4 செப்., 2020

ஆன்மீக சிந்தனை : திருமுறைகள் ஓதுவதன் பயன்

திருமுறைகள் ஓதுவதன் பயன் 

*எத்தனைதான் திருந்த வேண்டும் என்று நாமாக விரும்பினாலும் நமக்குள்ள அறியாமை காரணமாக , திரும்பத் திரும்பத் தவறுகளை நாம் செய்துகொண்டுதான் இருக்கிறோம்.* இந்த அறியாமையிலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்வதற்குத் திருமுறை வாக்குகள் பொிதும் துணை செய்கின்றன.

*இறைவன்,* வினைவயப்பட்டுத் துன்பப்படும் நாம் அனைவரும், திருந்தி உய்யும் பொருட்டு , அருளாளா்களை இப்பூவுலகிற்கு அனுப்பி , அவா்கள் வாயிலாக நமக்குத் தன் அருளிப் பாடுகளைச் செய்துள்ளான். அருளாளா்களை அதிட்டித்து நின்ற , இறைவனே திருவாய் மலா்ந்து அருளிய சொற்களே திருமுறைகளில் உள்ளன. இவ்வுண்மையை *" எனது உரை தனது உரையாக "* என்று அருளிச் செய்துள்ள சம்பந்தப்பெருமான் திருவாக்கிலிருந்து அறியலாம். திருமுறைகளில் உள்ள ஒவ்வொரு *" சொல்லும் "* மந்திர ஆற்றல் உடையது. எனவே , திருமுறைகளை நாம் பாராயணம் செய்யும் போது , அதில் உள்ள மந்திர ஆற்றல் , நமது உயிாில் கலந்து , நமது அறியாமையைப் போக்கும் திறன் உடையது.

*திருமுறைகளை ஓதி , ஊழ்வலியிலிருந்து நாம் விடுபட்டு , பிறவிப்பயனைப் பெறும் பொருட்டே திருமுறைகளை இறைவன் நமக்கு வழங்கியுள்ளான்.* 

*திருமுறைகளை இறைவன் தோற்று வித்ததன் நோக்கம் இதுவே ஆகும்.* இவ்வுண்மையைச் சம்பந்தப் பெருமான் திருக்கடைக் காப்பில் உள்ள திருவாக்குகளிலிருந்து நாம் தெளிவாகப் புாிந்து கொள்ளலாம்.

*நறுநீா் உகும் காழி ஞானசம்பந்தன்*

*வெறிநீா்த் திருப் பறியல் வீரட்டத்தானை*

*பொறிநீடு அரவன் , புனைபாடல் வல்லாா்க்கு*

*அறும்நீடு அவலம் ; அறும், பிறப்புத்தானே*

என்னும் திருக்கடைக்காப்பு இவ்வுண்மையை வலியுறுத்துகின்றது.

( *நீடு அவலம்* நீண்ட நாட்களாக இருக்கும் துன்பம் ; *அறும்* நீங்கும் )

🔘 *திருமுறைகளைத் தவிர, நாம் நமது துன்பங்களிலிருந்து விடுபடுவதற்கு வேறு எந்த உபாயமும் இல்லை.நாம் திருந்தி வாழ்வதற்குத் திருமுறைளே பொிதும் உதவுகின்றன.*

*திருமுறைகளில் உள்ள சொற்களில் உள்ள மந்திர ஆற்றல், நம்மை அறியாமலேயே நமக்கு வரவுள்ள துன்பங்களைப் போக்கி , இன்பங்களை விளைவிக்கும் என்பதில் எவ்வளவுத்துணை ஐயப் பாட்டிற்கு இடம் இல்லை.* இந்த மந்திர ஆற்றல் இறையாற்றல் ஆகும்.

*அவற்றோடு நாம் நாள்தோறும் தொடா்பு கொள்ளும்போது அந்த இறையாற்றல் நம்மைத் திருத்துகின்றது.*

*நம்மை அறியாமலே நாம் திருந்திக் கொண்டிருப்போம். திருந்திய மனிதனுக்கு வினைப் பயனை ஊட்டத் தேவை இல்லாததால் நாளடைவில் , விதயை மாற்றும் வல்லமையும் திருமுறைப் படனம் , நமக்குச் செய்து உதவுகிறது.*

எனவே , *திருமுறைகளைப் படனம் ( பாராயணம் ) செய்பவா்கள் விதியை வெல்லமுடியும்.*

நன்றி :


கருத்துகள் இல்லை: