நமக்கு வரலாற்றுப் பிரக்ஞை இல்லை; நாம் வரலாற்றை முறையாக ஆவணப்படுத்துவதில்லை. அதனாலேயே தீய சக்திகள் வரலாற்றை அவர்களுக்கு வேண்டிய வகையில் திரித்து, பொய்யும் புனைசுருட்டும் வரலாறாக நமக்குச் சொல்லப்படுகிறது.
ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பு ஒரு முக்கிய வரலாற்று ஆவணம். பிரபஞ்சன் அவர்களின் இரு புதினங்கள் - வானம் வசப்படும் மற்றும் மானுடம் வெல்லும் - இந்த நாட்குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட சிறந்த வரலாற்றுப் புதினங்கள்.
தற்போது இந்த நாட்குறிப்புகளை முறைப்படி தொகுத்து, நூல்களாக வெளியிடுவது வரவேற்கப்பட வேண்டிய, பாராட்டப்பட வேண்டிய நன்முயற்சியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக