29 மார்., 2020

கரோணாவை முன்னிட்டு தனிமையில் இருந்தபோது சிந்தித்தது,
“நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களல்ல”
1.கழிவறையும்,குளியலறையும் வீட்டிற்குள் வைக்காமல் கொல்லைபுறத்தில் வைத்தார்கள்.ஏன்-பெயர் வைக்காத கண்ணுக்கு தெரியாத கிருமிகள்.
2. சலூனுக்கும்,சாவுக்கும் சென்று வந்தால் எதையும் தொடாமல் குளித்தபின் வீட்டிற்குள் வந்தார்கள்.ஏன்-கிருமிகள்.
3. செருப்பை வீட்டின் வெளியே விட்டார்கள்.ஏன்-கிருமிகள்.
4. பள்ளிக்கும்,வெளியேயும் சென்று வந்தால் கைகால் கழுவி வீட்டிற்குள் வரசொன்னார்கள்.ஏன-கிருமிகள்.
5. பிறந்தாலோ,இறந்தாலோ தீட்டு என்று 10, 16 நாட்கள் தனிமைபடுத்தினர்.ஏன்-கிருமிகள்
6. சாவு வீட்டில் சமைக்க கூடாது என்றார்கள்.ஏன்-கிருமிகள்.
7. குடும்பத்திற்கு சமைக்கும் பெண்கள் குளித்துவிட்டு சமைத்தார்கள்.ஏன்-கிருமிகள்.
8. வாசல் பெருக்கி சாணம்,மஞ்சள் தெளித்து கோலமிட்டார்கள்.ஏன்-கிருமிகள்.
9.மண்,செம்பு,வென்கல பாத்திரங்களை உபயோகித்தார்கள்.ஏன்-கிருமிகள்.
10. வீட்டில் சமைத்த உணவு அதிலும் சைவமே பெரும்பாலும் உண்டார்கள்.ஏன்-கிருமிகள்.
தனிமனித ஆரோக்கியம்,சமூகத்தில் சுத்தம்,அண்டை அயலாரோடு அகலாது அனுகாது உறவாடுதல் போன்ற நம் மூதாதையர் வாழ்வியல் நெறியை கிண்டலடித்து,திட்டமிட்டு சிதைத்த மேலைநாட்டு நாகரிகம் அதற்கான விலையை இன்று கொடுத்து கொண்டிருக்கிறது.(___________________________)இனியாவது இளந்தலைமுறையினர்
“மூத்தோர் சொல் வார்த்தையும், முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின்பு இனிக்கும்”
என்றுணர்ந்து வளமான வாழ்வு வாழ்தல் நன்று.💐.🙏

கருத்துகள் இல்லை: