப்பட்டன. எதைப்பற்றியும் கவலைப்படாத பவன்குமார், தனது திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ‘ஆர்கானிக் ஸ்டேட் போர்டு’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் மாநிலத்தில் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்களை இயற்கை விவசாயத்திற்கு மாற்றுவது என தீர்மானித்துக் கொண்டு செயலில் இறங்கியது இந்த வாரியம்.

*மத்திய மானியம் மறுப்பு*

ஒரு பக்கம் இயற்கை வேளாண்மையை ஆதரிக்க வேண்டிய அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வுப் பிரசாரம், மறுபுறம் இயற்கை வேளாண்மையை மேற்கொள்வதற்கும் இயற்கை உரங்களைத் தயாரிப்பதற்கும் தாராளமான மானியங்களை வழங்கியது மாநில அரசு. மாநிலம் முழுவதும் 24,536 இயற்கை உரத் தயாரிப்பு மையங்களும் 1,447 பசுந்தாள் உரத் தயாரிப்பு மையங்களும் அரசால் நிறுவப்பட்டன. இயற்கை உரத் தயாரிப்பு முறைகள் குறித்து உழவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைகளால் 2009-ம் ஆண்டு இறுதிக்குள் எட்டாயிரம் ஏக்கர் நிலங்கள் இயற்கை வேளாண்மைக்கு மாற்றப்பட்டன. இதற்கிடையே, 2006-07-ம் ஆண்டில் மத்திய அரசு வழங்கிய மானியத்துடன் கூடிய இரசாயன உரக் கோட்டாவை வேண்டாம் என்று அறிவித்தார் பவன்குமார். அடுத்தகட்டமாக ஓராண்டுக்குள் 14 ஆயிரம் ஏக்கரை நஞ்சில்லா பூமியாக மாற்றுவது எனத் திட்டமிடப்பட்டு, அதுவும் நிறைவேற்றப்பட்டது.

*உயிர் கிராமங்கள்*

இதன் தொடர்ச்சியாக *‘சிக்கிம் ஆர்கானிக் மிஷன்’* என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, அதன் கீழ் கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு இயற்கை வேளாண் முறைகள் பிரபலப்படுத்தப்பட்டன. இந்தக் கிராமங்களுக்கு *‘பயோ வில்லேஜ்’* என்று அழைக்கப்பட்டன. நல்ல திட்டங்கள் பலன் தராமல் தோற்றுப்போனதற்குக் காரணமே தொடர் ஆராய்ச்சிகளும் வளர்ச்சியும் இல்லாமல் போனதுதான்.

இதைப் புரிந்துகொண்டு இயற்கை வேளாண்மையை மேம்படுத்தவும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவும், Center Of Excellence For Organic Farming என்ற ஆராய்ச்சி மையத்தை உருவாக்கினார். இத்தனை முன்னேற்பாடுகளுடன் 2015-ம் ஆண்டு இறுதிக்குள் சிக்கிம் மாநிலத்தை நஞ்சில்லா விவசாயப் பூமியாக மாற்றத் திட்டமிட்டு, அதை வெற்றிகரமாகச் சாதித்தும் காட்டியிருக்கிறது பவன்குமார் சாம்லிங் அரசு.

தொடக்கத்தில் சில சிரமங்கள் இருந்தாலும் இப்போது சிக்கிம் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மையின் மகத்துவம் புரிகிறது. இவர்கள் விளைவிக்கும் இயற்கை வேளாண் பொருட்களை வாங்குவதற்கு டெல்லி, மத்திய ஆசிய நாடுகளில் தவம் கிடக்கிறார்கள்.

*எடுபடாத எதிர்ப்பு*

அண்மையில் சிக்கிம் சென்றிருந்த தேசியப் பிற்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர் கார்வேந்தன், அங்குள்ள இயற்கை வேளாண் நிலங்களையும், விவசாயிகளையும் சந்தித்துத் திரும்பியிருக்கிறார். தன்னுடைய அனுபவத்தை அவர் பகிர்ந்துகொண்டார்:

’’நானும் ஒரு இயற்கை விவசாயிதான். அந்த ஆர்வத்தில் சிக்கிம் விவசாயிகளைச் சந்தித்துப் பேசினேன். சிக்கிமின் சில மலைப் பகுதிகளில் வாழும் ஒருசிலர் இயற்கை விவசாயத்தை எதிர்த்தாலும், அது எடுபடவில்லை. சிக்கிம் மாநிலத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இயற்கை வேளாண்மை மூலம் கடந்த ஆண்டில் மட்டுமே 80 ஆயிரம் மெட்ரிக் டன் விளைபொருட்களை சிக்கிம் விவசாயிகள் உற்பத்தி செய்திருக்கிறார்கள். இதில் இஞ்சி 45,890 மெட்ரிக் டன், மோட்டா ரக மிளகு 3,510 மெட்ரிக் டன், மஞ்சள் 2,790 மெட்ரிக் டன், சன்ன ரகக் கோதுமை 4,100 மெட்ரிக் டன்.

வருடத்தில் மூன்று மாதங்கள் அங்கே கடும் குளிர் நிலவும். அதை சமாளிப்பதற்காக உடலுக்குக் கேட்டை உண்டாக்காத, ரசாயனம் கலக்காத ‘பயோ விஸ்கி’யையும் அங்கே தயாரிக்கிறார்கள்.

*இயற்கை உரத் தொழிற்சாலை*

பயோ ஃபெர்ட்டிலைசர்ஸ் என்று சொல்லப்படும் இயற்கை உரம் தயாரிக்கும் பெரும் தொழிற்சாலையை அரசே நிறுவியிருக்கிறது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 3000 மெட்ரிக் டன் இயற்கை உரம் தயாரிக்க முடியும். தெற்கு சிக்கிமில் ராவங்லா என்ற இடத்தில் 440 ஏக்கரில் அரோமா ஆர்கானிக் தேயிலைத் தோட்டத்தையும் அரசு நடத்துகிறது. இங்கு விளையும் உலகத் தரம் வாய்ந்த தேயிலை பெருமளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மிகவும் பின் தங்கிய சிக்கிம் மக்கள் ரசாயனத்தின் ஆபத்தை உணர்ந்து இயற்கை விவசாயத்துக்கு மாறிவிட்டார்கள். ஆனால், நாம் அது குறித்த விழிப்புணர்வுகூட இல்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது” என்கிறார் கார்வேந்தன்.

ஜனவரி 18-ம் தேதி, சிக்கிமில் நடந்த விவசாயிகள் கருத்தரங்கில் இயற்கை விவசாயத்தில் சாதித்த பவன்குமார் சாம்லிங்குக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கிக் கௌரவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

*எப்போது மீள்வோம்...?*

“பசுமைப் புரட்சிக்கு முன்பு நாட்டில் இவ்வளவு நோய்கள் இல்லை. அதிக மகசூல் என்று ஆசைகாட்டி, நிலங்களையும், உண்ணும் உணவையும் விஷமாக்கி விட்டார்கள். இரசாயன உரங்கள், உணவு உண்ணும் அத்தனை உயிர்களையும் சிறுகச் சிறுகக் கொல்கின்றன. இதை,அறியாதவர் யாரும் இல்லை. எனவே,இரசாயன உரங்களை ஒழிக்கப் போராடுவது தான் இப்போது மிக முக்கியம்.

கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 10 லட்சம் பேர் புற்றுநோய் பாதிப்பால் இறந்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள், குழந்தைகள். இதற்கு இரசாயன உரங்களும் முக்கியக் காரணம். 

         *சிக்கிமைத் தொடர்ந்து உத்தராகண்ட், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் இயற்கை விவசாயத்தை நோக்கி நகர ஆரம்பித்திருக்கின்றன. ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் இது குறித்த விவாதங்கள் தொடங்கிவிட்டன.*

 ஆனால்..
     
      *_மிகப்பரந்த.. வளமான விவசாய பூமியைக் கொண்ட தமிழகத்தில்.. இயற்கை விவசாயம் குறித்த புரிதல்.. வேளாண் அதிகாரிகளுக்கும் முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் கூட இல்லையே” என மனம் குமுறுகிறார்கள்.. உழவர், உழைப்பாளர் கூட்டமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள்._*

      *மெல்ல மெல்லக் கொல்லும் இரசாயனத்தின் பிடியிலிருந்து சிக்கிம் மீண்டுவிட்டது.


நன்றி :
✒️
-WA: Monika 123 கிராம பாதுகாப்பு.

25 ஆக., 2022

இதய நோய்க்கு சிறுநீர் சிகிச்சை

*இதய நோயாளிகள் தாங்களாகவே சிறுநீரைக் குடிப்பதன் மூலமும், உபயோகிப்பதன் மூலமும் மிக வேகமாக குணமடைகின்றனர், ஏனெனில் சிறுநீரில் "யூரோ கைனைஸ்" என்ற மருந்து உள்ளது, இது மனித சிறுநீரில் இருந்து தயாரிக்கப்படும் மிகவும் விலையுயர்ந்த மருந்தாகும்.

நன்றி :
திரு நாகராஜ்,  பொள்ளாச்சி, 
வாட்ஸ்அப் சிறுநீர் சிகிச்சைக் குழு 

சுற்றுச்சூழல்

நூல்மயம்

இன்று ஒரு தகவல் : இரு தமிழ் எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகதமி விருது

இன்று சில தகவல்கள் : ஒரு பசுவினால் கிடைக்கக்கூடிய வருமானம் ரூ.1,31,40,000/-

சுமார் 20 வருடங்கள் வாழக்கூடிய ஒரு பசுவினால் கிடைக்கக்கூடிய வருமானமானது 
ரூ.1,31,40,000/-யை கடந்து செல்லக்கூடும் என்பதனை கண்டு உச்சநீதிமன்றம் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியது. 

முக்கிய தீர்ப்புகளின் சிறப்பு அம்சங்கள். 

பசு வதை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வாத பிரதிவாதங்கள் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியவை: 

மேற்படி வழக்கில் மிகவும் பிரபலமான வழக்கறிஞர்களான சோலி சபர்ஜி (கட்டணம் 20 லட்சம்) ஸ்ரீ கபில்சிபில் (22 லட்சம்) ஸ்ரீ மகேஷ் சத்மாலினி (35 லட்சம்) ஆகியோர் பசு மாமிச வியாபாரிகளின் சார்பாக வாதிட்டனர். 
ஸ்ரீ ராஜீ பாய் அவர்கள் இப்பசு வதையை எதிர்த்து வாதிட வழக்கறிஞரை நியமிக்க தன்னிடம் பணவசதி இல்லையென திரு.ராஜூ பாய் அவர்கள். 

உச்சநீதிமன்றத்தில் விண்ணப்பித்ததின் பெயரில் நீதிமன்றமே 
உங்களுக்கு சட்ட உதவி கொடுத்தால் போதுமா எனக் கேட்க 
அது தனக்கு மிகவும் மகிழ்ச்சியே, 
இருப்பினும் வழக்கை தானே வாதிட அனுமதிக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார். 
பின்பு நீதிமன்றம் ஸ்ரீ மெஸ்கிரி என்ற வழக்கறிஞரை இந்த வழக்கில் மனுதாரரான திரு.ராஜூ பாய்க்கு சட்ட உதவி செய்திட நியமித்து வழக்கு தொடரப்பட்டது. 

பசு மாமிச வியாபாரிகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வைக்கப்பட்ட வாதங்கள் பின்வருவன: 

1. பசுவை பாதுகாப்பதனால் எந்த உபயோகமும் இல்லை. 
பசு மாமிசத்தை ஏற்றுமதி செய்வதால் இந்திய நாட்டின் பொருளாதார நிலை வலுவடையும். 

2. பசுக்களுக்கு போதுமான வைக்கோல் மற்றும் புற்கள் போன்றவை போதாமல் அவை பசியில் இறப்பதை விட அவற்றை கொல்வதே நல்லது. 

3. நமது நாட்டில் மனிதர்களுக்கே இடமில்லை, இதில் என்ன வசதி செய்து தர முடியும். 

4.நமது நாட்டிற்கு வெகுவான அயல் நாட்டு வருமானமானது பசு மாமிச ஏற்றுமதியிலேயே கிடைக்கும். 

5. மாமிசம் சாப்பிடுவது மதரீதியான உரிமை ஆகும். 

இவ்வாறாக பசு மாமிச வியாபாரிகளின் வாதம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களால் வாதிடப்பட்டது. 

ராஜு பாயின் பதில் வாதம்: 

நல்ல ஆரோக்கியதுடன் இருக்கும் பசுவானது சுமார் 3 முதல் 3.5 குவிண்டால் எடை இருக்கும். 
அதை கொன்றால் சுமார் 70 கிலோ எடை மாமிசம் கிடைக்கும். 
இதை கிலோ ரூ.50 என ஏற்றுமதி செய்வதால் கிடைக்கக்கூடிய தொகை ரூ.3500/-. 
பசுவின் இரத்தத்திற்கு கிடைக்கக்கூடிய தொகைரூ. 1500/- முதல் 2000/-. 
மேலும் 30 முதல் 35 கிலோ அதன் எலும்புகளுக்கு கிடைக்கக்கூடிய தொகை ரூ.1000/- முதல் 1200/- 
ஆக மொத்தத்தில் ஒரு பசுவை வதம் செய்வதனால் ஒரு நாட்டிற்கு அல்லது வியாபாரிக்கு கிடைக்கக்கூடிய தொகை ரூ.7000/- 

ஒரு ஆரோக்கியமான பசுவானது ஒரு நாளைக்கு 10 கிலோ சாணம், 3 கிலோ கோமியம் தரக்கூடியதாகும். 
1 கிலோ சாணத்தில் 33 கிலோ உரம் தயாரிக்கலாம். 
இதனை நாம் இயற்கை (சேந்திரியா) உரம் என்போம். 
ஸ்ரீ ராஜூ பாய் அவர்கள் இவ்வாறு வாதிட்டு கொண்டிருக்கும் போது நீதிபதிகள் இது எப்படி சாத்தியம் என்று கேள்வி எழுப்பினார்கள். 

அவர் இதை நான் நிரூபிக்க வாய்ப்பு அளிக்கும் படி கேட்டுக்கொண்டதால் நீதிமன்றம் அனுமதி அளித்ததின் பேரில் திரு.ராஜூ பாய் அவர்கள் 1 கிலோ சாணத்தில் 33 கிலோ உரம் தயாரித்து நீதிமன்றத்திற்கு அளித்தார். 
இதனை IRC  விஞ்ஞானிகள் பரிசீலித்து மிக உயர்ரக உரமாக அறிவித்தனர். 
இந்த உரமானது பூமிக்கு தேவைப்படுகின்ற மிகவும் சூச்சமமான 18 நன்மைகளை தரக்கூடியது என்றும் தெரிவித்தனர். 
இந்த நன்மைகளானவை பயிர் வளர்ப்புக்கு தேவையான மாங்கனீஸ், பாஸ்பேட், பொட்டாசியம், கால்சியம், அயர்ன், சல்பேட், சிலிகான் போன்றவை உள்ளதாகவும் தெரிவித்தனர். 

சாதாரண ரசாயன உரங்களில் சுமார் 3 ரசாயனங்கள் இருக்கும் என்றும் 
இதனால் சாணம் மூலம் தயாராகும் இயற்கை உரத்தில் சாதாரண ரசாயன உரத்தை விட 
10 மடங்கு வலிமையுள்ள மதிப்புக்குரியதாகும் என்று திரு. ராஜூ பாய் நிரூபித்து வாதிட்டதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. 

திரு. ராஜூ பாய் அவர்கள் நீதிமன்றத்திற்கு ஆட்ச்சேயபனை இல்லையெனில் தங்கள் ஊருக்கு வந்து தானும் தன் குடும்பத்தாரும் பசு சாணம் மற்றும் கோமியம் கொண்டு எவ்வாறு உயர்ந்த ரக உரத்தை தயாரிக்கிறோம் என்று பார்க்கலாம் என்றும் அழைத்தார். 
மேலும் அவருடைய இந்த வாதத்தில் இந்த உரத்தில் 1 கிலோ உரமானது உலக சந்தையில் குறைந்தது ரூ.6/- என்றும் நினைத்தால் ஒரு பசுவானது ஒரு நாளைக்கு ரூ.1800/-லிருந்து ரூ.2000/-வரை வருமானத்தை ஈட்டி தருமென்றும் 
(33 கிலோ சாணத்திலிருந்து 330 கிலோ உரம் தயாரித்து அதை ரூ.6/-க்கு மதிப்பிட்டால் (330 x 6) மேலும் மேற்படி பசுக்களுக்கு ஞாயிறு விடுமுறை, அரசு விடுமுறை போன்றவை இல்லை என்பதால் வருடத்திற்க்கு அதாவது 365 நாட்களுமே இதனால் கிடைக்கக்கூடிய வருமானமானது 1800 X 365 = ரூ. 6,57,000/. 
இந்த வருமானங்கள் அனைத்தும் மாட்டு சாணத்தால் கிடைக்கக்கூடியவை. 

திரு. ராஜூ பாய் அவர்கள் அளித்த இந்த கணக்கின் படி சுமார் 20 வருடங்கள் வாழக்கூடிய ஒரு பசுவினால் கிடைக்கக்கூடிய வருமானமானது ரூ.1,31,40,000/-யை கடந்து செல்லக்கூடும் என்பதனை கண்டு உச்சநீதிமன்றம் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியது. 

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் மக்கள் மாட்டு தொழுவத்தில் லக்ஷ்மி வாசம் செய்வதாக கூறினார்கள் என்று சொன்னால் மேற்படி ஆதாயத்தை வைத்து தான். 

ஆனால் இதனை தொடர்ந்து கேலி செய்பவர்கள் பெரிய படிப்புகளை படித்தவர்களும், பல ஆண்டுகளாக பசு தொழுவத்தில் லக்ஷ்மி வசிப்பதாக கூறுவதை முட்டாள் தனம் என்றும் நாகரீகமற்ற பேச்சு என்றும் கூறி கொண்டு இருந்தவர்களும் இதை கண்டு ஆச்சர்யப்பட்டனர். 

பசு கோமியத்தின் மீது திரு. ராஜூ பாய் செய்த வாதம்: 

ஒரு பசுவானது ஒரு நாளைக்கு 2 முதல் 2.25 லிட்டர் கோமியம் வழங்கும் என்றும் இவை பலவிதமான நோய்களான வாதம், மதுமோகம், மற்றும் மூட்டு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் என சுமார் 48 நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது என உறுதியாகி இதன் மூலம் பல ஆயுர்வேத மருந்துகள் தயார் செய்யபடுகிறது. 

ஒரு லிட்டர் பசு கோமியமானது இந்திய சந்தையில் ரூ.500/-ஆகும். 
உலக சந்தையில் இதன் மதிப்பு மேலும் அதிகமாகும். 
இது அமெரிக்க நாட்டில் பாட்டேர்ன் (pattern) செய்யப்பட்டுள்ளது. 
பசு கோமியத்திற்கு 3 பாட்டேர்ன்கள் உள்ளது. 
அமெரிக்கா இந்தியாவிலிருந்து பசு கோமியத்தை இறக்குமதி செய்து கொண்டு அவர்கள் நாட்டில் கேன்சர் மற்றும் பல நோய்களுக்கு மருந்து தயாரித்து வருகிறது. 

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் கோமியத்தின் தற்போதைய விலையானது ரூ.1200 முதல் ரூ.1300/-வரையாகும். 
இந்த கணக்கின் படி இந்த கோமியத்தின் ஒரு நாள் வருமானமானது ரூ.3000/- அப்படியானால் ஒரு ஆண்டுக்கு சுமார் (3000x365) = ரூ.10,95,000/- எனவே ஒரு பசு தனது ஆயுள் காலத்தில் தனது கோமியத்தின் மூலம் தரக்கூடிய வருமானமானது (3000*365*20) = ரூ.2,19,00,000/-. 

இந்த பசு கோமியத்தின் மூலமாக மீத்தேன் வாயு உற்பத்தி செய்யப்படுகிறது. 
இதனை நாம் சமையலறை, வாகனங்கள், கார்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

இந்த வாதத்தை நீதிபதிகளின் அமர்வில் ஒரு நீதிபதி நம்ப மறுத்தார். 
உடனே திரு. ராஜூ பாய் அவர்கள் நீங்கள் அனுமதித்தால் உங்கள் காருக்கு நான் மீத்தேன் வாயுவை நிரப்புகிறேன். 
பின்பு அதை நீங்கள் சோதித்து கொள்ளலாம் என்று கூறினார். 
அதற்கு நீதிபதி ஒப்புக் கொண்டு தனது காருக்கு 3 மாதங்கள் மீத்தேன் வாயுவை செலுத்தி நடத்தினார். 
அப்போது 1 கிலோ மீட்டருக்கு ரூ. 50/- காசு முதல் ரூ.60/-காசு வரை செலவானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 
இதற்கு முன் இவர் ரூ.400/-டீசலுக்கு செலவு செய்தார். 
மேலும் டீசல் போல இதில் புகையோ, இரைச்சலோ, சுற்றுப்புற சூழல் பாதிப்போ, இதில் இல்லை. 
எனவே நீதிபதி முழு திருப்தியடைந்து ராஜூ பாய் அவர்களின் வாதத்தை ஒப்புக்கொண்டார். 

ஒரு நாளைக்கு 10 கிலோ பசு சாணத்தால் எவ்வளவு மீத்தேன் தயாரிக்க முடியுமென்றும் அது 20 வருடத்திற்கு இந்த நாட்டிற்கு எவ்வளவு வருமானத்தை தருமென்றும் கணக்கிட்டு சமர்ப்பித்தார். 
இதன்படி நம் நாட்டிலுள்ள 17 கோடி பசுகளால் சுமார் 1,32,000/- கோடி பணம் ஈட்ட முடியும் என்று நிரூபித்தார். 
நமது பயணம் முழுவதும் மீத்தேன் வாயுவையே ஆதாரப்பட்டிருந்தால் நாம் அரபு நாடுகளிலிருந்து பெட்ரோல், டீசல் வாயுவை இறக்குமதி செய்ய தேவையில்லை. 

இதேபோல் வெளிநாட்டிற்கு நமது செல்வத்தை செலவு செய்ய தேவையில்லை. 
உலக அளவில் நம் ரூபாயின் மதிப்பு கூடும், இது பசுவின் மூலமே சாத்தியமாகும். 
இந்த வாதத்தை கேட்ட உச்சநீதிமன்றம் அதிர்ச்சியடைந்து திரு. ராஜூ பாய் சமர்ப்பித்த கணக்கில் அனைத்தையும் துல்லியமாக பரிசீலித்து அவரின் வாதத்தில் உள்ள உண்மையை அறிந்து கொண்டு பசு பாதுகாப்பின் மூலமாக நம் இந்திய நாட்டிற்கு பொருளாதார ரீதியான வளர்ச்சி கிடைக்குமென்று உறுதி செய்தது. 

இவ்வாறு உச்சநீதிமன்றம் தீர்மானித்தவுடன் பசு வதை செய்பவர்கள் சார்பாக பசு மாமிசம் சாப்பிடுவது இஸ்லாம் மதரீதியான உரிமை என்று வாதிட்டனர். 
இதற்கு பதிலளித்த திரு. ராஜூபாய் அவர்கள் அப்படியானால் எத்தனை இஸ்லாம் மன்னர்கள் இந்த மதரீதியான உரிமையை பயன்படுத்த சொன்னார்கள் என்று கேள்வி எழுப்பினார். 
மேலும் அவ்வாறு சொல்லக்கூடிய இஸ்லாம் நூல்கள் எவை என்பதை கூறும்படி கேள்வி எழுப்பி இந்த கேள்விகளை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டுமென்றும் கேட்டு கொண்டார். 

அப்பொழுது உச்சநீதிமன்றம் இந்த அம்சங்களை பரிசீலிப்பதற்காக ஒரு விசாரணை குழுவை நியமித்தனர். 
இந்த கமிட்டியானது அனைத்து அம்சங்களையும் மிகவும் துல்லியமாக பரிசீலித்து இஸ்லாம் மன்னர்கள் மற்றும் நாட்டை ஆண்ட இஸ்லாமியர்கள், இஸ்லாம் மத நூல்கள், பசு மாமிசத்தை சாப்பிடுவது பற்றி என்ன கூறுகிறது என்பது பற்றியும் இப்படி ஒரு உரிமை உள்ளதா, இல்லையா என்பதை பற்றியும் கண்டு பிடிக்கவும் இந்த கமிட்டிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த கமிட்டி வரலாற்று ரீதியான ஆவணங்களையும் மத நூல்களையும் பரிசீலித்து கொடுத்த முடிவுரையாவது: 
நாட்டை ஆண்ட இஸ்லாமிய மன்னர்கள் யாரும் பசு வதையை ஆதரிக்க வில்லை என்றும், 

ஒரு சில இஸ்லாமிய மன்னர்கள் பசு வதைக்கு எதிராக சட்டங்களை இயற்றினார்கள் என்றும் அவர்களில் முதன்மையானவர் பாபர் என்றும் அவர் தன்னுடைய பாபர் நாமாவில் பசு வதை தவறு என்றும் அத்தகைய குற்றத்தை இந்த நாட்டில் தான் இறந்த பிறகும் நடக்கக்கூடாது என்றும், 
தான் ஏற்படுத்திய பசு வதை தடுப்பு சட்டம் நடைபெறவேண்டும் என்றும் எழுதி  வைத்து, அவருடைய சந்ததி அனைவரும் இதனை நடைமுறைப் படுத்த வேண்டும் எனவும் கூறி  உள்ளார் மற்றும் மன்னர் ஹூமாயூனும் அதே சட்டத்தை நிலைநாட்டினார்கள். 

அதன் பிறகு வந்த ஹிந்து சம்பிரதாயங்களை கொடூரமான முறையில் அடக்கி உடைக்கி அனைத்து விட்ட ஹாவ்ரங்க சீப் அவர்கள் கூட பசு வதையை எதிர்த்து அவரது முன்னோர்கள் ஏற்படுத்திய சட்டத்தை வழி நடத்தினார். 

அதே போல் தென்னிந்தியாவை ஆண்ட திப்பு சுல்தான் அவர்களின் தந்தை ஹைதரலி அவர்கள் பசுவதை செய்வோரை கண்டால் அவர்கள் தலையை துண்டிக்கும் படி கூறியதுடன் அத்தகைய செயலில் ஈடுபட்ட பலரை இந்த தண்டனையின் மூலம் பலியிட்டார். 
இதன் பின்பு அவரது மகன் திப்பு சுல்தான் மன்னரான பின்பு இந்த குற்றத்தின் தண்டனையான தலை துண்டிப்பை மாற்றி கைகளை துண்டிக்கும் படி இயற்றினார். 

இவ்வாறு வரலாற்று ஆவணங்களை பரிசீலித்து விசாரணை கமிட்டி அளித்த அறிக்கை திரு. ராஜூ பாய் அவர்கள் வாதத்திற்க்கு வலு சேர்ப்பதாக அமைந்தது. 
அவர் தனது வாதத்தில் பசு மாமிசம் சாப்பிடுவது இஸ்லாம் மத உரிமை என பசு வதைக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதிடுபவர்கள் கூறுவது உண்மையென்றால் 
இஸ்லாம் மன்னர்களான இந்த நாட்டை ஆண்ட பாபர், ஹோமையுன், மற்றும் ஹவுரங்கசீப் அவர்கள் கூட பசு வதை தடுப்புச் சட்டங்களை ஏன் அமல்படுத்தினர் என்று கேள்வி யெழுப்பினார். 

இதனை தொடர்ந்து திரு. ராஜூ பாய் அவர்கள் தனது இறுதி வாதத்தை முன் வைத்து உச்சநீதிமன்றம் அனுமதியோடு புனிதகுரான், ஹதீத், மற்ற இஸ்லாமிய நூல்கள், அனைத்தும் பசு வதை பற்றி என்ன கூறியுள்ளன என்று பரிசீலிக்க வேண்டுமென கூறினார். 
எந்த இஸ்லாமிய நூல்களும் பசு வதையை ஆதரிக்கவில்லை என்றும், இன்னும் சொல்லப்போனால் ஹத்திதுகள் பசுக்களை காப்பாற்றினால் அவை உங்களை காப்பாற்றும் என்றும் கூறியுள்ளனர், என தெளிவு படுத்தினர். 

மஹத் அவர்கள் பசு என்பது ஒரு பரிதாபத்துக்குரிய பிராணி என்றும் அதன்மீது அனைவரும் பரிதாப உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும் வாதிட்டார். 

திரு. முஹம்மத் அவர்களுடைய புனித வசனங்கள் பசுவை வதை செய்தவர்களுக்கு நரகத்தில் கூட இடமில்லை என்று கூறியுள்ளார். 

இவற்றையெல்லாம் குறிப்பிட்ட திரு. ராஜூ பாய் அவர்கள் தனது வாதத்தை முடிக்கும் நோக்கில் 
புனித குரானும், மொஹமத் வசனங்களும், ஹத்தித்குறிப்புகளும், பசு வதையை எதிர்க்கும் போது, 
பசு வதை எவ்வாறு இஸ்லாம் மத உரிமையாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். 

இங்கு பசு வதையை ஆதரித்து அது இஸ்லாம் மத உரிமை என்று வாதிடுபவர்கள் தான் குறிப்பிட்ட புனித நூல்கள் எதிலும் அவ்வாறு இல்லாத நிலையில் இவர்கள் எவ்வாறு கூறமுடியும் என்றும், 
இவர்கள் கூறுவதற்கு ஆதரவாக மெக்கா, மற்றும் மதீனாக்களில் வேறு ஏதேனும் நூல்களில் அவ்வாறு பசு வதை செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளதா என்று காட்டும் படி கேட்டார். 
அவ்வாறு எந்த நூலிலும் இல்லையென்றும், இஸ்லாம் மத பெரியவர்களுக்கு ஏன் தெரியவில்லையென்றும் எனக்கு புரியவில்லையென்றும், வாதத்தை முடித்துக் கொண்டார். 

பசு வதைக்கு ஆதரவாக பேசிய வழக்கறிஞர்களிடம் நீதிமன்ற அமர்வு நீங்கள் வெறும் வாதங்கள் செய்தால் போதாது உங்கள் இஸ்லாம் மத நூல்களில் ஏதாவது குறிப்பிடப்பட்டுள்ளதா என்று கூறும்படி கேட்க அவர்களால் எந்த நூல் குறிப்புகளையும் தர இயலவில்லை. 
உச்சநீதிமன்றத்தின் அரசியல் அமர்வு எந்த வழக்கின் மீது 26-10-2005-ல் தீர்ப்பினை வெளியிட்டது. 
இந்த தீர்ப்பானது உச்சநீதிமன்றம் வெப்சைட்டில் காணலாம். 
இந்த 66 பக்கங்கள் கொண்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பாக கூறப்படுகிறது. 

வாழ்க வையகம் !
வாழ்க வளமுடன்!! 
வந்தே மாதரம்!!! 
(படித்ததில் பிடித்தது) 
🙏🏻🌷🌹🌸🔱🌸

22 ஆக., 2022

நூல்மயம்

இன்றைய சிந்தனைக்கு

இன்றைய குறள்

அபூர்வமான படம்

மலரும் நினைவுகள்

அருள்வாக்கு

21 ஆக., 2022

கவிதை நேரம்

சுற்றுச்சூழல்

நூல்மயம்

இன்றைய குறள்

இன்றைய சிந்தனைக்கு

உங்கள் கவனத்திற்கு

இன்று ஒரு தகவல்

அபூர்வமான படம்

   அன்றைய ரயில் டிக்கெட்

உலக மூத்த குடிமக்கள் தினம்

அப்ரோச் அறக்கட்டளை இலவச மருத்துவ மைய ஆண்டுவிழா