30 ஆக., 2022

நூல்நயம்


"அர்த்தமுள்ள இந்துமதம் "கண்ணதாசன் பதிப்பகம் வெளியீடு.கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதியது .ஓவியர் சில்பி வரைந்த அற்புத ஓவியங்களுடன். மொத்த பக்கங்கள் 800 .விலை ரூபாய் 275/-முதல் பதிப்பு 2009 .ஆறாம் பதிப்பு 2011. 
   
கவிஞர் கண்ணதாசனை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது .கண்ணனை தெரிகின்றதோ இல்லையோ அவனது தாசனை கண்ணதாசனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இதை உணர்த்தும் வகையில்தான் ;
அவன் அன்றே ;
*நானே அவன் 
அவனே நான் .
இதைக்காலம் உணர்த்தும்*
என்று சொன்னான்  .

வனவாசம் சென்று விட்டு 
மனம் திருந்தி 
குணவாசம் பெறுவதற்காக 
மனவாசத்தில் வாழ்ந்து விட்டு இப்பொழுது தின வாசம் கண்ணதாசம் ஆக முழுமையான மனிதனாக முழுமையான கண்ணதாசன் ஆக "அர்த்தமுள்ள இந்து மதம் *எழுதியிருக்கிறார். 

       பாரதி ,பாரதிதாசனைத் தொடர்ந்து வந்த கவிஞர் கண்ணதாசன் ,
தமிழ் கவிதை யை மேலும் எளிமையாக்கி விரிவான களத்தில் இயங்க செய்தார். கவிஞர் தன்னுடைய வாழ்வில் ஆதிக்கத்திற்கும் நாத்திகத்திற்கும் இடையில் நிகழ்த்தும் போராட்டங்களும் கூட அருமையான கவிதைகளாக வெளியிடப்பட்டுள்ளன. கண்ணனைத் தவிர பிற கடவுள்களும் இயேசு குறித்து அவர் கவிதைகள் ,காவியங்கள் புனைந்துள்ளார் .
     நன்மைக்கும் தீமைக்கும் இடையில் இருதலைக்கொள்ளி ஒளிபோல ஓயாமல் போராடிக் கொண்டிருந்ததால் அவர்கள் வாழ்க்கையின் முழுமையை தேடுமாறு இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருந்தது. உண்மையான எதார்த்தமான வாழ்வின் தன்மையை அறிவு ரீதியாகவும் ,அனுபவ ரீதியாகவும் கண்டறிந்தவர் .இயற்கையான பிரபஞ்ச இயக்கத்தில் இறைவனோடு இரண்டற கலந்து இருப்பதாக அவர் தன்னை இனம் கண்டு கொள்கிறார்.
        மனிதன் சம்பந்தப்பட்ட வாழ்க்கை இயற்கை ஆண் பெண் காதல் நினைவு நாடு அரசியல் தத்துவம் போன்ற பல வகையான அவற்றின் அனுபவங்கள் எல்லாம் கவிதை வடிவம் பெற்றுள்ளன .
   
   கவிஞர் கண்ணதாசன் பன்முகத்தன்மை கொண்ட ஒரு கலைஞர்.
 கவிஞராக ,கட்டுரையாளராக, நாவலாசிரியராக ,கதாசிரியராக திரைப்பட கலைஞராக ,பாடகராக ,அரசியல்வாதியாக பேச்சாளராக ,பத்திரிக்கை ஆசிரியராக, தன்னுடைய வாழ்க்கையில் பல மாறுபட்ட தளங்களில் இயங்கியவர் .தனது வாழ்க்கை தளங்களில் அவர் பெற்ற அனுபவமே அவருடைய கலை இலக்கிய வெளிப்பாடுகள் ;அர்த்தமுள்ள இந்துமதம் எழுதிட அவருக்கு அடித்தளமாக அஸ்திவாரமாக அமைந்தது ;அவரின் எல்லா அனுபவங்களும்.
    இந்தப் புத்தகத்தில் கண்ணதாசனின் ஒரு இடத்தில் குறிப்பிடுவார் .தனக்கும் கண்ணனுக்கும் உள்ள தொடர்பை *விட்டகுறை தொட்டகுறை *என்று .அவரும்  எட்டு,கண்ணனும் எட்டு. பிறப்பு ,என்பதாக சொல்லிக் கொண்டே போவார் .அது போலவே எனக்கும் கண்ணதாசன் அவர்களுக்கும் உள்ள தொடர்பு* விட்டகுறை தொட்டகுறை* என்று தான் நினைக்கிறேன் .எனது 12 13 வயதிலேயே அவரைப் பார்த்திருக்கிறேன் .அதன்பிறகு இரு முறை பார்த்திருக்கிறேன் .அவருடைய மகன் என்னுடன் பணிபுரிந்து இருக்கிறார். அவரது  பேரனுடன் பழகி இருக்கிறேன். அவரது ஒரு பேரன் டல்லாஸ் நகரில் சந்தித்து பேசி இருக்கிறேன் .அவர் மூலமாக கொள்ளுப்பேரன் தொட்டுப் பேசி இருக்கிறேன் .இதுதான் விட்டகுறை தொட்டகுறை என்று இந்து மதத்தில் சொல்லுவது உண்மை போலும்...
   
*******
ஸ்ரீ காஞ்சி காமகோடி முனிகள் ,தவத்திரு கிருபானந்தவாரியார் முதலானோர் அணிந்துரை வழங்கியுள்ளார்கள்.
     வானதி பதிப்பகம் திருநாவுக்கரசு அவர்கள் தனது பதிப்புரையில் :"இது ஒரு ஞானக் களஞ்சியம் .இந்து மதம் தழைப்பதற்கும் மக்களின் மன நலம் பிழைப்பதற்கும் கவிஞர் கண்ணதாசன் அவளுடைய செழுமையான கருத்துக்கள் நிச்சயம் பயன்படும் "என்கிறார் .

     கவிஞர் கண்ணதாசன் தனது முன்னுரையில் :"இந்து மதத்தின் தத்துவங்களில் எனக்கு நீண்ட கால ஈடுபாடு  உண்டு.நான் நாத்திகனாக இருந்த காலத்திலும் கூட சில தத்துவங்களின் உள்ளர்த்தத்தை வியப்போடு நோக்கி இருக்கிறேன் .அவற்றைப் பற்றி எல்லாம் பின்னால் நாம் எழுதப் போகிறோம் என்று கருதியது இல்லை .கருதி இருந்தால் இன்னும் பல விஷயங்களை குறித்து வைத்திருப்பேன் .காஞ்சி பெரியவர்களைப் போலவே வாரியார் சுவாமிகளைப் போலவே ஆழமான தத்துவ அறிவு எனக்கு இல்லை .அனுபவ ரீதியான உண்மைகளை பெரும்பாலும் இதில் கூறி இருக்கிறேன்" என்கிறார் முன்னுரையில் கண்ணதாசன்.
      மேலும் ,
*நோக்கம் *என்று தலைப்பிட்டு கூறுகிறார்: "கடவுளையும் புராணங்களையும் கேலி செய்ததற்காக கந்தபுராணம், பெரியபுராணம் ,கம்பனின் இராமகாதை, திருவாசகம் ,திருப்பாவை ,திருவெம்பாவை உள்ளிட்ட நாலாயிர திவ்ய பிரபந்தம், வில்லிபாரதம் ,அனைத்தையும் படிக்கத் தொடங்கினேன் ,
      கம்பனைப் படிக்கப் படிக்க நான் கம்பனுக்கு அடிமையானேன் .மேலும் மேலும் கம்பனைப் படித்தேன் ;கடவுளை படித்தேன் .
    என் சிறகுகள் விரிந்தன; சொற்கள் எழுந்தன ;பொருள்கள் மலர்ந்தன; காண்கின்ற காட்சிகள் எல்லாம் 
கவிதை களாகட் தோன்றின .என் வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு நிகழ்வுலும் நான் அடிக்கடி சொல்வது ,"நம் மூதாதையர்கள் முட்டாள்கள் அல்ல ".
   ஆலமரம் போல் தழைத்துக் குலுங்கி நிற்கும் இந்துமதம் உன் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் ஒவ்வொரு வினாடியையும் அளந்து கொடுக்கிறது .
   பல பூர்வீக மதங்களையும் தன்னுடைய கிளை அலுவலகமாக  ஆக்கிக்கொண்டு தானே தலைமை தாங்க தொடங்கிய காலம் ராமானுஜர் காலம் .
      அத்தகைய இந்து மதத்தை பற்றி என்னுடைய குறைவான அறிவில் தோன்றிய குறைபாடான கருத்துக்களை தொடர்ந்து எழுத ,அவற்றின்  தத்துவங்கள் வாழ்க்கைக்கு எவ்வளவு பயன்படுகின்றன என்பதை மட்டும் எழுதுவேன்", என்று கண்ணதாசன் முன்னுரையில் அழகாக தன்னை தெளிவுபடுத்திக் கொண்டுள்ளார்.
*******
இனி அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகம் குறித்து பார்ப்போம்:.
அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்கள் ஆக பகுக்கப்பட்டுள்ளது .இந்து மதத்திற்கு புனிதமான நூல் பகவத் கீதை .தமிழில் அதற்கு அடுத்தபடி கவிஞரின் அர்த்தமுள்ள இந்துமதம் .
தினமணி கதிர் இதழில் அர்த்தமுள்ள இந்துமதம் தொடராக வந்தபோது 1972ஆம் ஆண்டு படித்து இருக்கிறேன் .
பிறகு சிறுசிறு புத்தகமாக வந்தது .அதை வாங்கிப் படித்திருக்கிறேன் .இப்பொழுது பத்து பாகம் ,ஒரே புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்கள்.
   கருவறை முதல் கல்லறை வரை வாழ்கின்ற ஒரு மனிதனின் வாழ்க்கை எவ்வாறெல்லாம் நடத்திச் செல்லப் படுகிறது என்பதை இந்து மதம் ஏற்கனவே அழகாக ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்றவாறு பதில் அளித்திருப்பதாக நம்பிக்கையோடு இந்த அர்த்தமுள்ள இந்துமதம் எழுதப்பட்டிருக்கிறது. 
      கர்மா என்ற வார்த்தை இந்து மதத்தில் மிகவும் பிரபலம் .ஒருவர் தவறு செய்தால் கர்மாவில் இருந்து தப்பிக்கவே முடியாது என்பதை பல சம்பவங்களை தன் வாழ்க்கையில் எடுத்துக்காட்டுகளாக கூறியிருக்கிறார் .எனக்கு பயமில்லை துணிந்தவனுக்கு துக்கமில்லை என்பதுபோல இவர் பயத்தினால் புலன்கள் மென்மையாகி விடும் என்றும் அதனால் தான் அவைகளை என்று தெளிவாகக் கூறுகிறார்.
 முதல் பாகத்தில் ,
உறவு ,ஆசை ,துன்பம் ,ஒரு சோதனை பாவமாம் புண்ணியமாம் ,புண்ணியம் திரும்ப வரும் ,விதிப்படி பயணம் ,தாய் குறித்து ,மங்கல வழக்குகள் எப்படி எல்லாம் உங்கள் வாழ்க்கையில் கடைபிடித்து  கல்லானாலும் புல்லானாலும் புருஷன் என்கிறார் .தாத்பரியம்  ,இந்த நல்ல மனைவி ,நல்ல நண்பன் ,கீதையில் மனித மனம் உயர்ந்தோர் ,மரணம் , கண்ணனை நினைப்பவர்கள் சொன்னது பலிக்கும், பூர்வ ஜென்மம் ,பிற மதங்கள் ,சமதர்மம், குட்டி தேவதைகள் ,உலவும் ஆவிகள், சோதனையும் வேதனையும் , பாவிகளே பிரார்த்தியுங்கள் என்று முதல் பாகத்தில் குறிப்பிடுகிறார் .
    பெண்ணைப் பற்றியும் குடும்ப வாழ்வில் பெண்ணின் கடமை பற்றி கூறும்போது அவர் பெண்ணடிமைத்தனம் கொண்டவராக  நினைக்கத்தோன்றும். ஆனால் அவர்தான் திரைப்படத்தில் *நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் *என்று பெண்ணுக்கு, ஈஸ்வரி ஈஸ்வரனுக்கும் சரி சமமாக பாவித்து பாடல் எழுதியிருக்கிறார் .
    ஆசையை மூன்று விதமாகப் பிரிக்கிறது இந்து மதம் .
மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை மண்ணாசை வளர்ந்துவிட்டால் கொலை விழுகிறது .
பொன்னாசை வளர்ந்துவிட்டால் களவு நடக்கிறது .
பெண்ணாசை வளர்ந்துவிட்டால் பாபம் நிகழ்கிறது .இந்த மூன்றில் ஒரு ஆசைகூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு. ஆகவேதான் பற்றற்ற வாழ்க்கையை இந்து மதம் போதித்தது.

      இரண்டாம் பாகத்தில் இதிகாசங்கள், ஜாதிகள் ,வாசலில் அமீனா நிற்கிறான் ,ஒரு புதிய சிந்தனை ,வரும் -ஏற்றுக் கொள் ,தரும் -பெற்றுக்கொள் ,நெஞ்சுக்கு நிம்மதி, ஆண்டவன் சந்நிதி ,வள்ளுவர்  ஓர் இந்து,கனவுகள் ,சகுனங்கள் ,ஏன் இந்த நம்பிக்கை ,இந்து மங்கையர் ,
அங்காடி நாய் ,ஆண்டாள் தமிழை ஆண்டாள் ,அறிவும் திருவும் , இன்றைய இளைஞனுக்கு,என்று இரண்டாம் பாகத்தில் எழுதியிருக்கிறார் .
      ஆண்டாளைப் பற்றி எழுதும் போது இவரை தன்னை காதலியாக நினைத்துக்கொண்டு கண்ணனை நினைந்து உருகி எழுதியிருக்கிறார். 

*கண்ணன் என்னும்
 மன்னன் பேரைச் 
சொல்லச் சொல்ல 
கல்லும் முள்ளும் 
பூவாய் மாறும் 
மெல்ல மெல்ல .*
கண்ணனை நினைக்காத 
நாள் இல்லையே 
காதலில் துடிக்காத 
நாளில்லையே *என்றெல்லாம் அவர், காதலியாகவே, தனியாகவே வாழ்ந்து இருக்கிறார்,கண்ணன் மீது காதல் கொண்டு.

       மூன்றாம் பாகம் : 
என் பணி  , அவனவன் தருமம், விரும்பாதவனும்,முடியாதவனும், இரத்தங்களின் யுத்தம் ,குடும்பம் என்னும் தர்மம் ,மெய்யுணர்வு , மனிதாபிமானம் மாலைக்குள் பாம்பு ,மரத்தைத் தண்ணீரில் போடு ,கோபம் பாவம் சண்டாளம் , காம உணர்ச்சி,மதுவும் மதமும் ,பக்குவம் ,இறைவனின் நீதிமன்றங்கள் . இன்று மூன்றாம் பாகம் முடிகிறது.

நான்காம் பாகத்தில்,
தனது அனுபவங்களையும் முழுமையாக எழுதுகிறார் .
40 வயதை தாண்டிய பிறகு ஒருவன் கை வீசியபடி முடிந்த வரை நீண்ட தூரம் நடக்க வேண்டும் .
வாயு பதார்த்தங்களை சாப்பிடாமல் இருத்தல் வேண்டும் .
கடலை மாவு கடலை எண்ணெய் தவிர்க்கவும் .
தவறான உணர்வுகள் கொள்ளாதிருக்க வேண்டும்.
 விழுந்து குளித்தல் .
இனம் அறிந்து சேர்ந்து 
இருத்தல்.
இருதயத்திற்கு துன்பம் கொடுக்க கூடிய தொடர்புகளில் மாற்றிக் கொள்ளாது இருத்தல் .
எதையும் அளவோடு வைத்திருக்கலாம்* என்று ஆரோக்கிய அறிவுரை 
வழங்குகிறார்.

பகவத் கீதையில் "கூடுகின்ற பெருங்கூட்டத்தில் வெறுப்புக் கொள்"என்று தனிமையில் இனிமை தான் அவன் அப்படி கூறுகின்றார் .தனிமை கண்டதுண்டு அதிலே சாரம் இருக்குமா என்றான்  பாரதி. தனிமையிலே இருந்து உன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்

 ஐந்தாம் பாகம் :
இது ஞானம் பிறந்த கதை ;
"உலக வாழ்க்கையில் நான் செல்வத்தை மட்டுமல்ல அனுபவங்களையும் 
திரட்டியவன் .உலகம் புள்ளிகளால் ஆனது என்றால் ஒவ்வொரு புள்ளியும் எதனால் ஆனது என்று எனக்கு தெரியும் "என்கிறார் கண்ணதாசன் . அருணகிரி  கதையும். அழகாக விவரிக்கப்படுகிறது.அவரது சீடர் பத்திரகிரியார் கதையும் அலசப்படுகிறது. ஒவ்வொருவரும் இந்த இரண்டு கதைகளையும் அறிவுபூர்வமாக வாசித்து உள் வாங்கிக் கொள்வது நலம் .பட்டினத்தார் பாடல் கேட்கும் போதெல்லாம் கண்ணில் கண்ணீர் வராமல் போகாது .
"அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே விழியம்பொழுக  மெத்திய மாதரும் வீதி மட்டே விம்மிவிம்மி இரு "என்பதைத்தான் வீடு வரை உறவு 
வீதி வரை மனைவி 
காடு வரை பிள்ளை 
கடைசி வரை யாரோ 
என்று கண்ணதாசன் பாட்டாக வடித்திருப்பார்.

ஆறாம் பாகம்:
   நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி, இதில் இசையும் கலையும் ,சேவையில் நிம்மதி  ,பூஜையில் நிம்மதி, நம்பிக்கையில் நிம்மதி ,இல்லறத்தில் நிம்மதி ,படிப்பதில் நிம்மதி ,ஆரோக்கியத்தில் நிம்மதி தூக்கத்தில் நிம்மதி.

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே அந்த தூக்கமும் அமைதியும் நானானால் என்று பாடலை கேள்வி கேள்விப்பட்டிருப்பீர்கள் இதை சேக்ஸ்பியர் கவிதைகள் தமிழாக்கம் ரோமியோ ஜூலியட்டில்.
Sleep Dwell upon Thine Eyes 
Peace in Thy  breast 
Would i were Sleep and Peace
So Sweet to Rest
தூங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு .

உனக்குள்ளே நிம்மதி முடிவுரை என்று ஆரம்பத்தில் அழகாக நிம்மதி குறித்து பக்கம் பக்கமாக எழுதி இருக்கிறார் .

         ஏழாம் பாகம்:
 சுகமான சிந்தனைகள் :
காலங் களே தருகின்றன அவையே பறிக்கின்றன.
 காலங் களே சிரிக்க செய்கின்றன  ;அவையே அழவும் வைக்கின்றன .
காலம் பார்த்து காரியம் செய்தால் பூமியையே விலைக்கு வாங்கலாம். காலங்களிலேயே காரியங்களில் வெற்றி தோல்விகள் அடங்கியிருக்கின்றன.

 பத்து விதமான சுகமான சிந்தனைகளை பிட்டுப் பிட்டு வைக்கிறார் அத்தனையும் தூத்துக்குடி முத்துக்களாக ஜொலிக்கின்றன.

எட்டாம் பாகம் : பரலோக வாழ்க்கைக்கும் இகலோக வாழ்க்கைக்கும் இடையே உள்ள தராதம்மியங்களை குறிப்பிட்டு உலகத்துக்குச் சொல்லிவிட்டால் என் கடைசி காலம் பெருமைக்கு உரியதாக ஆகி விடாதா என்று போகம் குறித்தும் , ரோகம் குறித்தும்,யோகம் குறித்து இந்த எட்டாம் பாகத்தில் அழகாக எழுதுகிறார் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்.

    ஒன்பதாம் பாகத்தில் ,மனிதனின் மிகவும் குறைந்தபட்ச தேவை நிம்மதி,. அதை தெய்வத்திடம் இருந்து பெற்றுக் கொள்பவன் பெயர்தான் இந்து .
ஞானத்தை தேடி என்கிற தலைப்பில் சிறிது மவுனம் , உண்ணாவிரதம், இச்சாபத்தியம், குரு-சிஷ்ய பாவம் ,கடவுள் மனிதனாக ,சொர்க்கம் நரகம், புனர்ஜென்மம் ,கள்ளம் கபடம் வஞ்சகம், தெய்வத்தை அணுகும் முறை, எப்படி தெய்வத்தை வணங்கவேண்டும் என்று தெளிவாக குறிப்பிடுகிறார் ..
 

பாகம் 10 :
எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன். ஆகவே இப்படித்தான் வாழ வேண்டும் என்று புத்தி சொல்லக் கூடிய யோகிதை எனக்கு உண்டு என்கிறார் கவிஞர் கண்ணதாசன் .

சாமி நீ !சாமி நீ !கடவுள் நீயே;
 தத்துவமசி ;தத்துவமசி ;நீயே  அஃதா ஆம் பூமியிலேயே நீ கடவுள் இல்லை என்று புகழ்வது நின்மனத்துள்ளே புகுந்த மாயை சாமி நீ ;அம்மா யை தன்னை நீக்கி சதாகாலம் சிவோஹ  மென்றுசாதிப்பாயே!   
          மகாகவி பாரதியார் .
இந்த பாகத்தில் ;பதில் இல்லாத கேள்வி, சேரிடம் அறிந்து சேர் ,பகுத்தறிவு, ஈஸ்வராலயம் ,பொய்யெல்லாம் வாழ்க்கை, சித்திரவதைகள் ,வாழ்க்கை என்பது வாழவே ,என்ற தலைப்புகளில் எழுதி முடிக்கிறார் .
 
விசையுறு பந்தினைப்போல் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன் என்றான் மகா கவி பாரதி.
 மனம் சொல்ல வேண்டுமாம். உடல் போக வேண்டும் .மனதை அடக்கி உடம்பை நன்றாக வைத்துக் கொள்ளுங்கள் என்று நான் அடிக்கடி சொல்கிறேன் காரணம் நான் அனுபவித்து சொல்கிறேன், என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.
 ****
எண்ணூறு பக்கங்களில் உள்ள அர்த்தமுள்ள இந்து மதத்தை 20 ஆயிரம் வார்த்தைகளில் சுருக்கி எழுத முடியுமா என்ன ?படித்துப் பாருங்கள் .
   கம்பன் சொன்னது போல கடல்மிசை,
மிசை  முன்வந்து நீரை நக்கி குடிப்பது போலத்தான் எனது இந்த சுருக்க உரை.
    

   போகாத வாசமில்லை 
   வைக்காத பாசம் இல்லை 
   செய்யாத மோசமில்லை 
   ஆசாபாசம் முற்ற உணர்வில் 
   பேசாமல் அர்த்தமுள்ள இந்துமதம் வாசி!!!!

    காதற்ற ஊசியும்
    வாராது காணுங்கள்
    கடைவழிக்கே....

நன்றி:
திரு கருணாமூர்த்தி 
வாசிப்பை நேசிப்போம் 
முகநூல்

கருத்துகள் இல்லை: