15 ஜூலை, 2020

கூகுல் கதாநாயகன் சுந்தர் பிச்சை பிறந்த நாள் ஜூலை 12 அன்று

கூகுல் கதாநாயகன் 
சுந்தர் பிச்சை பிறந்த நாள் ஜூலை 12  அன்று 

கூகிள் என்றாலே  நம் அனைவரின் நினைவுக்கு வருவது சுந்தர் பிச்சை அவர்கள் என்பது வரவேற்புகுரிய நிதர்சனமான ஒரு உண்மையே. தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் பிறந்த இவர் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளே திரும்பி பார்க்கும் அளவிற்கு தனக்கான இடத்தை வகித்துள்ளார் கூகிள் என்ற மாபெரும் தேடலுக்கான ஒரு இணையத்தளத்தில் முதன்மை செயல் அலுவலர் என்பது தமிழர்களாகிய நாம் அனைவரும் பெருமைப்பட வைக்கின்ற தருணமே. சுந்தர் பிச்சையின் இயற்பெயர் பிச்சை சுந்தரராசன் 1972ஆம் ஆண்டு ஜூலை 12ந்தேதி லட்சுமி மற்றும் ரகுநாத பிச்சை என்ற தம்பதிக்கு மகனாக பிறந்தார்.

இவர் ஓர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். நீ ஏழையாக பிறப்பது உன் தவறில்லை நீ ஏழையாக மடிவதே உன் மிகப்பெரிய தவறு என்ற வாசகத்திற்கு ஏற்ப ஏழ்மை குடும்பத்தில் பிறந்தாலும் இன்று உலகமே வியந்து பார்க்கும் ஒரு இடத்தில் தனக்கான சாதனையைப்  படைத்து தன் பொருளாதார நிலையிலும் தன்னை உயர்த்தியுள்ளார் இவர் என்பது அனைவராலும் மறுக்க முடியாத உண்மையே. இவரது தந்தை ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பனியில் பணியாற்றினார். எப்போதும் வேலை முடித்து விட்டு வீடு திரும்பும் அவர் தன் மகன்களிடம் வேலையில் தான் எதிர்கொண்ட சவால்களை கூறுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இரு அறைகளை கொண்ட சாதாரண வீட்டில் தான் வசித்து வந்தனர். இவர்கள் வீட்டில் சொந்தமாக டிவி,கார் போன்றவை இருந்திருக்கவில்லை. எனினும் அவரின் தந்தை தன் மகன்களின் கல்வியில் கூடுதல் கவனத்தை செலுத்தினார். சென்னையில் சவகர் வித்தியாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பும், வனவாணி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பும் படித்தார். பிறகு ஐ.ஐ.டி கரக்பூரில் உலோகப் பொறியியல் பயின்ற இவர், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம். எஸ்(Material Sciences and Engineering) பட்டம் பெற்றார். பின்னர் உதவி தொகையுடன் வார்ட்டன் மேலாண்மைப் பள்ளியில் படித்து மேலாண்மைப் பட்டமும் பெற்றார்.

அந்தக் காலத்தில் அவரது தந்தையின் ஒரு வருட சம்பளத்தின் தொகைக்கும் அதிகமாகவே விமான பயண சீட்டின் விலையாக இருந்தது. அவரின் தந்தை பிறரிடம் கடன் வாங்கி கொடுத்தே அவரை அமெரிக்கா அனுப்பி வைத்தார். இன்று சுந்தர் பிச்சை நினைத்தால் எத்தனை விமானங்களை வேண்டுமானாலும் வாங்கும் அளவிற்கு பன்மடங்கு தன் பொருளாதார நிலையை உயர்வடையச் செய்துள்ளார். அவர் அமெரிக்காவில் பயின்ற காலக்கட்டத்தில் கூடத்  தனது பழைய பொருட்களையே உபயோகப்படுத்திக் கொண்டார். தனக்காக தனிப்பட்ட எந்தச்  செலவும் செய்து கொள்ளாமல் படித்து முடித்தார். பல கஷ்டங்களைத்  தாண்டியே தனக்கான அடையாளத்தை நிலை நிறுத்தினார்.

பின்பு சுந்தர் பிச்சை கூகிள் நிறுவனத்தில் 2004ஆம் ஆண்டு இணைந்து வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் முக்கியப்  பங்கு வகித்தார். கூகிள் நிறுவனத்தில் பின்பு முதன்மைச்  செயல் இயக்குனராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் நாள் ஆன்டி ரூபின் பதவி விலகிய பிறகு ஆண்ட்ராய்டு பிரிவிற்கும் சேர்த்து சுந்தர் பிச்சை தலைவரானார். மேலும் இவர் கூகுள் வரைபடம், ஆய்வு, வணிகம், விளம்பரம், ஆண்ட்ராய்டு, குரோம், உள்கட்டமைப்பு, கூகுள் ஆப்ஸ் ஆகியவற்றின் தலைமை பொறுப்பையும் ஏற்று வழிநடந்தியுள்ளார் என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒரு நிகழ்வு.

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ந்தேதி கூகிள் நிறுவனத்தால் அந்த நிறுவனத்தின் முதன்மை செயலாளராக அறிவிக்கப்பட்டார். 

இனிய பிறந்த நாள் 
வாழ்த்துக்கள் சார்.

கருத்துகள் இல்லை: