26 டிச., 2020

இன்றைய குறள்

குறள் : 727
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்
தஞ்சு மவன்கற்ற நூல்

மு.வ உரை :
அவையினிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல்  பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் உள்ள கூர்மையான வாள் போன்றது.

கலைஞர் உரை :
அவை நடுவில் பேசப் பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப் படித்திருந்தாலும் அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தில் ஒரு பேடியின் கையில் உள்ள கூர்மையான வாளைப் போலவே பயனற்றவைகளாகி விடும்.

சாலமன் பாப்பையா உரை :
கற்றவர் கூடிய அவையில் பேசப் பயப்படுபவன் கற்ற நூல், பகைமுன்னே நடுங்கும் பேடியின் கையில் இருக்கும் வாளுக்குச் சமம்.

Kural 727
Pakaiyakaththup Petikai Olvaal Avaiyakaththu
Anju Mavankatra Nool

Explanation :
The learning of him who is diffident before an assembly is like the shining sword of an hermaphrodite in the presence of his foes.

கருத்துகள் இல்லை: