13 பிப்., 2009

நெல்லையப்பன் கவிதைகள்-51: "வாய்ச்சொல் வீரர்கள்"

ஆயுத பூஜைக்கு
மாணவ மாணவியர்
பூஜையில் வைத்தனர்
புத்தகங்களை எல்லாம்.

தொழிற்சாலையில்
பூஜை போட்டனர்
உபகரணங்களுக்கு;

பலசரக்குக் கடையில்
பெரிதாய் பூஜை
தராசு, எடைக்கற்களுக்கு;

முடிதிருத்தகத்தில்
பூஜையின் நாயகர்
கத்தரிக்கோலும் கண்ணாடியும்;

பூஜையில்
எழுத்தாளன் நான்
பேனாவை வைத்தேன்;

ஓட்டுனர்கள்
லாரிகளைக் குளிப்பாட்டி
நிறுத்தினர் ஓட்டத்தை;

அட! அந்தப் பெண்களும்
அன்று ஒருநாள் மட்டும்
எண்ணைக் குளியல் போட்டு
விடுமுறை விட்டனர் தொழிலுக்கு;

ஆகா! நம் அரசியல் தலைவர்கள்
கட்சி பேதமின்றி
ஆயுத பூஜைக்கு
மௌனமாய் இருக்கலாம்!

கருத்துகள் இல்லை: