24 அக்., 2009

இன்று படித்தவை-8: அக்டோபர் 24, 2009

8. 'Who Will Cry When You Die?: Life Lessons from The Monk who sold his Ferrari' by Robin S.Sharma (A Jaico Book)

என்னுடைய ஹீரோக்களில் ஒருவர் ராபின் ஷர்மா. இவரது நூல்களான 'The Monk who sold his Ferrari", "The Greatness Guide-I", "The Greatness Guide-II", "Mega Living", "The Saint, The Surfer and The CEO", "Discover Your Destiny" படித்து மகிழ்ந்திருக்கிறேன்; அவை இன்றும் என் புத்தக அலமாரியை அலங்கரிக்கின்றன. நினைத்தபோதெல்லாம் அவற்றை புரட்டிப் பார்க்கிறேன்.

இவரது சுய முன்னேற்ற நூல்களும், இவரது கருத்தரங்கங்களும் உலகப் புகழ் பெற்றவை. லட்சக் கணக்கில் விற்பவை இவரது நூல்கள்.

இந்த நூலில் 101 தலைப்புகளில் அருமையான சிந்தனைகளை வாரி வழங்கியிருக்கிறார். வாழ்க்கையில் முன்னேற வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற வேட்கை உள்ளவர்கள் இவரது நூல்களை வாங்கிப் படித்துப் பயன் பெறவேண்டும்.

இன்று நான் வாசித்தது 'செயல்' எவ்வளவு முக்கியம் என்பது. நம்மில் பலர் அற்புதமாகச் சிந்திக்கிறோம், நிறைய மேன்மையான விஷயங்களைப் படிக்கிறோம். ஆனால் அவற்றை அன்றாட வாழ்வில் கடைப் பிடிக்கிறோமா, அவற்றை செயல் படுத்துகிறோமா என்றால் இல்லை. அறிவு என்பது உள்ளுறை ஆற்றல். அதை செயல்படுத்தும்போது மட்டுமே அது முழுமை பெறுகிறது.

கனவு காணல், மனக்கோட்டை கட்டுதல் எல்லாம் ஒ.கே. ஆனால் அந்தக் கனவுகளை நனவாக்க வேண்டாமா? மனக்கோட்டைகளை நிஜக்கோட்டைகளாக்க வேண்டாமா? அப்படியானால் செயல்படுங்கள்; திட்டமிட்டு செயல்படுங்கள், செய்துகாட்டுங்கள். பெரிய பெரிய கற்பனைகளைவிட, ஒரு சிறிய செயல் எவ்வளவோ மேன்மையானது.

அடுத்து...?

கருத்துகள் இல்லை: