11 ஆக., 2008

எனக்குப் பிடித்த கவிதை-30: "துணிவுடன் உலகை வெல்லுங்கள்! "

கடலுக்கு பயந்தவன்
கரையில் நின்றான்
அதைப் படகினில் கடந்தவன்
புது உலகைக் கண்டான்.
பயந்தவன் தனக்குப் பகையானான்.
என்றும் துணிந்தவன்
உலகிற்கு ஒளியாவான்.
என்னால் முடியும் என்றுநம்புங்கள்.
துணிவுடன் உலகை வெல்லுங்கள்!

(ஆசியாவின் மிகப்பெரிய 'Spoken English' பயிற்சி நிறுவனமான 'வீட்டா" (VETA) நிறுவனத்தின் சென்னை-தி.நகர் அலுவலகம் இப்படியொரு 'டானிக்' கவிதையோடுதான் நம்மை வரவேற்கிறது. இருபது லட்சம் பேருக்கு மேல் போதித்து சாதனை படைத்த நிறுவனம்! உள்நாட்டில் 200 கிளைகள், கடல் கடந்து சிங்கப்பூரிலும் தற்போது கிளை!)

(நன்றி: 'மல்லிகை மகள்', தமிழ் மகளிர் மாத இதழ், மார்ச் 2008)

கருத்துகள் இல்லை: