வாசிப்பு மாரத்தான் 2021
25 / 50
RM0017
புத்தகத்தின் பெயர்: நிலமெல்லாம் ரத்தம்
ஆசிரியர்: பா.ராகவன்
பக்கங்கள்: 704
ஒரு வகையில் சகோதரர்கள் தான். ஒரே மண்ணைச் சார்ந்தவர்கள் தான். கால இடைவெளியில் மக்கள் தொகையில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், யூதர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் பொதுவான நிலம் தான் அது.
இங்கு யார் யாரை ஏமாற்றினார்கள் என்றால் அப்பட்டமாக யூதர்கள் தான் அரேபியர்களை ஏமாற்றி வன்முறைப்பாதையில் தள்ளியிருக்கிறார்கள். அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். குள்ளநரித்தனம் மிக்க யூதர்களின் எந்த வித நரித்தனத்தையும் புரிந்துகொள்ளாமல் அமைதி காத்தது தான் பாலஸ்தீன அரேபியர்களின் முதல் தவறு.
உலகப்போரில் ஹிட்லருக்கு ஆதரவு தெரிவித்தது இரண்டாவது தவறு.
ஏகப்பட்ட சட்டசிக்கல்கள் இஸ்ரேல் பாலஸ்தீன் பிரிவினையில். எவையும் கண்டுகொள்ளப்படவில்லை.
உலகப்போரில் பிரிட்டனுக்கு ஆதரவு தெரிவித்ததற்கு கைமாறாக யூதர்கள் பெற்றுக் கொண்ட சலுகையே இஸ்ரேல்.
அயோத்தி ஜென்ம பூமி பிரச்சனை போல, ஜெருசலேம் சாலமன் ஆலயப்பிரச்சனை ஒரு தீர்க்க முடியாத பிரச்சனை.
படிக்கபடிக்க ஆச்சரியம். நம் பொதுப்புத்தியில் படிந்துள்ள அரேபியர்கள் குறித்தான பார்வையை இப்புத்தகம் மாற்றும்.
கட்டாயம் படியுங்கள்.
நன்றி..!!
நன்றி :
திரு சரவணக்குமார் ஞானப்பிரகாசம்,
வாசிப்பை நேசிப்போம்,
முகநூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக