20 ஜூலை, 2010

யோக சித்தி-32: உலகுயிர் -3

போக்கு  வரவற்ற  பூரனணிக்  கூடுதற்கே,
மீக்கூர்த்துச்  செல்லுமுயிர் மேல்.      

மீக்கூர்த்தலாவது  மேன்மேலும்  வளர்ச்சி  பெற்று  அறிவில்  முன்னேறல்.  இறப்பு, பிறப்பு, போக்குவரத்து இல்லாமல் தானே  தானாக  தற்பரானந்தனாக  விளங்கும்   பரிபூரணனான   இறைவனைக்  கலக்கவே  ஜீவாத்மா  அறிவு முதிர்ந்து  மேன்மேலும்  உயரச் செல்கிறது.    

கருத்துகள் இல்லை: