21 ஆக., 2012

இன்று ஒரு தகவல்-33: பாலிதீன் பயங்கரம்

ஆண்டுக்கு  ஐம்பது லட்சம் டன்  அளவு பாலிதீன் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.  பயன்படுத்தியபின், இவை அனைத்தும் குப்பையாக மண்ணுக்குள் புதைகிறது.  பாளிதீனை  மக்கவைக்கும்  ஆற்றல் நுண்ணுயிர்களுக்கு இல்லை.  எனவே இவை சிதையாமல், பூமிக்கு ஒரு சுமையாக, மண்ணின் வளத்தை கடுமையாக பாதிக்கும் ஒரு தீய பொருளாக மாறிவிடுகிறது.  இதன் பின்விளைவாக,  இயற்கை சீற்றங்கள் ஏற்படலாம்.  ஒரு கைப்பிடி மண்ணில் ஆறாயிரம் கோடி நுண் உயிரிகள் உள்ளன.  பிளாஸ்டிக் கசடுகள் இந்த நுண்ணுயிரிகளை அழித்துவிடும்.  எனவே பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து, மீண்டும் பயன்படுத்த வேண்டும்.  ஒருபோதும் அவற்றை மண்ணோடு கலக்கவிடக்கூடாது. 

ஆதாரம்: ........................

கருத்துகள் இல்லை: