10 மே, 2022

கவிதை நேரம்

நான் மிச்சம் வைத்த மீன் துண்டுகளைச்சாப்பிட்டுவிட்டு
கண்மூடி தியானத்தில்
ஆழ்ந்துள்ளது
எங்கள் வீட்டுப் பூனை

பூஜை அறையில்
தீப தூபங்களுக்கு மத்தியில்
தடுமாறுகிறேன் நான்

கடைசியில் நிஷ்டை
கைகூடி விட்டது
பூனைக்கு!

நன்றி :
தஞ்சாவூர்க்கவிராயர்

கருத்துகள் இல்லை: