17 ஆக., 2012

யோக சித்தி-68: அறிவு-5


நம்பு; நினை; முயல்; நாடொருமை;  ஞானமாம்
இன்பம்  பெருகும்  இனிது.

நான் சுத்தான்மா என்று நம்பு;  உறுதிகொள்;  அதையே நினை;  உள்ளார்ந்து தியானி.  முதலில் தியானம் ஓடாது, சித்தம் அலையும்.  சித்தத் திரைகளை வைராக்கியத்தாலும், பயிற்சியினாலும் அடக்கமுயல்;  சாதனம் செய்.  வேறு நினைப்புகளை விலக்கி, ஒருமை நாடு;  உள்ளே ஏகாக்கிரப்படு.  மனம் வெளிச்சென்றால் கவலை;  உட்குவிந்தால் களிப்பு.  மனம் உள்ளத்தில் நிலைத்தால் நான் ஆன்மா என்ற ஞானம் உண்டாகும்.  அதன் இன்பம் நாளுக்கு நாள்  இனிதாகப் பெருகும்.

கருத்துகள் இல்லை: