29 ஜூன், 2023

இன்று சில தகவல்கள்

சிரிப்புத்தான் வருகுதையா

நலக்குறிப்புகள்

இன்றைய புத்தகம்

ஹோமியோபதி

இன்றைய சிந்தனைக்கு

தேசிய கைகுலுக்கும் தினம்

வாழ்த்துக்கள்

இன்றைய குறள்

கோபுர தரிசனம்

அருள்வாக்கு

27 ஜூன், 2023

நூல் நயம்

"ஓ ! மாம்பழமே "!.
அமரர் கல்கி. சாரதா பதிப்பகம் .
முதல் பதிப்பு 2000 விலை ரூபாய் 25 .
மொத்த பக்கங்கள் 120.

# இது ஒரு கட்டுரை புத்தகம் .
அமரர் கல்கி குறித்து அறிமுகமே தேவையில்லை .அதிலும் மணிரத்தினம் அவர்கள் பொன்னியின் செல்வன் திரைப்படம் எடுத்து விட்ட பிறகு உலகத்தமிழ் மக்கள் அனைவராலும் போற்றப்படுகிற ஒருவராக அமரர் கல்கி அவர்கள்விளங்குகிறார் .
       செத்தும் கொடுத்தான் சீதைக்காதி என்று சொல்வார்கள் .அதாவது ஒரு நன்கொடையாளர் .இந்த யுகத்தில் இந்த நூற்றாண்டில் அவதரித்த சீதைக்காதி அவர்கள் எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டே இருந்தார் .கை சிவந்து போன போதும் கொடுத்துக் கொண்டே இருந்தார் .அப்படிப்பட்ட அவர் தனது இறப்புக்குப் பிறகு யாரேனும் வந்து கேட்டுவிட்டால் என்ன செய்வது என்று கைகளில் மோதிரம் கொண்டு வெளியே நீட்டிக்கொண்டு புதைக்கச் சொன்னதாக சொல்வார்கள். செத்தும் கொடுத்தான் சீதைக்காதி என்று சொல்வார்கள் .
         அது போலவே எழுதிய போதும் எழுதுகின்ற காலங்களிலும் நிறைய சம்பாதித்தவர் புகழ் பொருளை .அவ்வாறு பொருளை சம்பாதிக்கவில்லை என்றாலும் பெரும் புகழ் சம்பாதித்தவர் அமர கல்கி அவர்கள் .அவரது மறைவுக்குப் பிறகு அவர் 100 கோடி ரூபாய் சம்பாதிக்கின்ற ஒரு சக்தி வாய்ந்த படைப்பினை பொன்னியின் செல்வனை படைத்துவிட்டு சென்றது எனக்கு சீதைக்காதியை தான் நினைவுக்கு கொண்டு வருகிறது.

       இது ஒரு கட்டுரை புத்தகம் .பொதுவாக கட்டுரை என்று சொன்னால் ஆய்வு செய்து நிஜமான சத்தியமான உண்மைகளை வைத்து எழுதப்பட வேண்டும் .ஆனால் கல்கி அவர்கள் ஆசியம் humour கலந்து கட்டுரைகள் எழுதி இருக்கிறார் .மொத்தம் பத்து கட்டுரைகள் கீழ்கண்ட தலைப்புகளில்.

1)ஓ! மாம்பழமே
2)நோயற்ற வாழ்வு
3)பகல் தூக்கம்
4)அடிமையா? எஜமானா?
5)ஓர் அனுபவம்
6)ஸோஷலிஸம் வேண்டாம்!
7)காதல் எங்கே?
8)பெரிய மனிதர்!
9)அமர வாழ்வு
10).பேச்சு பலவிதம்.

    எல்லாக் கட்டுரைகளும் படிக்க படிக்க சுவை தருவதாக இனிப்பதாக பொழுதுபோக்காக இருக்கிறது .
முதல் கட்டுரை மட்டும் பார்க்கலாம் .

       குடியாத்தத்தில் இருந்த பொழுது இந்த கோடைகால ஆரம்பத்தில் மாம்பழம் சீசன் ஆரம்பித்து விடும் .எங்கள் தெருவுக்கு அடுத்த தெருவில் தான் பஜார் இருக்கிறது .அங்கு மாம்பழ மண்டிகளே பத்துக்கு மேற்பட்டு இருக்கும் .அந்த காலத்தில் கோடைகளில் கிழவிகள் மாம்பழங்களை கூடைகளில் கொண்டு வருவார்கள் .ஐந்தாறு கிழவிகள் என் வீட்டு வாசலில் வந்து அம்மாவை தொந்தரவு செய்து 50 ரூபாய்க்கு 100 ரூபாய்க்கும் கொடுத்து விட்டு செல்வார்கள் தினசரி .இன்றைய மதிப்பில் 500 ரூபாய்க்கும் அதிகமாகவும் இருக்கும் .
       எனது அம்மா ஒரு மாம்பழ பிரியை.அவரின் ரத்தமான எனக்கும் மாம்பழம் என்றால் உயிர் .எங்கள் ஊர் பக்கம் மல்கோபா மாம்பழம் மிகவும் சுவைப்போனது ,பேர் போனது ,விலையும் அதிகமாக இருக்கும் .எங்கள் நிலத்தில் மூன்று மாம்பழ மரங்கள் ,நீலம் ,பெங்களூரா 
செந்தூரா இருக்கும்.

         மாம்பழம் என்றால் மொத்தத்தில் இனிமை என்பதுதான் என்றாலும் நுட்பமான நாக்குகளுக்கும் மூக்குகளுக்கும் அவைகளில் உள்ள வேறுபாடுகள் தெரிந்து விடுகின்றன.
         இன்னும் ஒரே இனமுள்ள மாமரங்களிலும் கூட மரத்துக்கு மரம் ருசியில் மாறுபாடு உண்டு. 
         பனைக்கு பனை பத நீர் ருசி மாறுபடும் அது போல.

         இந்த மாம்பழம் என்று சொன்னவுடனே  எனக்கு ரசிகமணி  டி கே சி அவர்கள் நினைவுதான் வருகிறது .அவர் வீட்டில் எப்பொழுதும் இலக்கியப் பிரியர்கள் இருப்பார்கள் .உணவு பந்தி பரிமாறபட்டு கொண்டே இருக்கும். ஒவ்வொரு இலைகளுக்கும் பந்தி பரிமாறப்படும் .
        அவரது இலையில் மட்டும் நெல்லிக்காய் அளவு ஓட்ஸ் களியும், எடுத்த கெட்டி மோரும் தொட்டுக்கொள்ள ஒரு பல் நெல்லிக்காய் ஊறுகாய் மட்டுமே காரணம் அவருக்கு தித்திப்பு நோய் பத்திய உணவு அது தான்.

      மற்ற இலைகளில் தோல் சீவிய மாம்பழத் தூண்டுகள் தேன் மழையாக விழுகின்றன .பார்த்துக் கொண்டிருந்த ரசிகமணி தனக்கும் ஒன்று கேட்கிறார் .ஒரு மாம்பழத் தூண்டில் மிளகு அளவு நுள்ளி எடுத்து இலையின் ஓரத்தில் வைக்கப்படுகிறது. 
         அதை இழுத்து இலையில் தேய்த்து நாக்கில் வைத்து ருசி பார்த்து இது இன்ன மரத்தின் பழந்தானே என்று கேட்கிறார் ரசிக மணி அவர்கள். இந்த நிகழ்ச்சி என்னை ஆச்சரியப்பட வைத்த ஒன்று.

    என்னால் மல்கோபா மாம்பழத்திற்கும் மற்ற மாம்பழத்திற்கும் உள்ள சுவை வித்தியாசம் மட்டுமே சொல்ல முடியும் .இருக்கின்ற மற்ற வகை மாம்பழங்களுக்கு இடையேயான சுவை வித்தியாசம் சொல்ல முடியாது .காரணம் எனது நாக்கு ருசி மூக்கு ருசி அவ்வளவுதான்.

      கலிபோர்னியா அருகில் நாபா Napa என்ற நகரில் மகளை பார்க்க சென்றிருந்த பொழுது அங்கு ஒயின்  தொழிற்சாலைக்குச் சென்றேன் .அப்பொழுது எனக்கு மாதிரி கொடுத்தார்கள் 10 மில்லி என்கிற அளவில் .
          தயாரித்து ஒரு வருடமானது ,இரண்டு வருடமானது ,ஐந்து வருடமானது ,பத்து வருடமானது, 15 வருடமானது ,20 வருடமானது, 25 வருடமானது என்கிற அளவில் கொடுத்து சுவைக்க சொன்னார்கள் .
           அடுத்த அறைக்கு சென்று அங்கு இரண்டு மாதிரி வைக்கப்பட்டிருந்தது .அதை சுவைத்து அது எந்த வருடம் தயாரிக்கப்பட்டது என்று சொல்ல வேண்டும் .எல்லாவற்றையும் சுவைத்துவிட்டு போட்டியில் தோற்று விட்டு வந்து விட்டேன் .

      10 மொந்தைகளில் 10 வகை கள் ஊற்றி கொடுத்தாலும் எனது தாத்தாவால் இந்த நிலத்தில் இந்த பனைமரத்துக்கள் என்று சொல்லிவிடக் கூடிய தன்மை அவரது மூக்குக்கும் நாக்குக்கும் இருந்ததாக எனது தந்தை சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

        வைன் என்பது திராட்சைச் சாறை புளிக்க வைத்து பெறப்படும் ஒரு மதுசார பானமாகும். இவற்றில் இருக்கும் சில வேதிப்பொருட்களால் இவை சர்க்கரை, நொதியம், அமிலம் போன்றவற்றின் உதவியும் இன்றி தானாகவே நொதித்து புளித்து விடுகின்றன. 
          கி.மு. 5000 – 6000 ஆண்டுகளிலேயே வைன் தயாரித்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.

           வைன் என்ற பெயர் திராட்சை என்ற பொருள் தரும் இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.

        2012 ஆம் ஆண்டில் இத்தாலி நாடே மிகவும் அதிகளவிலான வைனை உற்பத்தி செய்யும் நாடுகளில் முதலிடம் பெற்றது. அதன் பின் முறையே பிரான்சு, ஸ்பெயின், அமெரிக்கா மற்றும் ஆர்ஜென்டீனா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப்பெற்றன.

        திராட்சைப்பழம் அல்லது கொடிமுந்திரிப் பழம் என்பது இலையுதிர்க்கும் பல்லாண்டுக் கொடி வகையின் பழம் ஆகும். திராட்சையைத் தமிழில் கொடிமுந்திரி என்றும் அழைப்பர். இது விட்டிஸ் பேரினத்தைச் சேர்ந்தது. 
          திராட்சையில் பலவகைகள் இருப்பினும், பொதுவாகத் திராட்சையில் பெருமளவு நீரும் மாவுப் பொருளும், உப்புநீர் மற்றும் கொழுப்புச் சத்துகளும் உண்டு.

          நமது சர்க்கரை ஆலையில் இருக்கக்கூடிய பெரிய பெரிய பேரல் போல அந்த காலத்து ரயில் நிலையங்கள் அருகில் இருந்த பர்மா ஷெல் பேரால் போல ஒயின் தயாரிக்கப்பட்டு சேமித்து வைக்கப்படுகிறது .

       இதில் ஒன்றை அவசியம் குறிப்பிட வேண்டும் .அடைக்கப்பட்ட பாட்டில்களில் கார்க் ஒன்று வைப்பார்கள் .அந்த கார்க்கு தான் முக்கியமானது. அந்த காக்கை பொருத்துதான் ஒயின் சுவை கூடுவதும் குறைவதும் .வேறு எதன் கொண்டு மூடினாலும் ஒயின்ஸ் சுவைக்காது  என்று சொல்வார்கள் .ஒயின் சுவை காக்கப்பட வேண்டுமானால் ஒயின் சுவை கூட்டப்பட வேண்டுமானால் கார்க்கு கொண்டு மூடி தயாரிக்க வேண்டும் அடைக்க வேண்டும் என்று சொல்வார்கள்.

Cork தக்கை (அடைப்பான்)
தக்கை என்பது புட்டிகளுக்கு அடைப்பானாகப் பயன்படுத்தும் ஒரு மரப்பொருள் ஆகும். இது ஆங்கிலத்தில் கார்க் (Cork)என அழைக்கப்படுகிறது. ஒருவகை ஓக் மரத்தின் பட்டையிலிருந்து இந்த தக்கை தயாரிக்கப்படுகிறது. இம்மரங்கள் ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகிய நாடுகளில் அதிகமாகக் காணப்படுகின்றன.

தக்கை மரம்
வைன் குடுவையை அடைக்கப் பயன்படுத்தும் தக்கை

இம்மரம் 20 ஆண்டுகள் வளர்ந்த பிறகே இதில் தக்கை செய்யக்கூடிய அளவு பட்டை உண்டாகும். இந்தப் பட்டையைக் கைக்கோடாரி கொண்டு பெயர்த்து எடுப்பார்கள். இவ்வாறு எடுத்த பிறகு சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னரே மீண்டும் பட்டை எடுக்க முடியும். இம்மரங்கள் சுமார் 300 ஆண்டுகள் வரை வாழும். மரத்திலிருந்து எடுத்த பட்டைகளை நீரில் ஊற வைத்துக் கொதிக்க வைப்பார்கள். இதனால் பட்டை மென்மையாகும். தக்கையை அரைத்துத் தூளாக்கி, வேறு சில பொருள்களுடன் சேர்த்து பல வழிகளில் பயன்படுத்துகின்றனர்.

          மாம்பழம் தலைப்பு பார்த்தவுடன் எனது நினைவுகள் எங்கெங்கோ சிதறி பறந்து சென்று விட்டது. சரி கல்கி அவர்கள் எழுதிய மாம்பழம் குறித்து பார்ப்போம்.

அமரர் கல்கி அவர்களின் கற்பனையை மாம்பழத்தை படிக்கும் போது நிஜமாகவே நடந்து விட்டது போன்ற ஒரு தோற்றம் வாயைத் தோற்றம் ஏற்படுத்தத்தான் செய்கிறது.

லண்டன், மே 4
"நேற்று மாலை ஸவுதாம்டன் துறைமுகம் வந்து சேர்ந்த 'விக்டோரியா' என்னும் கப்பலில் இந்தியா தேசத்து மாம்பழங்கள் வந்து இறங்கின.'

அயல்நாட்டுத் தந்தி

மேற்படி செய்தி இந்திய தினசரிப் பத்திரிகைகளில் சின்ன எழுத்துத் தலைப்புடன் மூலையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதனுடைய பின் விளைவுகள் என்னவென்பத்தைக் கேளுங்கள்!

       மறுநாள் சாயங்காலம் வண்டனிலுள்ள இந்திய மந்திரி காரியாலயத்தில் இந்தியா மந்திரிக்கும் அவருடைய சகாக்ககளுக்கும் இந்தியாவின் ஹைகமிஷனரால் ஒரு விருந்து நடத்தப் பெற்றது. முதன் மந்திரி மிஸ்டர் பால்ட்வின் உள்படப் பிரமுகர்கள் அநேகர் விஜயம் செய்திருந்தார்கள்.

        அடுத்த நாள் காலையில் வெளியான லார்ட்ராதர் மியரின் 'டெய்லி மெயில்' பத்திரிகையில் கொட்டை எழுத்தில்  ''நேற்று இரவு இந்தியா மந்திரி காரியாலயத்தில் ஒரு விருந்து நடந்தது. அந்த விருந்தைப் பற்றிய ஒரு வதந்தி பிரிட்டிஷ் பொது மக்களின் மனத்தைக் கலக்கி வருகிறது. அந்த வதந்தியைப் பற்றிய உண்மை என்ன? மிஸ்டர் பால்ட்வின் பதில் சொல்வரா?"

அன்று சாயங்காலம் வெளியான லார்ட் பீவர் புரூக்கின் 'ஈவினிங் ஸ்டாண்டர்டு' பத்திரிகையில், மேற்படி விருந்தில்
ஒரு புதிய வகைப் பழம் பரிமாறப்பட்டதென்றும், அந்தப்
பழம் இந்தியாவிலிருந்து வந்ததென்று நம்புவதற்குப் போதிய ஆதாரங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன என்றும் கூடிய சீக்கிரம் இதைப் பற்றிய முழு உண்மையையும் வெளிப்படுத்தியே தீருவோம் என்றும் பிரசுரம் செய்யப்பட்டது.

       "பிரிட்டிஷ் ராஜ்யத்தின் பெருமைக்கு அழியாத அவமானம் உண்டாகிவிட்டது. கேவலம், இந்தியாவிலிருந்து வந்த மாம்பழங்களைப் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மந்திரிகள் சாப்பிடும் படியான நிலைமைக்கு நாம் தாழ்ந்துவிட்டோம். என்ன அவமானம்! இந்தியர்களுக்கு நம்மிடமுள்ள மதிப்பில் அரைப்பங்கு போயிருக்குமென்பது திண்ணம். முதுகெலும்பில்லாத இந்த மந்திரிசபையை இன்னும் எத்தனை நாளைக்குப் பிரிட்டிஷ் பொது ஜனங்கள் அதிகாரத்தில் வைத்திருக்கப் போகிறார்கள்?" என்பது சர்ச்சில் கட்டுரையின் சாராம்சம்.

         "மாரினிங் போஸ்ட்' பத்திரிகையில் அடுத்த நாள் வெளியான செய்தி எல்லாரையும் தூக்கிவாரிப் போட்டு விட்டது. மேற்படி விருந்தில் மாம்பழம் என்று வைக்கப் பட்ட ஒவ்வொன்றும் உண்மையில் ஒரு வெடிகுண்டு என்பதாகவும், விருந்தினரில் ஒருவர் ஒரு மாம்பழத்தை விழுங்கி அவருடைய வயிற்றில் அது வெடித்த பின்னர் உண்மை தெரிந்து மற்றவர்கள் தப்பித்துக் கொண்டார்களென்றும், விஷயம் இப்போது ஸ்காட்லாண்டு யார்டு துப்பறியும் நிபுணர்கள் கையில் இருக்கிறதென்றும் அந்த விவரம் சொல்லிற்று.

        "இதெல்லாம் சுத்தக் கட்டுக்கதை" என்பதாக ஓர் உத்தியோக முறை அறிக்கை மறுதளித்தது.

        இதுகுறித்து  பெர்னாட்ஷா  அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு அவர் ,"செத்துப் போங்கள் " என்று சொல்லிவிட்டார்.

        இங்கிலாந்தில் நிலைமை இவ்வாறு இருக்க இந்தியாவில் இது சம்பந்தமாக நிகழ்ந்த சம்பவங்களை ஆசிரியர் சொல்லுகின்ற விதமே நம்மை எங்கு கொண்டு போய் சேர்க்கிறது.
இங்கிலாந்தில் நடந்த விஷயங்கள் அனைத்தும் தந்தி பேப்பரில் வந்து பிரசுரம் ஆனது.
கலைமகள் பத்திரிக்கையில் மாம்பழக் கவிராயரை பற்றி ஒரு கட்டுரையும் கலாநிலையும் பத்திரிகையில் முக்கனியில் மாங்கனி சேர்ந்ததா என்பதை பற்றி ஒரு ஆராய்ச்சியும் வெளியாயின.
மாம்பழங்களுக்கு இந்த பாடு படுகிறார்கள் ருசியை பார்த்து விட்டால் என்னதான் சொல்வார்களோ என்று விகடன் ஆஸ்யத்துடன் எழுதினான்.

       அரசியல்வாதிகள் தலைக்கு ஒரு பக்கம் கண்டனம் தெரிவித்து அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார்கள். டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் ," எல்லா விஷயங்களிலும் போல இதிலும் ஸ்திரீகள் அலட்சியம் செய்யப்படுவதை கண்டித்தார்.
 
        "மகாத்மா ஏழு நாள் உபவாச விரதம் தொடங்கியிருக்கிறார்" என்னும் பயங்கரமான செய்தி தேசமெங்கும் பரவியது. விசாரித்ததில், மகாத்மா சேலம் ஒட்டு மாம்பழம் ஒன்றின் ரஸத்தைச் சாப்பிட்டுவிட்டு அதன் ருசியைப் பற்றி வெகுநேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும், இவ்வாறு நாவின் ருசிக்கு இடங் கொடுத்துவிட்டது தவறு என்று பின்னால் உணர்ந்து பிராயச்சித்த உபவாசம் தொடங்கியிருப்பதாகவும் தெரியவந்தன.

        "உலகப் பெரியாரையே மயக்கி உபவாசம் இருக்கச் செய்த ஒப்பற்ற ஒட்டுமாம்பழம்" என்று எங்கெங்கும் விளம்பரங்கள் காணப்பட்டன.

நிற்க. சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரின் வேண்டுகோளின்படி தேசத்தின் நானாபாகங்களிலிருந்தும் மகாத் மாவுக்குத் தந்திகள் பறந்தன.

''மாம்பழம் சாப்பிட நாங்கள் இருக்கிறோம். கவலைப் பட வேண்டாம். உபவாசத்தை நிறுத்தவும்" என்று இந்திய மக்கள் ஒரு முகமாய் மகாத்மாவை வேண்டி கேட்டுக் கொண்டார்கள் இப்படி வேண்டி கேட்டுக் கொண்டவர்களில் நானும் ஒருவன் என்பதால் இதோ இந்த மாம்பழத்தை சாப்பிட்டு தொலைகிறேன் என்று அமரர் கல்கி அவர்கள் மாம்பழத்தை சாப்பிட்டுக் கொண்டே இந்த கட்டுரையை முடிக்கிறார்.

      கற்பனை தான் என்றாலும் நிஜமாகவே நடந்தது போல் எழுதுகின்ற ஆற்றல் கல்கி அவர்களுக்கு இருந்தது என்பதை இந்த கட்டுரையின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். இது போலவே அனைத்து கட்டுரைகளும் எழுதப்பட்டிருக்கிறது.


நலக்குறிப்புகள்

சிவனருட் செல்வர்

இன்றைய சிந்தனைக்கு

இன்றைய குறள்

கோபுர தரிசனம்

அருள்வாக்கு

25 ஜூன், 2023

நூல் நயம்

"பாரத மாதாவின் கடிதங்கள்:".
 வெ. சாமிநாத சர்மா. பூங்கொடி பதிப்பகம் முதல் பதிப்பு 2001 மொத்த பக்கங்கள் 112. விலை ரூபாய் 25.

ஆசிரியர் குறிப்பு:
     வெ. சாமிநாத சர்மா தமிழறிஞர், அறிவியல் தமிழின் முன்னோடி, பன்மொழி அறிஞர், இதழாசிரியர் எனப் பல ஆளுமை கொண்டவர். "பிளாட்டோவின் அரசியல்", "சமுதாய ஒப்பந்தம்", கார்ல் மார்க்ஸ், "புதிய சீனா", ”பிரபஞ்ச தத்துவம்” என்று அரசறிவியல் தலைப்புகளில் விரிவாக எழுதினார்.

       திருவண்ணாமலை , செய்யாறு வட்டம் வெங்களத்தூர் என்னும் சிற்றூரில் 1895 இல் பிறந்த இவர் தம் பள்ளிப் படிப்பை செங்கல்பட்டு நேடிவ் உயர்நிலைப் பள்ளியில் படித்து, பல மொழிகள் கற்றுப் புலமை அடைந்தார்.

         சர்மா அவர்கள் துவக்கத்தில் தேசபக்தன் இதழிலும், பின்னர்
 திரு. வி. க.வின் நவசக்தி இதழிலும் 
ஸவராஜ்யாவிலும் பணியாற்றினார். 
           பின்னர் பர்மாவுக்கு சென்று அங்கு பத்தாண்டுகள் இருந்தார். அங்கு  ஜோதி என்ற இதழைத் துவக்கி நடத்திவந்தார். இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியர்கள் பர்மாமீது படையெடுத்ததால் சென்னை வந்து சேர்ந்தார். இவர் பர்மாவில் இருந்தபோதே பல நூல்களை எழுதினார்.. இவரது நூல்களுக்காகவே சொக்கலிங்கம் செட்டியார் என்பவர் பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம் என்ற பதிப்பகத்தை துவக்கினர்.

          இவரைப் பற்றி கண்ணதாசன் பின்வருமாறு கூறுகிறார்.

“ உலகத்து அறிவையெல்லாம் ஒன்று   
         திரட்டி தமிழனின் மூளையில் ஏற்றி, உன்னதமான தமிழர்களை உற்பத்தி செய்ய இதுவரை யாராவது முயன்று இருக்கிறார்களா? எனக்கு அன்றும் இன்றும் ஒரே பெயர்தான் ஞாபகத்தில் நிற்கிறது. அதுதான் திரு. வெ. சாமிநாத சர்மா. நான் பெற்ற பொது அறிவியல் இருபது சதவீதம் திரு. சாமிநாத சர்மாவின் நூல்கள் தந்தவையே. ”(விக்கிபீடியாவிலிருந்து திரட்டியவை)

###₹₹

        காலத் தேவைக்கு ஏற்ப தமிழை வளர்த்த எழுத்துலக யோகிகளுள் ஒருவர் அமரர் வெ. சாமிநாத சர்மா .
           அவருடைய இலக்கிய ஆளுமையின் பன்முகப் பரிமாணங்களுள் ஒன்று, கடித இலக்கியத் துறை.
         1958-இல் நாகர்கோயிலில் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் "தமிழ் எழுத்தாளர்கள் கடித இலக்கியத் துறையில் கவனஞ் செலுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்" என்று தமது தலைமையுரையில் குறிப்பிட்டார், சாமிநாத சர்மா.

        'கடித இலக்கியம்' என்று ஒன்று உண்டா? என்று கேட்கப்பெற்ற ஒருகாலமும் இருந்துள்ளது. நவீன தமிழ் இலக்கியத் துறையை வளர்த்த முன்னோடிகளுள் வ.வே.சு. ஐயர், மறைமலையடிகளுடன். வெ. சாமிநாத சர்மாவும் இணைந்தார்.

         சர்மா அன்றைய பர்மா - ரங்கூனில் வாழ்ந்த காலத்தில் 'ஜோதி' எனும் மாத இதழில் ஆசிரியராகவிருந்தார். 
        அரசியல், இலக்கியம், கலை, நவீன படைப்பிலக்கியம். பொருளாதாரம், விஞ்ஞானம் எனப் பலவாறாக 'ஜோதி'யின் ஒளிக்கற்றைகள் விரிந்தன. இவற்றுள் ஒன்றாகக் கடித இலக்கியமும் தோன்றியது.
           'வ.பார்த்தசாரதி' எனும் புனைபெயரில் சர்மாஜி. 'ஜோதி'யில் 'மகனே உனக்கு!' எனும் தலைப்பில் கடிதங்கள் எழுதி வந்தார். 
         இந்தக் கடிதங்கள், வாசகர்களுக்கு தன்னம்பிக்கையுடன் வாழ்வியல் பிரச்சனையை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை விளங்க வைத்தன. '

         'மகனே உனக்கு' என எழுதப்பெற்றக் கடிதங்கள் சென்னை 1956-இல் அதே தலைப்பில் நூலாக பிரபஞ்ச ஜோதி பிரசுராயலம் வெளியீடாக வந்தது.

         புகழ்பூத்த காந்தியவாதியான ஏ.கே. செட்டியாரின் 'குமரி மலர்' எனும் மாத இதழில் ஆசிரியராகப் பணியாற்றிய போது சர்மாஜி,'வ. பார்த்தசாரதி' என்ற புனை பெயரிலேயே "பாரதமாதாவின் கடிதங்கள்'' எனும் தலைப்பில் குமரி மலரி'ல் எழுதினார். மொத்த 12 கடிதங்கள் வெளிவந்தன.

      'பாரத மாதாவின் கடிதங்கள்' சர்மாஜியின் பிற கடித இலக்கிய நூல்களான 'அவள் பிரிவு' (1957), 'பிளேட்டோவின் கடிதங்கள்' - 1976, 'வரலாறு கண்ட கடிதங்கள்' - 1979 - போன்று நூல் வடிவம் பெறவில்லை. 

            இந்த நூலில் "சிறகு படைத்தத் தூதர்களாக" கடிதங்களைக் குறிப்பிட்டு. ''ஒருவர் எழுதும் கடிதத்தில்தான் அவருடைய ஆத்மாவை அசல் வடித்தில் காண முடியும்" எனும் சீரிய கருத்து குறிப்பிடப்பட்டுள்ளது.

       கடித இலக்கியத் துறையில் 'வீரவிளக்கு' வ.வே.சு.ஐயரின் பங்களிப்பையும் சாமிநாத சர்மா சுட்டிக்காட்டியுள்ளார். "தமிழ்" தமிழின் "மறுமலர்ச்சி" குறித்து வ.வே.சு.ஐயர் எழுதிய ஆய்வு நலம் செறிந்த கட்டுரைகள், தமிழியலில் குறிப்பிடத்தக்கன. இவ்வாறே அவர், பாரதியார் ஆசிரியராகவிருந்த 'இந்தியா' (புதுச்சேரி) போன்ற இதழ்களிலும், தமது "பாலபாரதி" இதழிலும் எழுதிய கடிதங்கள் தமிழ் கடித இலக்கியத் துறைக்கு அருங்கொடையாகும்."

#####

         இனி இந்த புத்தகம் குறித்து பார்ப்போம் :
      இந்த புத்தகமும் கீழ்க்கண்ட தலைப்புகளில் அடங்கிய கடிதங்கள் வரையப்பட்டுள்ளது.

1)தேச சேவை
2)உன்னை நீ அறி
3)தேச பக்தி
4)முயற்சியும் பயிற்சியும
5)ஸ்தாபனத்தின் அவசியம்
6)பிரச்சாரம்
7)பொதுக்கூட்டம்
8)பிரசங்கம்
9)கட்சிக் கட்டுப்பாடு
10)தலைவனுக்குரிய தன்மைகள்
11.தனிவாழ்வும் பொது வாழ்வும்
12.பொது ஜனங்கள்.

#####
         இளைஞர்களுக்கு சிறுவர்களுக்கு அன்றைய பாரத மக்களுக்கு அறிவுரை வழங்கும் பொருட்டு பல்வேறு தலைப்புகளில் சாமிநாத சர்மா அவர்கள் எழுதிய கடிதங்கள் தான் இவை .இது எந்த காலத்திற்கும் பொருந்தும் .சில விஷயங்கள் அன்றைய தினத்தில் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவின் இளைஞர்களுக்கு எழுதப்பட்ட சில கருத்துக்கள் தவிர மற்றவை அனைத்தும் எல்லோருக்கும் எக்காலத்துக்கும் பொருந்தும் அளவில் கடிதம் எழுதப்பட்டு இருக்கிறது .அந்த கடித இலக்கியத்தை மிகவும் ஆர்வமாக பயன்படுத்தி எல்லோரும் அதை செயலூக்கம் செய்ய
வேண்டும் என்கிற எண்ணத்தை பரப்பியவர் சர்மா அவர்கள்.

1) தேச சேவை.:
       மிக உயர்ந்த பதவியில் இருந்தவர்களும் வேலை வெட்டியே இல்லாதவர்களும் வீட்டை மறந்து நாட்டை நினைந்து தேச சேவை செய்ய வேண்டும் என்று பாரத மாதா அழைப்பு விடுப்பதாக ஆசிரியர் கடிதம் எழுதியிருக்கிறார்.
இந்த கடிதத்தில் ஆசிரியர் பதிந்துள்ள சில முக்கிய கருத்துக்கள் கீழ்க்கண்டவாறு.

      முதலாவது நீ ஓர் அடிமையென்பதை உணரவேண்டும். அந்நிய ஆதிக்கத்திற்கு அடிமையாயிருப்பது ஒருபுறமிருக்கட்டும்; உனக்கே நீ அடிமையாயிருக்கிறாய். இப்படி நான் சொல்வது, இந்தக் காலத்து இளைஞனாகிய உனக்கு ஒரு புதிராயிருக்கலாம்; நான் ஏதோ தத்துவம் பேசுகிறேன், வேதாந்தம் பேசுகிறேன் என்று என்னைப் பார்த்து அலட்சியச் சிரிப்பு சிரிக்கலாம்; அல்லது என்னைப் பரிகாசம் செய்யலாம். நீ என்னைப் பார்த்துச் சிரிப்பதனால் நான் குறைந்து விடமாட்டேன். நான் காலங் கடந்தவள். சரித்திர அறிஞர்கள் என்னுடைய வயதை நிர்ணயிக்க முயன்று தோல்விய டைந்து போயிருக்கிறார்கள். உன்னைப்போல் யுகக் கணக்கிலே வந்து கொண்டிருக்கிற கோடிக்கணக்கான இளைஞர்களுடைய அசட்டையும் பரிகாசமும் என் முகத்திலே ஒரு சுருக்கத்தையும் உண்டுபண்ணவில்லை; அப்படி உண்டு பண்ணவும் பண்ணாது. நோயினால் அவதிப்படுகிற ஒருவன், அந்த நோய் தாங்கமாட்டாமல், 'தாயே, என்னை ஏன் பெற்றாய்?' என்று தாயை நோகிறான்; 'கடவுளே, என்னை ஏன் படைத்தாய்?' என்று கடவுளை நோகிறான். இதற்காக அவனைத் தாயோ கடவுளோ வெறுப்பதில்லை; அவன் மீது வருத்தங் காட்டுவதுமில்லை. 

        பாரசீக ஏகாதிபத்தியம், கிரேக்க ஏகாதிபத்தியம், ரோம ஏகாதிபத்தியம் ஆகிய இவைகளெல்லாம் தங்களுக்கு ஆட்பட்டிருந்த ஜாதியினருடைய வேற்றுமைகளில் தான் வாழ்ந்தன; அந்த ஜாதியினர்களை வேற்றுமைப்
படுத்தித்தான் வாழ்ந்தன. ஆனால் வேற்றுமைகளின் மீது வளர்ந்த, வாழ்ந்த ஏகாதிபத்தியங்கள் ஒன்றுகூட நீடித்து நிலைக்கவில்லை; நல்லவிதமாக மறையவுமில்லை.

       "ஆதலின் மகனே! 
      முதலில் உன்னை நீ அறி. பிறகு எனது உண்மையான நிலை உனக்குப் புலப்படும். என்னுடைய சேவைக்காக உன்னைத் தகுதிப்படுத்திக் கொள்வாய். அப்படித் தகுதிப்படுத்திக் கொள்வதிலேதான் உன்னுடைய எதிர்காலம் இருக்கிறது. நீ வாழ்க!"என்று பாரத மாதாவின் முதல் கடிதம் முடிகிறது.

2). உன்னை நீ அறி:
இந்தக் கடிதத்தில் கீழ்க்கண்டவாறு அறிவுரை வழங்கப்படுகிறது.

     "   உலகத்திற்காவது, இவ்வளவு சதுர மைல் விஸ்தீரண முடையது, இவ்வளவு டன் நிறையுள்ளது ;அப்படியே சமுத் திரத்தின் ஆழம் இவ்வளவுதான் ; ஆகாயத்திலுள்ள நட்சத்திரங்களைக்கூட எண்ணிச் சொல்லிவிடுகிறார்கள்.
        ஆனால் கற்க வேண்டிய விஷயங்கள் இவ்வளவுதான் என்று இதுவரையில் யாரா வது ஒரு வரையறை செய்திருக்கிறார்களா?
        'கற்றது கைம் மண்ணளவு, கல்லாதது உலகளவு' என்ற வாசகம் வெறும் ஏட்டுச் சுரைக்காயல்ல; அழியாத உண்மை. இந்த உண்மையை நீ தெரிந்து கொண்டிருந்தாயானால் அதுவே உன்னை நீ அறிந்து கொண்டதாகும்.

          'உன்னை நீ அறிய வேண்டும்' என்றால் உன் தகுதியை, உன் சக்தியை, உன் திறமையை நீ தெரிந்து கொள்ள வேண்டும், உன் பொறுப்பை நீ உணரவேண்டும், உன் கடமையை நீ அறியவேண்டும் .. உன் தகுதியை,  சக்தியை,  திறமையை நீ தெரிந்து கொண்டால் அதற்குத் தக்கபடி காரியங்களைச் செய்வாய்; தோல்வி யென்பது உனக்கு ஏற்படாது. 

      மற்றவர்கள் அறியாமையை பரிகசிக்க வேண்டாம் .அதனால் நஷ்டம் உனக்குத்தான். அவர்களிடமிருந்து ஏதேனும் தெரிந்து கொள்ளவேண்டியதிருந்தால் அந்த சந்தர்ப்பத்தையும் போக்கடித்துக் கொண்டு விடுகிறாய். அவர்களுடைய அறிவையும் நீ விருத்தி செய்யவில்லை; உன்னுடை ய அறிவையும் நீ விருத்தி செய்து கொள்ளவில்லை.

       பிரதியொரு மனிதனுக்கும் இயற்கையாகவே சில சக்திகள் இருக்கின்றன. அவை அவனோடு பிறந்தவை. மனிதன் வளர்ந்து கொண்டு வருகிறானென்றால் அவன் தன்னிடத்திலுள்ள சக்திகளை வளர்த்துக்கொண்டு வருகிறான் என்றுதான் அர்த்தம். "
   உன்னை நீ அறிய நிறைய படிக்க வேண்டும்." என்கிறது கடிதம்.

3) தேசபக்தி:
தேசபக்தி என்றால் என்ன எப்படி கைகொள்ள வேண்டும் தேச பக்தி உள்ளவன் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பது கடிதத்தில் எழுதப்பட்டு இருக்கிறது..
          உண்மையான தேசபக்தன், தேசத்தை முன்னணியிலே நிறுத்தித் தான் பின்னணியிலே நிற்கிறான்; தேசநலனுக்காக, தன்னை அழித்துக்கொள்வது அவசியமாயிருந்தால் அதற்கும் அவன் பின்வாங்குவதில்லை; புன்சிரிப்போடு தூக்கு மேடையில் ஏறி நிற்கிறான்; பீரங்கி முன்னர் மார்பைத் திறந்து காட்டுகிறான்; எதற்கும் அவன் பின்வாங்குவதில்லை. அவன் அஞ்சாமையின் வடிவம்; உண்மையின் உரைகல்; தர்மத்தின் பிரகாசம். இப்படிப்பட்ட ஒரு தேச பக்தனாக நீ செய்கிற சேவை உனக்குச் சந்தோஷத்தை அளிக்கக் கூடியதாகவும், மற்றவர்களுக்கு நன்மையைக் கொடுக்கக் கூடியதாகவும் இருக்கும்.

4) முயற்சியும் பயிற்சியும்:
    இந்த கடிதத்தில் முயற்சி செய்ய வேண்டும் அது குறித்தான பயிற்சி எப்படி மேற்கொள்ள வேண்டும் பயிற்சியின் முக்கியத்துவம் என்ன என்பது குறித்து தெளிவாக எழுதப்பட்டிருந்தன .தாய்மொழி படிக்க வேண்டும் இந்தி சமஸ்கிருதம்  ஆங்கிலம் படிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசிரியர் கடிதம் வாயிலாக அறிவுறுத்துகிறார்.

5) ஸ்தாபனத்தின் அவசியம்:
       ஸ்தாபனம் என்றால் என்ன  அதில் சேர்ந்து எவ்வாறு பணி செய்வது என்பது குறித்தான விஷயங்களை இந்த கடிதத்தில் எழுதப்பட்டு இருக்கிறது .மொத்தம் 18 கருத்துக்கள் தெளிவாக குறிக்கப்பட்டிருக்கிறது.
6) பிரச்சாரம்:
பிரச்சாரம் என்பது ஒரு கலை. இந்த கொள்கையை கடைப்பிடித்து வரும் அதில் உறுதியாக இருந்து எப்படி பேச வேண்டுமோ அப்படி தயார் செய்துகொண்டு பேச வேண்டும் என்கிறது இந்த கடிதம் .
.
7) பொதுக்கூட்டம்:
பொதுக்கூட்டம் என்றால் என்ன பொதுக்கூட்டத்திற்கு மக்களை எப்படி கூட்டவேண்டும் பொதுக்கூட்டத்தில் வருகின்ற மக்களை எப்படி நடத்தவேண்டும் பொதுக்கூட்டத்தில் எப்படி பேச வேண்டும் என்று விவரமாக கடிதத்தில் எழுதப்பட்டு இருக்கிறது.
8) பிரசங்கம்:

8. பிரசங்கம்
  *" பேச்சு ஒரு கலை; அதை நீ பயிலவேண்டும்; அதில் நீ வல்லவனாக வேண்டும். அப்பொழுதுதான் உன்னுடைய பிரசாரம் பலனுடையதாயிருக்கும்.

       பேச்சிலே என்ன இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. பேச்சைக் காட்டிலும் செயல் முக்கியம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் செயலுக்குத் தூண்டுவது பேச்சு.
 கல்விச் செல்வத்தைக் காட்டிலும் கேள்விச் செல்வம் விசேஷமானதென்று சொல்வார்கள். இந்தக் கேள்விச் செல்வம் எதனை முக்கியமாகக் கொண்டு பெருமை யடைகிறது? பேச்சையல்லவோ? "
கடிதம் பேச்சுக்களை குறித்து பிரச்சாரம் முக்கியத்துவம் குறித்து சிறப்பாக பேசுகிறது.
9) கட்சிக் கட்டுப்பாடு:
ஒரு கட்சியில் சேர்ந்து விட்டால் அதன் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி கொண்டவைகளே கடிதம் அமைந்திருக்கிறது.
10) தலைவனுக்கு உரிய அம்சங்கள் தன்மைகள்:
      தலைவனாக வரக்கூடியவனுக்கு
இருக்கக்கூடிய இலக்கணங்களை இந்த கடிதம் கோடிட்டு காட்டுகிறது.

11) தனி வாழ்வும் பொது வாழ்வும்:
       மகனே! நீ ஒரு தனி  வியக்தி.தேசத்தின் சிறிய அம்சம் நீ. பெரிய அம்சம் தேசம்.
       ஆகவே உன்னுடைய ஒழுங்கான நடவடிக்கையை உங்களுடைய ஒழுங்காக வாழ்க்கையில்தான் தேசம் ஒழுங்கு படுத்துவது .சொந்த வாழ்க்கையில் நீ எவ்வளவு சிரத்தை உடையவராக இருக்கிறாயோ அந்த அளவுக்கு உனது தேசபக்தியின் பிரதிபலிக்க வேண்டும் 
தேசத்தில் நல் வாழ்வில் உன் வாழ்வு பிரதிபலிக்க வேண்டும் என்று கடிதம் எடுத்து உரைக்கிறது.

12) பொதுஜனங்கள்:

     "மகனே! பொது ஜனங்களை உன்னிலிருந்து வேறாகப் பிரித்து எண்ணாதே. அவர்களிலே நீ ஒருவன். உன்னுடைய வாழ்க்கையும் அவர்களுடைய வாழ்க்கையும் ஒன்றுதான்.
         பொது ஜனங்களை எப்பொழுதும் அலட்சி யம் பண்ணாதே. அவர்களுக்கு, உன்னைப்போல் அழகாகப் பேசுஞ் சக்தி இல்லாமலிருக்கலாம். ஆனால் அவர்களுக்கு இதயமுண்டு; அதில் உணர்ச்சிகள் பொங்குவதுண்டு. 
அவர்களுடைய புருவங்கள் எப்பொழுது நெற்றியிலே ஏறுகின்றன, எப்பொழுது அவர்கள் உதட்டைப் பிதுக்குகிறார்கள், அவர்களுடைய முகத்திலே எப்பொழுது சிணுக்கம் ஏற்படுகிறது, இவைகளையெல்லாம் நீ நன்றாகக் கவனி. அவர்களுடைய குமுறல்களைச் செவிகொடுத்துக் கேள். அப்பொழுதுதான் அவர்களுக்கும் உனக்கும் நல்ல உறவு ஏற்படும்."
     பொதுஜனங்கள், பொதுஜனங்களுடன் கலந்து உறவாடுவது ஒரு கலை ,அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கடிதம் வலியுறுத்துகிறது.

####
இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பு எழுதப் பெற்றதால், தேசத் தொண்டாற்ற தம் மக்களை பாரத மாதா தூண்டுவதாகக் கடிதங்களின் உள்ளடக்கம் அமைந்தது.         
      இக்கருத்து, இறுதிக் கடிதத்தில் பின்வருமாறு கூறப் பெற்றுள்ளது.

       "மகனே! இதுதான் என்னுடைய கடிதம். என்னுடைய நாற்பது கோடி மக்களும் பசியாற உண்டு உடம்பு மறைய ஆடையணிந்து, நிம்மதியான வாழ்க்கையை நடத்த வேண்டுமென்பதே என் விருப்பம். அந்த விருப்பத்தை நிறைவேற்றிட நீ ஒரு கருவியாயமைய வேண்டுமென்பதற்காகவே இந்தக் கடிதங்களை உனக்கு எழுதிக் கொண்டு வந்தேன். இந்தக் கடிதங்கள் உன்னுடைய தேசத் தொண்டுக்கு வழிகாட்டியிருக்குமானால் அதுவே நான் அடைகிற திருப்தி'"

          கடிதங்கள் ஒவ்வொன்றும் ஒன்வொன்றின் தலைப்பும், தேசிய அரசியல் பாட போதனைக்குரியதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.     
        விடுதலைப் போராட்டக் காலத்திற்கு உரியனவாக இருந்தாலும், அவற்றின் பொதுப்பண்புகள், தேசபக்திப் பண்பு போலவே நித்தியமானவை. எனவே, தற்காலம் பொருத்தத்திற்கும் உரியதே 'பாரத மாதாவின் கடிதங்கள்' எனும் இந்நூல்.

நன்றி :

உரத்த சிந்தனை

சிவனருட் செல்வர்

இன்றைய குறள்

கோபுர தரிசனம்

நலக்குறிப்புகள்

               பப்பாளிப் பழம் 

சிறுநீர் சிகிச்சை

*🌱     இப்போது இன்று 8 PM மாதத்திற்கு ஒருமுறை மட்டும்  நான்காவது   ஞாயிறு இரவு 8 மணிக்கு இலவச தமிழ் ஜூம் மீட்டிங்கைப் பயன்படுத்திக் கொள்ள அன்பான நண்பர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.  ஜூம் மீட்டிங்கில் சேர்வதற்கான இணைப்பு 👇* https://us06web.zoom.us/j/5679513209

அருள்வாக்கு

இன்றைய சிந்தனைக்கு

இன்று ஒரு தகவல்

மேன்மக்கள் 🙏🙏🙏🙏

பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவியேற்பது தனது அமைச்சரவையில் 7 பேரை மட்டுமே சேர்த்து கொண்டார்... அவர்களில் ஒருவர் கக்கன்.. இவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் #போலீஸ் #பொதுப்பணி #விவசாயம் #சிறுபாசனம் #கால்நடை_பராமரிப்பு #உள்துறை #சிறைத்துறை #நிதி #கல்வி #தொழிலாளர்_நலம் #மற்றும் #மதுவிலக்கு...   கண்ணை கட்டுகிறதா... அது தான் உண்மை  இத்தனை துறைகளின் அமைச்சராக இருந்தவர் .. பத்து வருடங்கள் அமைச்சராக இருக்கும் போது  வெளியூர் சென்றால் தன் துணிகளை தானே துவைத்து கொள்வார்..  ஒரு முறை அவர் திருச்சி மாவட்டத்தில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு  இரவு ரயிலில் சென்னை செல்ல வேண்டும்.. நிகழ்ச்சிகளை முடித்து திருச்சி ஜங்ஷனுக்கு வந்த போது அவர் செல்ல வேண்டிய ரயில் கிளம்பி விட்டது.. அடுத்த ரயில் அதிகாலையில்...   அமைச்சராக இருந்தாலும் யாரையும் உதவிக்கு அழைக்கவில்லை.. ரயில்வே அதிகாரிகளையும் அணுகவில்லை... பேசாமல் ஒரு #துண்டை விரித்து பிளாட்பார பெஞ்ச்சில் படுத்துவிட்டார்..   நடு இரவில் ரோந்து வந்த ரயில்வே போலிஸ்சார்  யாரென்று தெரியாமல் லட்டியாய் இரண்டு தட்டு தட்டி எழுப்பினர்...   யார் நீங்கள்  எழுந்து செல்லுங்கள் இங்கெல்லாம் படுக்கக் கூடாது  என்றனர்  அதற்கு அமைதியாக பதிலளித்தார்..   #அய்யா என் பெயர் கக்கன் நான் போலீஸ் மந்திரியாக இருக்கேன் அடுத்தரயில் வந்தவுடன் சென்று விடுகிறேன் என்றார். அதிர்ந்தனர் போலீஸ்காரர்கள்  #அய்யா மன்னித்து விடுங்கள் நீங்கள் முதல் வகுப்பு ஓய்வறையில் போய் படுங்கள்.. என்றனர்  வேண்டாம்.. இந்த வசதியே எனக்கு போதும் என்று அந்த பெஞ்ச்சிலேயே படுத்து உறங்கிவிட்டார்... அவர் ரயில் ஏறும் வரை அங்கேயே போலீசார் நின்றிருந்து பத்திரமாக பார்த்துக் கொண்டனர்...   இன்று கக்கன் ஐயா பிறந்த நாள் . நல்லவர்களை நினைவு கொள்வோம் மற்றும் அனைவர்களிடமும் பகிர்வோம்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

23 ஜூன், 2023

சிரிப்புத்தான் வருகுதையா

நூல் நயம்

அணிந்துரை:
 *நல்லன எல்லாம் தரும்: சுதா சேஷய்யன்*
....................................
*ஆன்மிக அன்பர்கள் தவறவிடக் கூடாத நூல்*
*திருப்பூர் கிருஷ்ணன்*
....................................
  *முத்து முத்தான முப்பத்தைந்து ஆன்மிகக் கட்டுரைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ளது டாக்டர் சுதா சேஷய்யன் எழுதிய `நல்லன எல்லாம் தரும்` என்ற இந்நூல். 

  படிப்பவர்களுக்கு நல்லன எல்லாம் தரும் சிந்தனைகள் இந்நூலெங்கும் காணப்படுகின்றன. 

 தமிழ், சம்ஸ்க்ருதம் உள்ளிட்ட பல மொழிகளின் இலக்கியப் பெருங்கடல்களில் ஒளிவீசும் சிற்சில வரிகளை எடுத்துக்கொண்டு அவற்றிக்கேற்ற பொருத்தமான விளக்கங்களை இணைத்துக் கட்டுரைகளாக்கி வாசிப்பவர் மனத்தில் உயர்ந்த சிந்தனைகளை விதைக்கிறார் நூலாசிரியர். 

  புகழ்பெற்ற பேச்சாளர் எழுதியுள்ள நூல் இது. 

  `ஒரு பேச்சாளர் எழுத்தாளராகும்போது அந்த எழுத்தில் ஒரு கவர்ச்சி இருக்குமென்றும் ஓர் எழுத்தாளர் பேச்சாளராகும்போது அந்தப் பேச்சில் ஒரு கட்டுக்கோப்பு இருக்குமென்றும்` பிரபல சொற்பொழிவாளர் சத்தியசீலன் குறிப்பிடுவதுண்டு. 

  கீழே வைக்காமல் தொடர்ந்து படிக்கச் செய்யும் கவர்ச்சியும், ஒவ்வொரு கட்டுரையிலும் காணப்படும் கச்சிதமான கட்டுக்கோப்பும் இந்நூலைப் பொறுத்தவரை சத்தியசீலன் கூற்றை மெய்யாக்குகின்றன. 

  கட்டுரைகள் பட்டுக் கத்திரித்தாற்போல் பளிச்சென முடியும் வடிவ நேர்த்தியால் சிறுகதைகளைப் படித்ததுபோன்ற நிறைவைத் தோற்றுவிக்கின்றன.

  பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் ஒருசேர இரு துறைகளில் வல்லமை படைத்தவராகத் திகழ்கிறார் நூலாசிரியர் என்பதை நாம் உணர முடிகிறது. 

  எழுத்துத் துறையிலும் பேச்சுத் துறையிலும் ஒருசேர ஆற்றலை வெளிப்படுத்தியவர்கள் கண்ணதாசன், ஜெயகாந்தன், தீபம் நா. பார்த்தசாரதி, சோ போன்ற வெகுசிலரே. அந்த வெகுசிலர்ப் பட்டியலில் சுதாசேஷய்யனும் இணைகிறார். 

   இந்நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் அதனதன் அளவில் முழுமை பெற்று நிறைவடைந்து விடுவதால், உள்ளடக்கப் பகுதியைப் பார்த்து நேரம் கிடைக்கும்போதெல்லாம் விரும்பிய தலைப்பில் உள்ள கட்டுரைகளைத் திரும்பத் திரும்பப் படித்து மகிழலாம். 

  முழுநூலையும் படித்தால்தான் பயன் கிட்டும் என்பதில்லை. பகுதி பகுதியாகப் படித்தே பயனடையலாம். 

 இன்று தமிழகத்தில் சம்ஸ்க்ருத வெறுப்பு வேண்டுமென்றே பரப்பப் படுகிறது. 

  ஓர் உயர்ந்த மொழியின் இலக்கிய அனுபவத்தைத் தமிழர்கள் அடைவதற்குத் தடையாக நிற்கும் இத்தகைய மன உணர்வை நாம் கைவிடுதல் அவசியம். 

   தனித்தமிழ் அன்பரான மறைமலை அடிகள் காளிதாசனின் சம்ஸ்க்ருத சாகுந்தலத்தை மொழியாக்கம் செய்து அதன்மூலம் தமிழை வளப்படுத்தினார் என்ற உண்மையை உணர்ந்தால் சம்ஸ்க்ருத வெறுப்பில் அர்த்தமில்லை என்பதைப் புரிந்துகொள்வோம். 

  பழந்தமிழ்ப் பண்டிதர்கள் எல்லாம் சம்ஸ்க்ருதத்திலும் பாண்டித்தியம் பெற்றிருந்தார்கள். 

  மகாகவி பாரதியார் சம்ஸ்க்ருதத்தில் புலமை பெற்றிருந்தார். ஸ்ரீஅரவிந்தரிடம் ரிக்வேதம் பயின்றார். (இந்நூலிலும் `வெளிச்சம் தரும் கல்வி` என்ற கட்டுரை, ரிக்வேத சுலோகம் ஒன்றின் விளக்கமாக எழுதப்பட்டுள்ளது.) 

 `யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்` என்றும் பாடினார் பாரதியார். 

  அண்மைக் காலத்தில் சுவாமிநாத ஆத்ரேயன், ஸ்ரீராம தேசிகன் போன்ற பெருமக்கள் தமிழ், சம்ஸ்க்ருதம் இரண்டிலும் பெரும்புலமை பெற்றிருந்தார்கள். 

  தாய்மொழிமேல் பற்று வைத்திருப்பதற்குப் பிறமொழியை வெறுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

  இந்நூலில் சம்ஸ்க்ருதக் கவிதைகளின் நயங்கள் பல மிக அழகாக ஆங்காங்கே எடுத்துச் சொல்லப்பட்டுள்ளன. `கடலுக்கோர் கப்பல், நற்செயலே நல்லிறைவன், அற்புதங்கள் ஆறு` போன்ற கட்டுரைகள் அப்படிப் பட்டவை. 

  `ம்ருகம் என்பது அனைத்து விலங்குகளைக் குறித்தாலும் சிறப்பாக மானைக் குறிப்பதாகும்` என்பதுபோன்ற வரிகள் நம் புருவத்தை உயர்த்தச் செய்கின்றன. ம்ருகநயனி என்பதை மான் விழியாள் என்றுதானே மொழியாக்கம் செய்ய வேண்டும் என நம் மனம் தொடர் சிந்தனைகளில் ஆழ்கிறது. 

  `நற்செயலே நல்லிறைவன்` கட்டுரையில் `கடவுளைக் காட்டிலும் விதி பெரியது, ஆனால் வினைப் பயன்களையே விதி தருகிறது` என்ற கருத்து பர்த்ருஹரி நீதி சதக சுலோகத்தின் மூலம் விளக்கப்பட்டுள்ளது. 

  ஆதிசங்கரரின் சிவானந்தலகரி, செளந்தர்ய லகரி, பஜகோவிந்தம், காளிதாசரின் ரகுவம்சம், சதாசிவப் பிரம்மேந்திரரின் சம்ஸ்க்ருதக் கீர்த்தனை, ஸ்வேதாஸ்வதர உபநிஷதம், முண்டகோபநிஷதம், மகாபாரதம், அஷ்டாவக்கிர கீதை எனப் பல சம்ஸ்க்ருத நூல்களிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் வரிகள் நூலாசிரியரின் சம்ஸ்க்ருதப் புலமையைப் புலப்படுத்துகின்றன. 

  தெலுங்குக் கவிதையின் ஆன்மிக நயங்களும் இந்நூலில் உண்டு. `ஆசை அடங்கினால் ஆனந்தம்` என்ற கட்டுரை வேமனா என்ற தெலுங்கு ஞானியின் பாடல் கருத்தை நயம்பட விளக்குகிறது.

  `கடவுள் கூப்பிடு தூரத்தில்` என்ற கட்டுரையும் வேமன வரிகளின் நயத்தைப் பேசுவதுதான். 

   சர்வக்ஞருடைய கன்னடப் பாடல் நம் சிந்தையை அள்ளுகிறது. பெங்களூருவில் திருவள்ளுவருக்குச் சிலை வைத்தபோது, சென்னையில் சர்வக்ஞருக்குச் சிலைவைத்து நாம் மரியாதை செய்த நிகழ்வும் நினைவில் எழுகிறது. 

  மலையாள எழுத்தச்சனின் மகாபாரத மேற்கோளும் இந்நூலில் உண்டு. 

 *நூலாசிரியர் நமது தமிழின் அனைத்து பக்தி இலக்கியத்தையும் அவர் வீட்டு மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக் கரைத்துக் குடித்திருக்கிறார் என்றே தோன்றுகிறது! 

  தமிழின் பக்தி இலக்கியத்தில் அவருக்குள்ள பரந்துபட்ட அறிவு மலைக்க வைக்கிறது. 

  சேக்கிழாரின் பெரிய புராணம், நம்மாழ்வாரின் திருவாய்மொழி, தாயுமானவரின் பராபரக் கண்ணி, வள்ளலார் பாடல்கள் எனப் பல நூல்களிலிருந்து மணிமணியான பாடல்கள் மேற்கோள்களாக இடம்பெற்று அவற்றின் விளக்கம் சுவாரஸ்யமாகத் தரப்பட்டுள்ளது.                  

 *கடவுளின் வசிப்பிடம் என்ற கட்டுரை மிகச் சிறப்பான ஒரு படைப்பு. 

`படமாடக் கோயில் பரமற்கு ஒன்றீயில் 
நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா
நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றீயில் 
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே!`

 என்ற திருமூலர் திருமந்திரத்தின் விளக்கம் ஓர் அழகிய சிறுகதையாய் மலர்ந்துள்ளது. 

  கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலாக வளரும் கதை கடினமான திருமந்திரப் பாடலையும் அதன் மிக முக்கியமான கருத்தையும் எளிமையாக அனைவர்க்கும் உணர்த்தும் முயற்சி. 

  இதையே வாரியார் சுவாமிகள், `அஞ்சல் அலுவலகத்தில் சேர்த்த தபால் அஞ்சல் பெட்டிக்கு வராது. ஆனால் அஞ்சல் பெட்டியில் சேர்த்த தபால், அஞ்சல் பெட்டிக்கும் கிடைக்கும். பின்னர் அது அஞ்சல் அலுவலகத்திற்கும் போய்ச் சேர்ந்துவிடும்` என விளக்குவார். 

 *`புலன்களின் பொறுப்பு` என்ற கட்டுரையில் திருநாவுக்கரசரின் புகழ்பெற்ற பாடலைக் கட்டுரையாசிரியர் நோக்கும் விதம் தனி அழகு. 

  ஐம்புலன்களும் ஆனந்தமடையும் இடம் இறைவனின் திருவடி என்பதால் ஐம்புலன்களின் ஆனந்தத்தையும் இறைவனோடு இணைத்துப் பார்க்கிறார் நாவுக்கரசர் என்ற விளக்கம் மிகப் பொருத்தம். 

`மாசில் வீணையும் மாலை மதியமும் 
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் 
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே 
ஈசன் எந்தை இணையடி நீழலே!`

கட்டுரையை வாசித்துவிட்டு இந்தப் பாசுரத்தைச் சொல்லும்போது மனத்தில் புதிய வெளிச்சம் பிறக்கிறது. 

 ஆன்மிக நறுமணம் கமழக் கமழ எழுதப்பட்டுள்ள இந்தக் கட்டுரைத் தொகுப்பு, தமிழின் பக்தி இலக்கியத் துறைக்கு வளம்சேர்க்கும் புதிய நூல். ஆன்மிக அன்பர்கள் தவறவிடக் கூடாத நூல். 
..........................................
நூல்: நல்லன எல்லாம் தரும். ஆசிரியர்: டாக்டர் சுதா சேஷய்யன், வெளியீடு: வானதி பதிப்பகம், 23. தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை- 600 018. தொலைபேசி: 044- 2434 2810 & 2431 9769. மின்னஞ்சல்: vanathipathippakam@gmail.com. விலை ரூ 250. 
............................................

நன்றி :
திரு. திருப்பூர் கிருஷ்ணன் 
மற்றும் 
முகநூல் 

சுற்றுச்சூழல்

மரம் நடவு🌳🌳🌳

இடம்.வெள்ளோடு அருகில் 🍀

மரங்களின் எண்ணிக்கை: 4

மாண்புமிகு மரங்கள் குழு ஈரோடு

ஆன்மீக சிந்தனைகள்

ஹோமியோபதி மருத்துவ கருத்தரங்கம்

சிவனருட் செல்வர்

இன்றைய குறள்

கோபுர தரிசனம்

அருள்வாக்கு