11 ஆக., 2008

பட்டுக்கோட்டை பாடல்-1: "சின்னஞ்சிறு கண்மலர்...."

சின்னஞ்சிறு கண்மலர்
செம்பவள வாய்மலர்
சிந்திடும் மலரே ஆராரோ!
வண்ணத்தமிழ்ச் சோலை
மாணிக்க மாலை ஆரிரோ,
அன்பே ஆராரோ!
ஏழை நம் நிலையை எண்ணி
நொந்தாயோ!
எதிர்கால வாழ்வில்
கவனம் கொண்டாயோ!
நாளை உலகம்
நல்லோரின் கையில்
நாமும் அதிலே
உய்வோம் உண்மையில்
மாடிமனை வேண்டாம்
கோடி செல்வம் வேண்டாம்
வளரும் பிறையே நீ போதும்!

கருத்துகள் இல்லை: