15 ஜன., 2009

திருவள்ளுவர் தினம்

Thiruvalluvar
இன்று திருவள்ளுவர் தினம். உலகப் பொது மறை திருக்குறளை உலகிற்கீந்த உத்தமர்; இரண்டு வரிகளில் பிரபஞ்சத்தையே அடக்கும் வித்தை கற்றவர்; தமிழின் தலை சிறந்த நீதிநூலை வழங்கியவர்; அவர் உரைத்த குரள்நெறிப்படி வாழ்ந்து காட்டியவர் - அப்பெருமகனாரை உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இன்று போற்றி, வணங்கி மகிழ்கின்றனர். பைபிள், பகவத் கீதைக்கு அடுத்தபடியாக உலகில் அதிக மொழிகளில் வடிக்கப்பட்ட நூல் என்ற பெருமை திருக்குறளுக்கு உண்டு. எக்காலத்திற்கும், எவ்வினத்தவர்க்கும் பொதுவான வாழ்கலை நூலாம் வள்ளுவத்தை நாளும் போற்றிப் பயின்று, அதன்படி வாழ்தலே வள்ளுவப் பெருந்தகைக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலியாகும்.

எனக்கு மிக, மிகப் பிடித்த சில குறள்கள்:

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு."
"புறத்தூய்மை நீரான் அமையும் அகத்தூய்மை
வாய்மையால் காணப் படும்."
"பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று."

"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்."
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்."

"உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து."

"ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையான் உழை."

"அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை."
"எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்."

"அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்."

கருத்துகள் இல்லை: