கண் பார்வை இல்லாத ஒருவர்
கோவிலுக்கு வந்தார்.
பூசாரி கேட்டார் :
ஐயா, உங்களுக்குத்தான் கண் தெரியாதே.
மலை ஏறி, வரிசையில் நின்று,
இவ்வளவு சிரமப்பட்டு வந்திருக்கிறீர்களே,
கடவுளை உங்களால் தரிசிக்கவா முடியும்...?
பார்வையற்றவர் சொன்னார் :
ஐயா, நான் கடவுளை தரிசிப்பதில்
அவருக்கு என்ன ஆதாயம்...?
கடவுள் என்னை பார்த்தால் போதும்.
என் கஷ்டங்கள் எல்லாம் ஓடிவிடும்
என்று நம்பித்தான் வந்திருக்கிறேன்."
இதுதான் உண்மையான பக்தி.
உண்மையான ஆர்வம்.
உண்மையான நம்பிக்கை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக