30 டிச., 2015

எனக்குப் பிடித்த கவிதை-77: கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பூகோளம் மாறிப்போன கதை


கிராமம் வளர்ந்துதானிருக்கிறது.
முகத்தை மூடி
தாடி வளர்ந்த மாதிரி
ஆளிருக்கும் வீடுகளில்
திண்ணையில்லை
திண்ணையுள்ள வீடுகளில்
ஆட்களில்லை
முன்னொரு காலத்தில்
இலவசமாய்க் கிடைத்த
பேச்சுத் தோழமை
இன்று
கட்டணங்களுக்குட்பட்டது
அல்லது
தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பது
...
வீட்டுக்குள் எல்லோரும்
கதவடைத்துக் கொண்டதால்
வந்து வந்து தேய்கிறது
ரசிகர்கள் இல்லாத ராத்திரி நிலா.


-    (ஒரு பகுதி மட்டும்)

கருத்துகள் இல்லை: