குறள் : 614
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்
மு.வ உரை :
முயற்சி இல்லாதவன் உதவிசெய்பவனாக இருத்தல் பேடி தன் கையில் வாளை எடுத்தும் ஆளும் தன்மைபோல் நிறைவேறாமல் போகும்.
கலைஞர் உரை :
ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையிலே வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை.
சாலமன் பாப்பையா உரை :
முயற்சி இல்லாதவன், பிறர்க்கு உதவுவேன் என்பது, படை கண்டு நடுங்கும் பேடி, களத்துள் நின்று தன் கை வாளைச் சுழற்றுதல் போல ஒரு பயனும் இல்லாமல் போகும்.
Kural 614
Thaalaanmai Illaadhaan Velaanmai Petikai
Vaalaanmai Polak Ketum
Explanation :
The liberality of him who does not labour will fail like the manliness of a hermaphrodite who has a sword in its hand.
இனிய காலை வணக்கம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக