7 ஆக., 2008

ஆன்மீக சிந்தனை-1:

இன்றைய ஆன்மீக சிந்தனை
------------------------------------------------------
விழிப்புணர்வு இல்லாமல் நீங்கள் தூவும் பல விதைகள்தான் விஷச் செடிகளாக உங்களைச்சுற்றி வளர்ந்து விடுகின்றன. அவற்றைக் கொண்டு வந்து கடவுள் உங்கள் தோட்டத்தில் நட்டு விட்டதாக நினைப்பதில் ஒரு அர்த்தமும் இல்லை. முழுக் கவனத்துடன் உங்கள் வாழ்க்கைப்பாதையை நீங்களே விரும்பி அமைக்கும் திறமை இருந்தும், அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பது உங்கள் தவறாகும். உங்கள் உடலின் மீது ஆளுமை கொண்டவராக நீங்கள் இருப்பீர்களானால் வாழ்க்கையின் இருபது சதவிகித விதி உங்கள் கைக்கு வந்துவிடும். மனதை ஆளப் பழகிக் கொண்டால், அறுபது சதவிகித விதியை நிர்ணயிக்க முடியும். உயிர்ச்சக்தியை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டால், விதியை இயக்குபவரே நீங்கள்தான். - சத்குரு ஜக்கி வாசுதேவ்
நன்றி : தினமலர், (ஆன்மிகம் அறிவோமா), மதுரை, ஜூன் 23, 2008.

கருத்துகள் இல்லை: