3 ஏப்., 2008

நெல்லையப்பன் கவிதைகள்-15: "தீர்ப்பு"

நெல்லையப்பன் கவிதைகள்-15

தீர்ப்பு

பள்ளியறை காமத்தை,
பள்ளிக்குள் கொண்டுவந்து,
பயிர்மேயும் வேலிகளுக்கு
என்ன தண்டனை?

சத்துணவில் கைவைத்து,
பருப்பு, எண்ணெய், முட்டைகளை,
பதம்பார்க்கும் படித்தவர்க்கு
என்ன தண்டனை?

பயிற்றுவிக்கும் பணியின்
மகத்துவத்தை உணராமல்,
கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்திற்கு
என்ன தண்டனை?

புத்தகங்களுக்கு
வெளியேயும் படிக்கலாம்,
புத்தகங்களுக்கு உள்ளும்
இளைப்பாறலாம்,
இது புரியாத ஆசிரியர்களுக்கு
என்ன தண்டனை?

நூல்களையும், மக்களையும்
விடாது படிப்பவரே ஆசிரியரெனில்,
படிப்பதையே நிறுத்திவிட்டவர்க்கு
என்ன தண்டனை?

தீர்ப்பெழுதிய பின்
தீர்மானிக்க வேண்டியவை:
ஆசிரியர்களுக்கான தகுதிகள்,
சம்பளம், உயர்தர பயிற்சி.

1 கருத்து:

nellaiappan சொன்னது…

Dear Mulla,
It is a pleasure to see our own writings in black and white.The time of posting the article in the blog shows your affection and commitment.Take care of your health.At times, when it comes to my own,I Feel how poor Iam,in the art of translating my feeling in to words.Thank u so much for every thing.
-nellai.