Reading Marathon -2021. 51/50+
S.PRASANNA VENKATESAN.
# R.M.No: 0064
# 4 -ஆம் ஆண்டு விழா போட்டி
# சமூக நீதி பிரிவு:3 பதிவு:2
புத்தகம்: நாளை மற்றுமொரு நாளே
ஆசிரியர்: திரு. ஜி.நாகராஜன்
பதிப்பகம்:காலச்சுவடு
மொத்த பக்கங்கள்: 144
விலை:₹ 175/-
இந்த புத்தகம் சென்னை புத்தக
கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களில் ஒன்றாகும்.
பமேலா, கிளாரிசா போன்ற நாவல்களை வரைந்த ஆங்கில நாவலாசிரியர் சாமுவேல் ரிச்சட்ஸனிடம், ஃபிரெஞ்சுத் தத்துவஞானி டிடரோ ஒரு முறை கூறினார்: “உண்மைமிக்கது எனக் கருதப்படும் வரலாறு, பொய்ம்மைகளையே கொண்டுள்ளது; ஆனால், உங்கள் புனைகதைகளிலோ, உண்மைகள் நிறைந்துள்ளன”. இதை ஒரு தீவிரக் கூற்று என்று கொள்ளலாம். நாம் காணும் எல்லாப் புனைகதைகளும் நமக்கு உள்ளொளி தருவனவாக இல்லை. அவற்றில் பல்வேறு தரங்கள் உள்ளன. என்றாலும், சுருக்கமாகத் தமிழின் சிறந்த புனைகதை இலக்கியப் பகுதிக்குள் ஜி. நாகராஜன் எழுதிய ‘நாளை மற்றுமொரு நாளே’ நாவல் குறிப்பிடத்தக்க இடம் பெறுகிறது என்பதைக் கூறவேண்டும். இந்த நாவல் 1973இல் ஞானரதம் என்னும் இலக்கியச் சிறுபத்திரிகையில் தொடராக வெளிவந்தது.
ஜி. நாகராஜன், ஜனரஞ்சகமாக நாவல் உலகில் அறியப்பட்டவர் அல்ல. கணிதம் பயின்றவர், மார்க்சியக் கோட்பாட்டில் ஊறியவர் என்றாலும், வாழ்க்கையும் அவருக்குச் சிதைந்த ஒன்றாகவே இருந்தது. அவர் எழுதிய முழு நாவல் இது ஒன்றுதான். ‘குறத்தி முடுக்கு’ என்ற குறுநாவல் ஒன்று உண்டு. சிறுகதைகள் பல எழுதியிருக்கிறார். அவற்றில் ‘கிழவனின் வருகை’ என்ற கதை மிக முக்கியமானது என்று கருதுகிறேன்.
நாளை மற்றும் ஒரு நாளே குறத்தி முடுக்கனம. நாகராஜன் எழுதிய நாவல்கள் நாளை மற்றும் ஒரு நாளே மற்றும் குறத்தி முடுக்கு. இந்த இரண்டுமே வித்தியாசமான சிந்தனையில் வித்தியாசமான கோணத்தில் எழுதப்பட்ட நாவல்கள் இதனை தவிர்த்து இவர் சில சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். இவருடைய படைப்புகள் எல்லாமே சராசரி சல்லியான மனிதர்களின் கனவில் கூட யோசிக்க முடியாத, பிடிக்காத பக்கங்கள்.
அவருடைய எழுத்து
உலகத்தில் வேசிகளும், பொறுக்கிகளும்,சாதாரண குடிமகன்கள் மற்றும் மகள்களும் தங்கள் வாழ்வுக்கும் இருப்புக்குமான சகல நியாயங்களோடும் கௌரவங்களோடும் வாழ்வார்கள்.
நாளை மற்றும் ஒரு நாளே...
இந்நாவல் பல முடிச்சுகளை தன்னுள் கொண்டுள்ளது. காதல், காமம், ஏமாற்றம், கோபம், கிரைம் என எல்லாவற்றையும் ஒரே நாளில் கதையின் நாயகன் சந்திப்பதுதான் சிறப்பு. இது கந்தன் என்ற சராசரி மனிதனின் ஒருநாளைய வாழ்க்கை. இவன் காலையில் எழுந்தவுடன் சாரயத்திற்கு காசு தேடுபவன். காமத்தை தேடுபவன் என்று கந்தன் தன் இச்சைக்காக வாழ்பவன் என்பதை முதலிலேயே வாசகனுக்கு உணர்த்திவிடுகிறார்.
அவனுடைய மனைவி மீனாவை சோலை என்பவனிடம் காசு கொடுத்து வாங்கி இருப்பான். இறுதியில் அவனே மீண்டும் வாங்கியவனிடம் சென்று அவளுக்கு பொறுத்தமாய் வேறு ஒரு இடம் பார்க்க சொல்லுவது அவள் மேல உள்ள காதலை அழகாக்குகிறது.
விளிம்பு மக்களின் வாழ்க்கையை எந்தவித மினுக்கல்களும் இல்லாமல் இயல்பாய் சொல்லவும் முடியும் என்று வரம்புகளைத் தாண்டிக் குதித்திருக்கிறார் ஜி.நாகாராஜன். தனது காதல் மனைவி மீனாவோடு கூடியிருக்கும் போது அணில்களின் கூடல்களையும், யானையின் கூடல்களையும் பேசி சிரிக்கும் கந்தன், விகல்பமில்லாமல் அணிகள் மயங்கிக் கிடக்கிற இதே மாதிரி, உனது வாடிக்கையாளர்கள் எவரோடும் மயங்கிக் கிடந்திருக்கிறாயா என்று கேட்கிறான்.
அவள் ஒவ்வொருத்தராக விவரிப்பது உலுக்கி எடுக்கிறது. பேச்சியின் வீட்டில் வைத்து தொழில் நடத்துகிற மீனாவிடம் பொய் சொல்லி ரூபாய் வாங்குவது, அவளும் அதைக் கண்டும் காணாமல் இருப்பது, ஒரு மதிய வேளையில் தன்னந்தனியே படுத்திருக்கும் கந்தனிடம் ராக்காயி என்கிற மோகனா வருவதும், வெத்திலை பாக்கு வாங்கிக் கொடுக்கிறமாதிரி மச்சான் கந்தனுக்கு இஞ்சிச் சாராயம் வாங்கிக் கொண்டுவந்து கொடுப்பதுவுமாக வாழ்க்கை அவர்களுக்கு எந்த சட்டத் திட்டங்களுக்கும் கட்டுப்படாததாக இருக்கிறது.
“தம்பி, ஏமாத்துறவங்களும் ஏமாறவங்களும் இருக்கறது தான் உலகத்தின் தன்மை. அது அழகு என்று கூட எனக்கு படுது.
எல்லாரும் நேர்மையா நடந்துகிட்டா, வாழ்க்கைல போட்டியோ முன்னேற்றமோ இருக்காது. சூழ்ச்சி செய்யும் போது தான் உசிரோட இருப்பதாகவே தெரியுது. சூழ்ச்சி செய்ற திறமை தான் மனுஷன மனுஷனாக்குது. அது தான் மனுஷனுக்கும் மிருகத்துக்கும் இருக்குற வித்தியாசம் – கதையில் வரும் இந்த வாக்கியம் நம்முடைய அனைத்து கட்டுமானங்களையும் நொறுக்கித் தள்ளும்.
இந்த நாவல் Non-linear என்னும் வகையினை சேர்ந்த்து எனலாம். இது வாசகனுக்கு சவாலான ஒன்று. காரணம் முழு நாவலும் நேரே இல்லாமல் கலைத்துப் போடப்பட்டு வாசகனிடம் தரப்படுகிறது.
கதையில் வரும் மற்றொரு உலுக்கும் வாக்கியம் “மனிதனைப் பற்றி பொதுவாக எதுவும் சொல்லச் சொன்னால் ‘மனிதன் மகத்தான சல்லிப்பயல்’ என்றுதான் சொல்வேன்.
ஜி. நாகராஜனின் ‘நாளை மற்றொரு நாளே’ நாவலை சி.மோகன் ஆங்கிலத்தில் ‘Tomorrow One more Day’ என்ற பெயரில் மொழி பெயர்த்துள்ளார்.
இந்த நாவல் தமிழ் நாவல்களுக்கான இயல்பான கதை களத்திலிருந்து விலகி வேறொரு பரிணாமத்தை நம் கண் முன் வைக்கும் ஒரு பொக்கிஷம்
தோழமையுடன்,
சு.பிரசன்ன வெங்கடேசன்
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக