12 ஆக., 2008

ஆன்மீக சிந்தனை-3:

அன்பு விரிவடைவதற்கு ஏற்ப உயிர் வாழ்க்கைக்கு வலிவு அதிகம் உண்டாகின்றது. பிற உயிர்களிடத்து அன்பு பாராட்டுவதற்கு ஏற்ப ஆனந்தம் தன்னிடம் ஒங்குவதை ஆத்மா சாதகன் அனுபவத்தில் காண்கின்றான். 'அன்பும் சிவமும் ஒன்று' என்பது ஆப்த வாக்கியம். 'ஆனந்தமும் பரமும் ஒன்று' என்பதும் ஆப்த வாக்கியம். ஆதலால் அன்பை வளர்க்கின்றவர்கள் எல்லோரும் பரம்பொருளைச்சாரும் பாங்குடையவர் ஆகின்றனர். - ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்

கருத்துகள் இல்லை: