31 டிச., 2018

உங்கள் கவனத்திற்கு-32: எஸ்ராவுடன் வாசகர் சந்திப்பு

குழந்தை வளர்ப்பு-25:

அன்றாட வாழ்வில் அபாயங்கள்-56:

இன்று ஒரு பழமொழி-3:

எங்கள் தமிழகம்-41: தமிழின் தனிச்சிறப்புகள்

மலரும் நினைவுகள்-8:

ஒரு ஃபியட் காரின் விலை வெறும் ரூ.9750/- மட்டுமே!

நூல்மயம்-39: சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்

அபூர்வமான படங்கள்-7: போஸ்

இறுதி முறையாக சுபாஸ்  சந்திர போஸ் பிரிட்டாஷாரால் கைது செய்யப்பட்டபோது எடுத்த படம்.

சிரிக்கவும் சிந்திக்கவும்-52: பொண்டாட்டியின் ஒன்பது அவதாரங்கள்

*பொண்டாட்டியின்*
*ஒன்பது அவதாரங்கள்*.

1) காலை rush hour, Office Work..     *அஷ்ட லஷ்மி*

2) குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போது.... *சரஸ்வதி*

3) பணத்தை வீட்டுச் செலவுகளிலிருந்து மிச்சப்படுத்தும் போது... *மஹாலக்ஷ்மி*

4) உணவு தயாரிக்கும் போது...
*அன்னபூரணி*

5) தேவையான நேரத்தில் குடும்பத்திற்காக உறுதியாக நிற்கும் போது....
*பார்வதி*

6.) உபயோகப்படுத்திய  ஈர டவலை கணவன் bed மேலே போடும் போது....
*துர்கா*

7) கணவன் தரமற்ற காய்கறிகளை வாங்கி வரும் போது... *பத்ரகாளி*

8) சிரமப்பட்டு செய்த தன் அலங்காரத்தை,கணவன் கவனிக்காமல் அலட்சியம் செய்யும்போது.... *மகிஷாசுரமர்தினி*

9) கணவன் மற்றொரு பெண்ணை புகழும் போது.... *சொர்ணாக்கா*....

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

குட்டிக்கதை-59:

தினசரி அதிகா​லையில் கிருஷ்ண​தேவராயருக்கு முகம் மழிப்பதற்கு சவரத் ​தொழிலாளி ஒருவன் அரண்ம​ணைக்கு வருவது வழக்கம்.

தினசரி கா​லையில் முகத்​தை மழித்து முடி​யைத் திருத்துபவராதலால் அந்தத் ​தொழிலாளியிடம் ​வேடிக்​கையாக எ​தையாவது​ பேசுவது கிருஷ்ண​தேவராயரின் வழக்கம்.

அவனும் மன்னர் ​கேட்கும் ​கேள்விகளுக்கு இணக்கமாகப் பதிலு​ரைப்பான்.

ஒருநாள் அவன் கிருஷ்ண​தேவராயருக்கு முகம் மழித்துக் ​கொண்டிருக்கும் ​போது,”நீ நாட்டு மக்களிடம் சகஜமாகப் பழகுபவனாயிற்​றே.

நமது நாட்டு மக்களின் வாழ்க்​கைத் தரம் எந்த நி​லையில் இருக்கிறது என்று உனக்குத்​ தெரிந்திருக்கு​மே என்றார். ”​

மேன்​மை தாங்கிய மகாராஜா அவர்க​ளே! தங்களு​டைய ஆட்சியில் மக்கள் நன்கு சுபிட்சமாக இருக்கின்றனர்.

மக்களின் ஒவ்​வொருவர் இல்லத்தில் கு​றைந்தபட்சம் எலுமிச்சம்பழம் அளவிற்குத் தங்கம் இருக்கிறது. அதனால் எவரும் கவ​லையில்லாமல் இருக்கின்றனர்” என்றார் சவரத்​தொழிலாளி.

சவரத்​ தொழிலாளி ​சென்ற பின்னர் எப்​போதும் ​போன்று மன்ன​ரைக் காண அப்பாஜி வந்தார்

அப்பாஜியிடம் சவரத் ​தொழிலாளி கூறிய​தை மன்னர் கூறினார். ”இவன் இப்படிக் கூற என்ன காரணம்? இவன் ​சொன்னது ​போன்று எப்படி ​எல்லோரிடமும் எலுமிச்சம்பழ அளவில் ​பொன் இருக்கும்? எலுமிச்சம்பழ அளவு ​பொன் என்பது சாதாரண மக்கள்​ வைத்திருக்க முடியாது! ​பெரும் பணக்காரர்களிடத்தில் அல்லவா இருக்கும்.

ஆ​கையினால் இதுபற்றித் ​தெரிந்து ​கொள்ள ​வேண்டும்!” என்று வினவினார்.

”இதற்கு வி​ரைவில் வி​டை​யைக் கூறுகி​றேன்” என்று அப்பாஜி மன்னரிடம் கூறிவிட்டுச் ​சென்றுவிட்டார்.

மறுநாள் வழக்கம்​போல் சவரத் ​தொழிலாளி அரண்ம​னைக்கு வந்து கிருஷ்ண​தேவராயருக்கு முகம் மழித்துக் ​கொண்டிருந்தான்.

அச்சமயம் அப்பாஜி, காவலர்க​ளை அ​ழைத்து ”சவரத் ​தொழிலாளியின் இல்லத்​தை ​சோத​னை ​செய்துவிட்டு வி​ரைவில் வாருங்கள்” என்று கட்ட​ளையிட்டார்.

காவலர்கள் சவரத் ​தொழிலாளியின் இல்லத்திற்குச் ​சென்று ​சோத​னை ​செய்த​போது, அடப்பப் பெட்டியில் எலுமிச்சம்பழ அளவுக்கு ​பொன் இருப்ப​தைக் கண்டு வந்து கூறினர்.

அத ​னை மன்னரிடம் ​கொடுத்துவிட்டு, மன்னர் ​பெருமா​னே! அடுத்த நாள் சவரத் ​தொழிலாளி வந்ததும், முதலில் ​கேட்டது ​போன்று ​கேளுங்கள். அவனிடமிருந்து ​வேறு விதமான பதில் கி​டைக்கும்” என்றார் அப்பாஜி.

வழக்கம் ​போல் கா​லை கிருஷ்ண​தேவராயருக்கு முகம் மழிக்க சவரத் ​தொழிலாளி வந்தமர்ந்தான்.

வரும்​போ​தே அவனது முகம் வாடியிருந்தது. அவன் தனது ​வே​லை​யை ஆரம்பிக்கும் சமயம்,

”இப்​​பொழுது குடிமக்கள் எவ்வாறு இருக்கிறார்கள்? ஏதாவது மாறுதல் உண்டாகியிருக்கிறதா?” என்று வினவினார் மன்னர்.

”​பெருமதிப்பிற்குரிய மகாராஜா அவர்க​ளே! அ​தை ஏன் ​கேட்கின்றீர்கள்? எல்​லோரும் மனக்கலக்கத்துடன் இருக்கின்றனர். ​

கையில் இருக்கும் எலுமிச்சம் பழ அளவு தங்கத்​தை இழந்துவிட்டால் மக்கள் எப்படி மகிழ்ச்சியுடன் வாழ முடியும்?” என்று சவரத்​ தொழிலாளி கண்களில் நீர் மல்க ​தொண்​டை அ​டைக்கக் ​கூறினான்.

அச்சமயம் வந்த அப்பாஜி, ”மன்னர் ​பெருமா​னே! இப்​போது வி​டை ​தெரிந்து விட்டதா? உலகத்திலுள்ள ஒவ்​வொருவரும் தன்னு​டைய மன இயல்புக்கு ஏற்பதான் மற்றவர்களின் நி​லை​யை நிர்ணயிக்கின்றனர்.

தன்​னைப் ​போல்தான் பிறரும் இருப்பார்கள் என்று நி​னைக்கின்றனர்.

தான் நல்ல வருமானத்துடன் வாழ்ந்தால் மற்றவர்களும் அப்படித்தான் வாழ்வார்கள் என்றும், தான் கஷ்டநி​லையில் வாழ்ந்தால் மற்றவர்களும் கஷ்டத்துடன் தான் வாழ்கிறார்கள் என்று மனப்பக்குவத்தில் வாழ்கின்றனர்” என்றார் அப்பாஜி.

உட​னே காவல​னை அ​ழைத்து, ”கஜானாவில் பாதுகாப்புடன் இருக்கும் எலுமிச்சம்பழ அளவு ​பொன்​னைக் ​கொண்டு வந்து சவரத் ​தொழிலாளியிடம் ​கொடுங்கள்” என்று ஆ​ணையிட்டார் மன்னர். ​

கொண்டு ​கொடுத்த ​பொன்னுடன் சிறிது ​பொன்னும் பரிசாகச் சவரத் ​தொழிலாளிக்குக் ​கொடுத்தார். அவனும் மனம் மகிழ்ந்து பணிவுடன் வணங்கி இன்முகத்துடன் ​வாங்கிச் ​சென்றான். மனித இயல்​பை விளக்கிக் காட்டிய அப்பாஜியின் அறிவுத் திற​மை​யைப் பாராட்டினார் கிருஷ்ண​தேவராயர்.

நன்றி: மனோகர் லக்ஷ்மண், புன்னகையரங்கம்

வாவ்! படங்கள்-62:

இன்று ஒரு தகவல்-147: பற்கள்

இன்றைய திருக்குறள்-58: குறள் 21

ஆரோக்கிய முத்திரைகள்-19: சுவகரண முத்திரை

பயனுள்ள குறிப்புகள்-58: காதுகளில் தோடு அணிவதேன்

உங்கள் கவனத்திற்கு-31: இரயில்வேயில் வேலைவாய்ப்பு

இன்றைய சிந்தனைக்கு-297:

நலக்குறிப்புகள்-153: நல வாழ்விற்கு 30

நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டியவை 30 தகவல்கள் !!

1. இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் .

2. உணவு, தண்ணீர் எதுவானாலும் ரசித்து, சுவைத்துச் சாப்பிட வேண்டும்.

3. ஆறு சுவைகளையும் உணவில் முடிந்தவரை சேர்த்துக் கொள்ளவேண்டும்.

4. உணவை மென்று கூழாக்கி எச்சில் நன்றாகக் கலந்து சாப்பிடவேண்டும். (நொறுங்கத் தின்றால் நூறு வயது வரை வாழலாம். உமிழ்நீர், வெள்ளை அணுக்களுக்கு இணையாகப் பணியாற்றக் கூடிய உமிழ் நீர் கலந்த உணவு நன்கு செரிமானமாகும்).

சாப்பிடும் போது சாப்பாட்டில் கவனத்தை வைக்க வேண்டும். நம் பார்வையும் கவனமும் வேறு எங்கும் இல்லாமல் உணவை உற்று நோக்கி சாப்பிடவேண்டும்.
உணவை கையால் எடுத்து சாப்பிடவேண்டும். நம் கை உணவில் படுவது மிகவும் நல்லது.

சாப்பிடும்முன் 30 நிமிடமும், சாப்பிடும்போதும், சாப்பிட்டபின் 30 நிமிடமும் தண்ணீர் குடிக்கக் கூடாது. (தேவைப்பட்டால், தொண்டையை நனைக்கும்படி சிறிது குடிக்கலாம். தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்காக உற்பத்தியாகும் அமிலத்தை நீர்த்து தீங்கை ஏற்படுத்தும்).

தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு, புத்தகம் வாசித்துக்கொண்டு, யாருடனாவது பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாது.

சம்மணமிட்டு சாப்பிட வேண்டும் .இது உடலில் பரவும் சக்தியை வயிற்றுப் பகுதியில் தடுத்து, தேக்கி செரிமானத்திற்கு உதவும். காலைத்தொங்கவிட்டு நாற்காலியில் அமர்ந்து உண்பது நல்லதல்ல.

கை கால் முகம் கழுவிச் சாப்பிட வேண்டும் .

அளவு சாப்பாட்டைத் தவிர்த்து பசிக்குச் சாப்பிடுங்கள். ஏப்பம் வந்தால் அத்துடன் நிறுத்தலாம். எப்படி சாப்பிடுவது என்று அறிந்து சாப்பிட்டால் உணவுக் கட்டுப்பாடின்றி எதையும் சாப்பிடலாம்.

தண்ணீர் சுத்தமாக இருந்தால், தண்ணீரைக் கொதிக்க வைத்தோ, வடிகட்டியோ குடிக்கக் கூடாது. தண்ணீரை மண் பானையில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம் .

பசி வந்து சாப்பிட வேண்டும், தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், தூக்கம் வந்து தூங்க வேண்டும்.

காலையில் பல் துலக்குவதை விட இரவில் கட்டாயம் பல் துலக்கி படுக்கைக்கு செல்லவேண்டும்.

இரவு படுக்கைக்கு நேரத்தில் சென்று விடியற்காலை எழுந்து குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். காலை நேரத்தில்தான் பித்தம் உடலில் பரவும், அப்போது குளிப்பது உடம்பிற்கு நல்லது.

தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல அமைதியான சூழ்நிலையில் இருந்து படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும்.

படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்துவிட வேண்டும்.

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தி ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கவும், தண்ணீர் குடித்து நாளை முடிக்கவும்.

நாற்பது வயதிற்கு மேல் சைவ உணவை உண்டு, அசைவ உணவை குறைத்துக்கொள்வது நல்லது.

கோபம், எதிர்ப்பார்ப்பு, துக்கம், ஏமாற்றம், தோல்வி, அவமானம் போன்ற உணர்ச்சிகள் உடல் நலத்தை மிகவும் பாதிக்க வல்லது. இவைகளை போக்கும் வழிமுறைகளை அறிந்து, நல்ல நூல்கள் , நண்பர்கள், மருத்துவர்கள் உதவியுடன் உணர்ச்சிகளை குறைத்து அதில் மூழ்கிவிடாமல் வாழ்வது நலம்.

எதிர்காலத்தை நோக்கி திட்டமிட்ட நிகழ் காலத்தை இழந்து விடாமல், ஒவ்வொருநொடியும் ரசித்து வாழ்தல், சிரித்த முகத்துடன் இருத்தல், நேர்மையான சிந்தனையை கொண்டிருத்தல், உள்ளொன்று வைத்து புறம் பேசாமல் இருத்தல், குழந்தைத் தன்மையை கடைபிடித்தல், இறுக்கமாக இல்லாமல் வெளிப்படையாக இலகுவாக இருத்தல், எண்ணம்-சொல்-செயல்-எழுத்து-வாழ்க்கை ஆகியவற்றில் முரண்பாடு இல்லாமல் இருத்தல் போன்றவை நலம்.

ஆண்டிற்கு சிலமுறை தினம் செய்யும் வேளைகளில் இருந்து விடுபட்டு பிடித்த இடத்திற்கு, பிடித்த நண்பர்களுடன், குடும்பத்துடன், உறவினர்களுடன் சுற்றுலா செல்லுதல் மனதை மகிழ்ச்சிப் படுத்தும்.

நன்றி: திருமதி பிரியா துரை, நாட்டு மருந்து

உங்கள் கவனத்திற்கு-30: சிவ பக்தர்கள் கவனத்திற்கு

#2019 ஆண்டின்  பிரதோஷ அட்டவணை#

மே மாதம் 3 பிரதோஷங்கள்  உயர்ந்த 2 சனிப்பிரதோஷங்கள் வருகின்றன 

3/1/2019 வியாழக்கிழமை பிரதோஷம்

18/1/2019 வெள்ளிக்கிழமை  பிரதோஷம்

2/2/2019 சனிக்கிழமை சனிப்பிரதோஷம்

17/2/2019 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்

3/3/2019 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்

18/3/2019  திங்கட்கிழமை சோமபிரதோஷம்

2/4/2019 செவ்வாய்க்கிழமை பிரதோஷம்

17/4/2019 புதன்கிழமை  பிரதோஷம்

2/5/2019 வியாழக்கிழமை பிரதோஷம்

16/5/2019 வியாழக்கிழமை பிரதோஷம்

31/5/2019 வெள்ளிக்கிழமை  பிரதோஷம்
.
14/6/2019 வெள்ளிக்கிழமை  பிரதோஷம்

30/6/2019 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்

14/7/2019 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்

29/7/2019 திங்கட்கிழமை சோமபிரதோஷம்

12/8/2019 திங்கட்கிழமை சோமபிரதோஷம்

28/8/2019 புதன்கிழமை பிரதோஷம்
.
11/9/2019 புதன்கிழமை பிரதோஷம்

26/9/2019 வியாழக்கிழமை பிரதோஷம்

11/10//2019 வெள்ளிக்கிழமை  பிரதோஷம்

25/10/2019  வெள்ளிக்கிழமை  பிரதோஷம்

9./11/2019  சனிக்கிழமை சனிப்பிரதோஷம்

24/11/2019 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்

9/12/2019 திங்கட்கிழமை சோமபிரதோஷம்

23/12/2019 திங்கட்கிழமை சோமபிரதோஷம்

சுற்றுச்சூழல்-40: கழிவுப் பிளாஸ்டிக் சாலைகள்

பிளாஸ்டிக் ஒழிப்பில் இந்தியாவுக்கே முன்னோடியாக விளங்கும் தமிழ்நாடு - எப்படி?

"பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் அமைக்கப்படும் சாலைகளால் அடுத்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள மொத்த பிளாஸ்டிக் கழிவுகளையும் அழிக்க முடியும்."

உலகமே பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அச்சுறுத்தலாக பார்த்துக் கொண்டிருக்கிறது.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் இந்த பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்க பல்வேறு ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நாம் தூக்கி எறியும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு பளபளக்கும் சாலைகளை அமைக்கும் பணி தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ளது.

திருப்பூரை சேர்ந்த சி.எம்.ஆர். பிட்பிளாஸ்ட்(CMR Bitplast) என்கிற தனியார் நிறுவனமும் கரூர் மாவட்ட நிர்வாகமும் இணைந்து ஈரச் செயல்முறை மூலம் தொலைதூர கிராமப்புறங்களில் பிளாஸ்டிக் சாலைகளை அமைத்து வருகின்றனர்.

பிளாஸ்டிக் சாலைகளை அமைக்க தொடக்கப்பணியாக கரூர் மாவட்டத்தில் அரசின் உதவியுடன் சுய உதவிக் குழுக்கள் மூலம் பிளாஸ்டிக்கை பிரித்தெடுக்கும் பணி நடைபெறுகிறது. பிரித்தெடுக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை கிலோ ஒன்றுக்கு ரூ. 6 முதல் 10 வரை இந்த நிறுவனம் கொள்முதல் செய்கிறது.

இதன் பின்னர் இந்தக் கழிவுகள் நறுக்கும் இயந்திரத்தின் மூலம் சிறிய சிறிய பிளாஸ்டிக் துகள்களாக மாற்றப்படுகின்றன.

இதனையடுத்து டைஜெஸ்டர் எனப்படும் இயந்திரத்தில் கொட்டப்படும் பிளாஸ்டிக் துகள்களுடன் வெப்பநிலையை நிலைப்படுத்த விவசாயத்தில் இருந்து கிடைக்கும் ஒரு திரவத்தையும் சேர்க்கின்றனர். பின்னர் இதனுடன் தார் சேர்க்கப்பட்டு ஒரு கலவையாக இறுதி வடிவம் பெறுகிறது.

இதன் மூலம் தான் பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கப்படுகின்றன.

பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்க முடியுமா?

பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் அமைக்கப்படும் சாலைகளால் அடுத்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள மொத்த பிளாஸ்டிக் கழிவுகளையும் அழிக்க முடியும் என்கிறார் சிஎம்ஆர் பிட்பிளாஸ்ட் நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு இயக்குநர் வெங்கட சுப்பிரமணியன்.

"கிராமப்புறங்களில் அமைக்கப்படும் சாலைகளில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் 800 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்க முடியும். மாநில நெடுஞ்சாலைகளில் ஒரு கிலோமீட்டர் பரப்பளவில் 2000 முதல் 2500 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்க முடியும். இதே போன்று தேசிய நெடுஞ்சாலைகளில் 4000 கிலோ முதல் 8000 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்க முடியும்" என்கிறார் வெங்கட சுப்பிரமணியன்.

பிளாஸ்டிக் சாலைகளின் உறுதித் தன்மை

ஈரச் செயல்முறை மூலம் அமைக்கப்படும் இந்த பிளாஸ்டிக் சாலைகள் மற்ற சாலைகளுடன் ஒப்பிடும்போது கூடுதல் உறுதித் தன்மையுடன் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்திய சாலை கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்றுள்ள இந்த பிளாஸ்டிக் சாலைகளுக்கு திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் உறுதித் தன்மைக்கான சான்றும் வழங்கப்பட்டுள்ளது.

"மற்ற சாலைகளின் உறுதித் தன்மை மூன்று ஆண்டுகள் என்றால் இந்த பிளாஸ்டிக் சாலைகள் நான்கு ஆண்டுகளுக்கும் அதிகமாக உழைக்கும். மழையால் ஏற்படும் பள்ளங்களை இந்த சாலைகளில் பார்க்க முடியாது" என்கிறார் சிஎம்ஆர் பிட்பிளாஸ்ட்(CMR Bitplast) நிறுவனத்தின் இயக்குநர் நாகராஜன்.

விரிவுபடுத்தப்படும் பிளாஸ்டிக் சாலைகள்

தற்போது கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் அமைக்கப்பட்டு வரும் இந்த பிளாஸ்டிக் சாலைகளை தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

"பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 150 கிலோ மீட்டருக்கு பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கவுள்ளோம். மேலும் தமிழக அரசும் 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சாலைகளை அமைக்க அனுமதி அளித்துள்ளனர். இதன் மூலம் 400 முதல் 500 டன் பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்க முடியும்" என்கிறார் கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை செயற் பொறியாளர் சடையப்பன்.
பிளாஸ்டிக் மாசில்லா தமிழகத்தை உருவாக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த பிளாஸ்டிக் சாலைகளும் ஒரு தீர்வாக அமையும் என்று நம்பப்படுகிறது.

நன்றி: திரு.அஜித்ராஜ், புதிய தகவல்

சிரித்து வாழவேண்டும்-87:

வரலாற்றில் முத்திரை பதித்தவர்கள்-26: தொ.மு.சி மறைந்த நாள் இன்று

*தொ. மு. சிதம்பர ரகுநாதன் மறைந்த நாள் இன்று*)

(அக்டோபர் 20, 1923 – டிசம்பர் 31, 2001) சிறுகதை, நாவல், விமரிசனம், ஆய்வு, மொழிபெயர்ப்பு, நாடகம், வாழ்க்கை வரலாறு எனப் பலதுறைகளிலும் எழுதியவர். பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். ரகுநாதனின் எழுத்துக்கள், ஆய்வுகள், விமரிசனங்கள் யாவும் தமிழில் மார்க்சிய சிந்தனைகளை வளர்த்தது.

தொ. மு. சிதம்பர ரகுநாதன்
பிறப்பு
அக்டோபர் 20, 1923
திருநெல்வேலி, தமிழ் நாடுஇறப்புடிசம்பர் 31, 2001
பாளையங்கோட்டைதொழில்எழுத்தாளர், விமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர்நாடுஇந்தியர்எழுதிய காலம்1941–1999இலக்கிய வகைசமூக புதினங்கள், இலக்கிய விமர்சனம், கவிதைகள்இயக்கம்சோஷியலிச யதார்த்தவாதம்குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)பஞ்சும் பசியும்
பாரதி: காலமும் கருத்தும்
இளங்கோ அடிகள் யார்?

*வாழ்க்கைக் குறிப்பு*

ரகுநாதன் திருநெல்வேலியில்அக்டோபர் 21, 1923ல் பிறந்தார். இந்திய ஆட்சிப் பணியில் பணியாற்றிய இவரது அண்ணன் பாஸ்கர தொண்டைமான் ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளர். இவரது ஆசிரியர் அ. சீனிவாச ராகவன் இவருக்கு நல்ல வழிகாட்டியாகவும் இருந்தார். இவரது முதல் சிறுகதை 1941ல் பிரசண்ட விகடனில் வெளிவந்தது. இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக 1942ல் சிறைக்குச் சென்றார். 1944ல் தினமணியில் உதவி ஆசிரியராகவும் பின்பு 1946ல் முல்லை என்ற இலக்கியப் பத்திரிக்கையிலும் பணியாற்றினார். இவரது முதல் புதினமான புயல் 1945ல் வெளியானது. இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கது 1948ல் வெளியான இலக்கிய விமர்சனம். அதைத் தொடர்ந்து 1951ல் பஞ்சும் பசியும் என்ற புதினத்தை எழுதினார். இப்புதினம் செக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு 50000 பிரதிகள் விற்பனையானது. அதே ஆண்டு தனது சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். 1954–56 வரை சாந்தி என்ற முற்போக்கு இலக்கிய மாதஇதழை நடத்தினார். அந்த இதழ் மூலம் டேனியல் செல்வராஜ், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி. ராஜநாராயணன் போன்ற இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். அடுத்த பத்தாண்டுகளுக்கு அமைப்புசாரா எழுத்தாளராக பணிபுரிந்தார். 1960ல் சோவியத் நாடு பதிப்பகத்தில் சேர்ந்து நிறைய ரஷியப் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளைத் தொகுத்து வெளியிட்டார். அவர் மொழிபெயர்ப்பில் குறிப்பிடத்தக்கவை: மாக்சிம் கார்க்கியின் தாய் மற்றும் விளாடிமிர் மயகொவ்ஸ்கியின் இரங்கற்பா விளாடிமிர் இலிச் லெனின். அவரது இலக்கிய விமர்சன நூலான பாரதி - காலமும் கருத்தும் 1983ல் சாகித்திய அகாதமி விருது பெற்றது. 1985ல் இளங்கோ அடிகள் யார் என்ற சமூக வரலாற்று ஆய்வினை வெளியிட்டார். 1988ல் சோவியத் நாடு இதழிலிருந்து ஓய்வு பெற்றார். 2001ல் பாளையங்கோட்டையில் காலமானார்.

தமிழ் எழுத்தாளர் புதுமைப்பித்தன்இவரது நண்பர். 1948ல் புதுமைப்பித்தன் இறந்தபின் அவரது படைப்புகளைச் சேகரித்து வெளியிட்டார். 1951ல் தன் நண்பரின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டார். 1999ல் புதுமைப்பித்தன் கதைகள் - விமரிசனங்களும் விஷமங்களும் என்ற நூலை வெளியிட்டார். அந்நூல் 1951ல் வெளியான வாழ்க்கை வரலாற்றின் தொடர்ச்சியாகவும் புதுமைப்பித்தனின் படைப்புகளில் பிறமொழித் தழுவல் மிகுந்துள்ளதாக அவரது சமகால எழுத்தாளர்கள் (பெ. கோ. சுந்தரராஜன்போன்றோர்) முன் வைத்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடியாகவும் அமைந்திருந்தது. 1942 முதல் 1962 வரை இவரது எழுத்துலக வாழ்க்கை முழுவேகத்தில் இருந்தது. இவர் ஒரு சோஷியலிச யதார்த்தவாத எழுத்தாளர். தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள் படும்பாட்டைத் தனது பஞ்சும் பசியும் நூலில் தெளிவாகக் காட்டியுள்ளார். அவரது கொள்கைகளை அந்நூல் பிரதிபலிக்கிறது. திருச்சிற்றம்பலக் கவிராயர் என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். ரகுநாதன் மொத்தம் 4 சிறுகதைத் தொகுப்புகள், 3 கவிதைத் தொகுப்புகள், 3 புதினங்கள், 2 நாடகங்கள் மற்றுமொரு வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார்.

*சிறப்பம்சங்கள்*

சோசலிச எதார்த்தவாத நாவல் இலக்கியப் போக்கைத் தன் “பஞ்சும் பசியும்” நாவல் மூலம் தொடங்கி வைத்தார் .தமிழ் இலக்கிய ஆய்வை இலக்கண ஆய்வு நிலையிலிருந்தும், ரசனை ஆய்வு நிலையிலிருந்தும் சமூகநிலை ஆய்வு என்னும் ஆழ மான தளத்துக்குக் கொண்டு சென்று, ஆய்வின் எல்லையை விசாலப்படுத்தினார் . “பாரதியும் ஷெல்லியும்”, “கங்கையும் காவிரியும்” ஆகிய நூல்களின் மூலம் ஒப்பிலக்கியத் தடத்தைத் தமிழில் விரிவுபடுத்தியவர். “ இளங்கோவடிகள் யார்?” என்னும் நூலின் வழி, தமிழகத்தில் சமய உருவாக்கங்களைப் போல நடந்த புதுப்புதுச் சாதி உருவாக்கங் களைத் துலக்கி, சாதி இறுக்கங்களின் பொய்மையைப் பளிச்சென வெளிப்படுத்தியவர்.

*விருதுகள்*

சாகித்திய அகாதமி விருது – 1983

சோவியத் லேண்ட் நேரு விருது (தாய் மற்றும் லெனினின் கவிதாஞ்சலிக்காக)

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை பரிசு

பாரதி விருது - 2001

எழுதிய நூல்கள்தொகு

*சிறுகதை*

சேற்றில் மலர்ந்த செந்தாமரை

க்ஷணப்பித்தம்

சுதர்மம்

ரகுநாதன் கதைகள்

*கவிதை*

ரகுநாதன் கவிதைகள்

கவியரங்கக் கவிதைகள்

காவியப் பரிசு

*நாவல்*

புயல்

முதலிரவு (தமிழ்நாட்டரசால் தடைசெய்யப்பட்டது)

கன்னிகா

பஞ்சும் பசியும்' (நெசவாளியரின் துயர் சொல்லும் நாவல்)

*நாடகம்*

சிலை பேசிற்று

மருது பாண்டியன்

*விமரிசனம்*

இலக்கிய விமரிசனம்

சமுதாய விமரிசனம்

கங்கையும் காவிரியும்

பாரதியும் ஷெல்லியும்

பாரதி காலமும் கருத்தும்

புதுமைப்பித்தன் கதைகள் - சில விமரிசனங்களும் விஷமத்தனங்களும் (1999)

*வரலாறு*

புதுமைப்பித்தன் வரலாறு

*ஆய்வு*

இளங்கோவடிகள் யார்? (1984)

*மொழிபெயர்ப்பு*

தாய் (கார்க்கியின் - தி மதர்).

லெனினின் கவிதாஞ்சலி (மயகொவ்ஸ்கியின் இரங்கற்பா - விளடிமிர் இலிச் லெனின்).

*நன்றி: தமிழ் விக்கிப்பீடியா*

****
நான் இவரை அதிகம் படித்ததில்லை. இவரது பஞ்சும் பசியும் என்ற நாவலையும் ஒருசில சிறுகதைகளையும், கவிதைகளையும் மட்டுமே படித்திருக்கிறேன். ஒரு சாதனையாளர், சீரிய சிந்தனையாளர் என்ற முறையில் இவரது நினைவைப் போற்றுகிறேன்.

வரலாற்றில் முத்திரை பதித்தவர்கள்-25: நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடன் பிறந்த நாள் இன்று

பிறப்பு: திசம்பர் 311947, வீர நாராயண மங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்) )

நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் க.சுப்பிரமணியம். துணைவியார் பெயர் சந்தியா சுப்பிரமணியம். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார்.

நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் என்ற சிறுகதைத்தொகுதி மூலம் புகழ்பெற்றார். தலைகீழ்விகிதங்கள் இவரது முதல் நாவல்.

இவரின் மிக முக்கியமான அடையாளம் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலானஎழுத்துநடை. தலைகீழ் விகிதங்கள்நாவலை இயக்குநர் தங்கர்பச்சான்சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார்.

*பெருமைகளும் விருதுகளும்*

2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது "சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது.

கனடாவின் இலக்கியத்தோட்டத்தின்2012 ஆம் ஆண்டுக்கான இயல்விருது தொராண்டோவில்இவருக்கு அளிக்கப்பட்டது

*படைப்புகள்*

*புதினங்கள்*

1977 தலைகீழ் விகிதங்கள்

1979 என்பிலதனை வெயில்காயும்

1981 மாமிசப்படைப்பு

1986 மிதவை

1993 சதுரங்க குதிரை

1998 எட்டுத் திக்கும் மதயானை


*சிறுகதை தொகுதிகள்*

1981 தெய்வங்கள் ஆடுகள் ஓநாய்கள்

1985 வாக்குப்பொறுக்கிகள்

1990 உப்பு

1994 பேய்க்கொட்டு

2002 பிராந்து

2004 நாஞ்சில் நாடன் கதைகள்

சூடிய பூ சூடற்க

முத்துக்கள் பத்து (தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு)

கான் சாகிப்

கொங்குதேர் வாழ்க்கை

*கவிதை*

2001 மண்ணுள்ளிப் பாம்பு

பச்சை நாயகி

வழுக்குப்பாறை

*கட்டுரைகள்*

2003 நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை

2003 நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று

நதியின்பிழையன்று நறும்புனல் இன்மை

தீதும் நன்றும்

திகம்பரம்.

காவலன் காவான் எனின்

அம்பறாத்தூணி (கம்பராமாயணம் குறித்த கட்டுரை தொகுதி)

அகம் சுருக்கேல்

எப்படிப் பாடுவேனோ?

2015 கைம்மண் அளவு (குங்குமம் வார இதழ் கட்டுரைகள்)

*நன்றி: தமிழ் விக்கிப்பீடியா*

*******

இத்தருணத்தில், நான் பெரிதும் போற்றும் தமிழின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும், சீரிய சிந்தனையாளருமான திரு நாஞ்சில் நாடன் அவர்கள் தனது குடும்பத்தினருடன் சகல நலமும் பெற்று, சீரும் சிறப்புடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

வரலாற்றில் சில மைல் கற்கள்-31: டிசம்பர் 31


ரலாற்றில் சில மைல் கற்கள்: டிசம்பர் 31

ஆங்கிலேயர் ஆட்சிக்கான விதை (1599)

இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு வித்திட்ட தினம் இன்று. இந்தியாவில், வர்த்தகம் மேற்கொள்ளும் தனி உரிமையை ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய நிறுவனத்திற்கு பிரிட்டன் மகாராணி எலிசபெத் வழங்கிய தினம். அதனைத் தொடர்ந்து இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி, இந்தியாவிற்கான தனது கப்பல் பயணத்தை ஆரம்பித்தது. பிறகு மெல்ல மெல்ல இந்தியாவை அடிமைப்படுத்தி ஆள ஆரம்பித்தது.

ஒளிவிளக்கு அறிமுகம் (1879)
அமெரிக்காவில் பிறந்த தாமஸ் ஆல்வா எடிசன் உலகிற்கே வெளிச்சம் கொடுத்த நாள் இன்று. 1979ம் ஆண்டு இதே நாள்தான் ஒளிவிளக்கை உருவாக்கினார் எடிசன். மின் விளக்கு மட்டுமல்லாமல், போனோகிராப், டெலிபிரின்டர், பேட்டரி, சிமென்ட், நிலக்கரி, கேமரா, ஒலி நாடா உள்ளிட்ட ஏராளமான கண்டுபிடிப்புகளை உருவாக்கினார்.18 ஆம் நூற்றாண்டில் வாயு விளக்குகளே பயன்பாட்டில் இருந்த காலத்தில், மின் விளக்கு கண்டுபிடிப்பது பலரது பெரும் கனவாகவே இருந்தது. 1879ல் பிளாட்டினம் கம்பிச்சுருளை, வெற்றிட பல்ப் ஒன்றில் பயன் படுத்தி கட்டுப்படுத்திய மின்னோட்டத்தில் , உலகின் முதல் மின்விளக்கை உட்டன் என்பவருன் சேர்ந்து எடிசன் கண்டுபிடித்தார்.

நன்றி: Patrikai.com

30 டிச., 2018

எனக்குப் பிடித்த கவிதை-84: ஆத்மாநாமின், "வாழ்க்கைக் கிணற்றில்"

வாழ்க்கைக் கிணற்றில் – ஆத்மாநாம் (இருமொழிக் கவிதை)


வாழ்க்கைக் கிணற்றின்
மோக நீரில்
மோதுகின்ற
பக்கெட்டு நான்
பாசக்கயிற்றால்
சுருக்கிட்டு
இழுக்கின்ற
தூதன் யார்

(ஆத்மாநாம்)

oOo

I am a bucket
plopping into
the waters of desire
in the well of life
Who is that messenger
roping me up
Tying the knot
in the noose of death.

(மொழியாக்கம் – நகுல்வசன்)

நன்றி: பதாகை.காம்

ஆரோக்கிய முத்திரைகள்-18: திருவினி முத்திரை

இன்றைய திருக்குறள்-57:

குட்டிக்கதை-58:

தினசரி அதிகா​லையில் கிருஷ்ண​தேவராயருக்கு முகம் மழிப்பதற்கு சவரத் ​தொழிலாளி ஒருவன் அரண்ம​ணைக்கு வருவது வழக்கம்.

தினசரி கா​லையில் முகத்​தை மழித்து முடி​யைத் திருத்துபவராதலால் அந்தத் ​தொழிலாளியிடம் ​வேடிக்​கையாக எ​தையாவது​ பேசுவது கிருஷ்ண​தேவராயரின் வழக்கம்.

அவனும் மன்னர் ​கேட்கும் ​கேள்விகளுக்கு இணக்கமாகப் பதிலு​ரைப்பான்.

ஒருநாள் அவன் கிருஷ்ண​தேவராயருக்கு முகம் மழித்துக் ​கொண்டிருக்கும் ​போது,”நீ நாட்டு மக்களிடம் சகஜமாகப் பழகுபவனாயிற்​றே.

நமது நாட்டு மக்களின் வாழ்க்​கைத் தரம் எந்த நி​லையில் இருக்கிறது என்று உனக்குத்​ தெரிந்திருக்கு​மே என்றார். ”​

மேன்​மை தாங்கிய மகாராஜா அவர்க​ளே! தங்களு​டைய ஆட்சியில் மக்கள் நன்கு சுபிட்சமாக இருக்கின்றனர்.

மக்களின் ஒவ்​வொருவர் இல்லத்தில் கு​றைந்தபட்சம் எலுமிச்சம்பழம் அளவிற்குத் தங்கம் இருக்கிறது. அதனால் எவரும் கவ​லையில்லாமல் இருக்கின்றனர்” என்றார் சவரத்​தொழிலாளி.

சவரத்​ தொழிலாளி ​சென்ற பின்னர் எப்​போதும் ​போன்று மன்ன​ரைக் காண அப்பாஜி வந்தார்

அப்பாஜியிடம் சவரத் ​தொழிலாளி கூறிய​தை மன்னர் கூறினார். ”இவன் இப்படிக் கூற என்ன காரணம்? இவன் ​சொன்னது ​போன்று எப்படி ​எல்லோரிடமும் எலுமிச்சம்பழ அளவில் ​பொன் இருக்கும்? எலுமிச்சம்பழ அளவு ​பொன் என்பது சாதாரண மக்கள்​ வைத்திருக்க முடியாது! ​பெரும் பணக்காரர்களிடத்தில் அல்லவா இருக்கும்.

ஆ​கையினால் இதுபற்றித் ​தெரிந்து ​கொள்ள ​வேண்டும்!” என்று வினவினார்.

”இதற்கு வி​ரைவில் வி​டை​யைக் கூறுகி​றேன்” என்று அப்பாஜி மன்னரிடம் கூறிவிட்டுச் ​சென்றுவிட்டார்.

மறுநாள் வழக்கம்​போல் சவரத் ​தொழிலாளி அரண்ம​னைக்கு வந்து கிருஷ்ண​தேவராயருக்கு முகம் மழித்துக் ​கொண்டிருந்தான்.

அச்சமயம் அப்பாஜி, காவலர்க​ளை அ​ழைத்து ”சவரத் ​தொழிலாளியின் இல்லத்​தை ​சோத​னை ​செய்துவிட்டு வி​ரைவில் வாருங்கள்” என்று கட்ட​ளையிட்டார்.

காவலர்கள் சவரத் ​தொழிலாளியின் இல்லத்திற்குச் ​சென்று ​சோத​னை ​செய்த​போது, அடப்பப் பெட்டியில் எலுமிச்சம்பழ அளவுக்கு ​பொன் இருப்ப​தைக் கண்டு வந்து கூறினர்.

அத ​னை மன்னரிடம் ​கொடுத்துவிட்டு, மன்னர் ​பெருமா​னே! அடுத்த நாள் சவரத் ​தொழிலாளி வந்ததும், முதலில் ​கேட்டது ​போன்று ​கேளுங்கள். அவனிடமிருந்து ​வேறு விதமான பதில் கி​டைக்கும்” என்றார் அப்பாஜி.

வழக்கம் ​போல் கா​லை கிருஷ்ண​தேவராயருக்கு முகம் மழிக்க சவரத் ​தொழிலாளி வந்தமர்ந்தான்.

வரும்​போ​தே அவனது முகம் வாடியிருந்தது. அவன் தனது ​வே​லை​யை ஆரம்பிக்கும் சமயம்,

”இப்​​பொழுது குடிமக்கள் எவ்வாறு இருக்கிறார்கள்? ஏதாவது மாறுதல் உண்டாகியிருக்கிறதா?” என்று வினவினார் மன்னர்.

”​பெருமதிப்பிற்குரிய மகாராஜா அவர்க​ளே! அ​தை ஏன் ​கேட்கின்றீர்கள்? எல்​லோரும் மனக்கலக்கத்துடன் இருக்கின்றனர். ​

கையில் இருக்கும் எலுமிச்சம் பழ அளவு தங்கத்​தை இழந்துவிட்டால் மக்கள் எப்படி மகிழ்ச்சியுடன் வாழ முடியும்?” என்று சவரத்​ தொழிலாளி கண்களில் நீர் மல்க ​தொண்​டை அ​டைக்கக் ​கூறினான்.

அச்சமயம் வந்த அப்பாஜி, ”மன்னர் ​பெருமா​னே! இப்​போது வி​டை ​தெரிந்து விட்டதா? உலகத்திலுள்ள ஒவ்​வொருவரும் தன்னு​டைய மன இயல்புக்கு ஏற்பதான் மற்றவர்களின் நி​லை​யை நிர்ணயிக்கின்றனர்.

தன்​னைப் ​போல்தான் பிறரும் இருப்பார்கள் என்று நி​னைக்கின்றனர்.

தான் நல்ல வருமானத்துடன் வாழ்ந்தால் மற்றவர்களும் அப்படித்தான் வாழ்வார்கள் என்றும், தான் கஷ்டநி​லையில் வாழ்ந்தால் மற்றவர்களும் கஷ்டத்துடன் தான் வாழ்கிறார்கள் என்று மனப்பக்குவத்தில் வாழ்கின்றனர்” என்றார் அப்பாஜி.

உட​னே காவல​னை அ​ழைத்து, ”கஜானாவில் பாதுகாப்புடன் இருக்கும் எலுமிச்சம்பழ அளவு ​பொன்​னைக் ​கொண்டு வந்து சவரத் ​தொழிலாளியிடம் ​கொடுங்கள்” என்று ஆ​ணையிட்டார் மன்னர். ​

கொண்டு ​கொடுத்த ​பொன்னுடன் சிறிது ​பொன்னும் பரிசாகச் சவரத் ​தொழிலாளிக்குக் ​கொடுத்தார். அவனும் மனம் மகிழ்ந்து பணிவுடன் வணங்கி இன்முகத்துடன் ​வாங்கிச் ​சென்றான். மனித இயல்​பை விளக்கிக் காட்டிய அப்பாஜியின் அறிவுத் திற​மை​யைப் பாராட்டினார் கிருஷ்ண​தேவராயர்.

நன்றி: மனோகர் லக்ஷ்மண், புன்னகையரங்கம்