15 ஆக., 2012

யோக சித்தி-66: அறிவு-3

போக்குவரவற்ற பொருள் ஆன்மா;  நான்அதுவென்றே
ஏக்கமற்று இன்புற்று இரு.

இங்கு வந்து வாழ்ந்து செல்வதெல்லாம் இயற்கையுடலே, வினைச்சுமையே.  நான் ஆன்மா;  ஆன்மா போக்குவரவற்றுத்  தானே  தானாகத்  தாக்கற்றிருக்கும் நிலைப்பொருள்.  'அதுவே நான்'  என்று அறிந்து தெளிக.  அந்த  அறிவால்  உலகின் முக்குண விகாரங்களால்  வரும் ஏக்கம், கவலை, அச்சம்  அற்று,  எப்போதும் தன்னுளே தானாக, உள்ளத்தில் உள்ளபடி  இருந்து  இன்புறுக.   

கருத்துகள் இல்லை: