30 நவ., 2025

முன்னேற்றப் பாதை

Author:  Phlsph7
This file is made available under the Creative Commons CC0 1.0 Universal Public Domain
Via WIKIMEDIA COMMONS 



*சிந்தனைக் களம்*
▪️▪️▪️▪️▪️▪️▪️
மனித வாழ்வின் நோக்கமே மகிழ்வான வாழ்வைப் பேணுவது தான். நாம் உழைப்பதும், ஓடுவதும், நடப்பதும், பேசுவதும், எழுதுவதும், விளையாடுவதும் இது போன்ற அனைத்து செயல்படுகளும் நாம் மகிழ்வதற்காக மட்டும் தான்...

நான் கவலையாக இருப்பதற்காகத் தான் உழைக்கப் போகின்றேன். நான் அழுவதற்காகத் தான் விளையாடப் போகின்றேன் என்று யாரும் சொல்வது கிடையாது...

எனவே!, சூரிய ஒளியை நோக்கித் தான் செடிகள், கொடிகள், மரங்கள் செல்லும்...

அதுபோலத் தான் மனித வாழ்வு என்பது உன்னதமானது. அது மகிழ்வை நோக்கி மட்டும் தான் செல்லும். 

மகிழ்வை அடையப் பல வழிகள் உள்ளன...

🔘 "தேவையற்றவையின் மீது கவனம் வேண்டாம்...!"
...............................................

மனித சிந்தனையானது சற்று வேற்றுமையானது. தேவையின் மீது கவனத்தை வைப்பதை விட தேவையற்றவைகளின் மீது தான் நாம் அதிக கவனம் வைக்கின்றோம்...

உதாரணமாக!, உங்கள் மனத்தில் யாரைப் பற்றி அதிகமாக சிந்திக்கின்றீர்கள்...? என்ற கேள்விக்கு, எண்பது விழுக்காடு மக்கள் தங்கள் எதிரிகளைப் பற்றித் தான் அதிமாக சிந்திகின்றோம் என்று சொல்கிறார்கள்...

நம் அருகில் இருக்கின்றவர்களை, நம்மை நேசிக்கின்ற, நம் வாழ்வைப் பற்றி சிந்திக்கின்றவர்களை நாம் அதிகமாகக் கண்டு கொள்வதில்லை...

இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம் வீட்டில் எது தேவையான பொருள், எது தேவையற்ற பொருள் என்பதைப் பிரித்து வைத்தால் கண்டிப்பாக தேவையற்றப் பொருட்களின் பட்டியல் தான் அதிமாக இருக்கும்...

எனவே!, தேவைற்ற களைகளை அகற்றுவது போல தேவையற்றவையின் மீது உள்ள கவனத்தை அகற்ற முயற்சிப்பது நல்லதே...!

🔘 "ஒற்றை இலக்கம் வேண்டாம்...!!"
..................................................

ஒற்றைச் சிந்தனை, ஒற்றை வாழ்வு முறை, ஒற்றைத் தத்துவம், இது போன்று ஒன்றை மட்டும் நம்பிக் கொண்டிருந்தால், மகிழ்வான வாழ்வு என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாகத் தான் இருக்கும்...

நட்புகளிடத்தில் தான் மகிழ்ச்சி இருக்கின்றது என்று நம்பி உறவுகளில் உள்ள மகிழ்வை இழந்து விடுகின்றோம்...

எனவே!, மகிழ்வு என்பது பல நபர்களிடத்தில் இருக்கின்றது. அதனைத் தேடிக் கண்டு பிடித்து மகிழ்வோம்...

🔘 "கவலை வேண்டாம்...!!"
.......................................................

கவலை தான் அனைத்து நோய்களுக்கும் காரணம். இறந்த காலத்தை நினைத்து எதிர்கால வாழ்வைப் பற்றிய திட்டமில்லாமல் வாழ்கின்றோம்...

எதிர்காலக் கவலையை நினைத்து நிகழ்கால மகிழ்வை இழந்து விடுகின்றோம்...

*ஆம் நண்பர்களே...!*

🟡 விடையில்லாத வினாக்களும், தீர்வுகளில்லா சிக்கல்களும், தொடர்ச்சியான துன்பங்களும், மீள முடியாத சறுக்கல்களும், கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளை விட, கண்ணுக்குத் தெரியாத எதிரிகளும் நம் வாழ்வில் வந்து விட்டுத் தான் செல்வார்கள்...!

🔴 இன்றைய நிகழ்காலத்தில் மகிழ்ச்சி தராத ஒன்றை உங்கள் எதிர்காலத்திற்கு மனபாரத்தோடு கடத்திச் செல்ல எத்தனிக்காமல் அதைப் புறக்கணித்து விட்டு கடந்து செல்லுங்கள்...!!

⚫ உங்கள் வாழ்க்கை இலகுவானதாகவும் அமைதியானதாகவும் இருக்கும். இதைப் புரிந்து கொள்ளும் மனதில் எந்த வருத்தமும் நிலைக்காது. மகிழ்ச்சி திளைக்கும்...!!!

👤 *இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*☕

அதிர்ச்சித் தகவல்கள்

பயனுள்ள குறிப்புகள்

இன்று ஒரு தகவல்

ஆன்மீக மஞ்சரி

நலக்குறிப்புகள்

இன்று ஒரு தகவல்

பாரத தரிசனம்

இலக்கிய வட்டம்

இன்றைய சிந்தனைக்கு

சிரித்து வாழவேண்டும்

29 நவ., 2025

இன்றைய புத்தகம்

முன்னேற்றப் பாதை

ஆன்மீக சிந்தனை

இன்றைய சிந்தனைக்கு

நலக்குறிப்புகள்

ஆன்மீக மஞ்சரி

அருள்வாக்கு

உங்கள் கவனத்திற்கு

28 நவ., 2025

இன்றைய புத்தகம்


MeToo இயக்கம் பற்றிப் பேசத் தொடங்கும் இந்தக் கட்டுரைகள், அந்த இயக்கத்தின் சமகாலச் சிக்கல்களுடன் நிற்காமல் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலின் பல்வேறு வெளிப்பாடுகள், பாலுறவில் பெண்ணின் சம்மதம், பால் அடையாளங்களின் உருவாக்கம் எனப் பல புள்ளிகளையும் தொட்டு விரிந்து செல்கின்றன. சுய சிந்தனை கொண்ட அசலான பெண்ணியப் பிரதி என்று இக்கட்டுரைகளைச் சொல்லலாம்.

கோட்பாட்டுப் புரிதலுடனும் சமூக யதார்த்தங்கள் குறித்த பிரக்ஞையுடனும் எழுதப்பட்ட காத்திரமான பெண்ணியக் கட்டுரைகளைத் தமிழில் மிக மிக அரிதாகவே காண முடிகிறது. அத்தகைய கட்டுரைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பு தமிழுக்கு மிக அவசியமான வரவு.

- அரவிந்தன்

அன்றாட வாழ்வில் அபாயங்கள்

இன்றைய சிந்தனைக்கு

ஆன்மீக மஞ்சரி

27 நவ., 2025

அருள்வாக்கு

இன்றைய குறள்

இன்றைய புத்தகம்



சுந்தர ராமசாமியின் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலுக்கான வாசகப் பார்வை
 
…எதார்த்தமாக குடும்பங்களில் நடக்கும் உரையாடல்கள், அதைச் சார்ந்த சிக்கல்கள், ஒவ்வொரு மனிதனும் தன்னை தொடர்ந்து ஆட்படுத்திக் கொள்ளும் சுயபச்சாதாபம், சமூக கட்டமைப்பு தன்னைச் சார்ந்திருக்கும் போது அதன்பால் ஏற்படும் அசைக்க முடியாத நம்பிக்கையும் மறுபரிசீலனை செய்யாத சிந்தனையும், அதுவே பிறருக்கு சார்ந்ததாக இயங்கும்பொழுது அதன் மீது ஏற்படும் கட்டற்ற கோபமும் ஆற்றாமையும் ஒவ்வொரு மனிதனையும் அவன் ஒழுக்கங்களையும் நம்பிக்கைகளையும் எவ்வாறு கேள்விக்குள்ளாக்குகிறது என்பதே இந்த நாவலின் மையம்…

நன்றி:  மது ஷாலினி (theerakadhai.com வலைதளத்திலிருந்து) 

முழுப்பதிவையும் வாசிக்க:
https://theerakadhai.wordpress.com/2025/11/22/thoughts-on-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d/#more-187

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:

https://books.kalachuvadu.com/catalogue/kuzhanthaikal-penkal-aankal_198/

அமேசானில் வாங்க: https://www.amazon.in/dp/B07QB7P5KC

மின் நூலைப்பெற: https://www.amazon.in/dp/B08CDYBHCD

TopFans Kannan Sundaram D.i. Aravindan

#kalachuvadupublications #tamilbookreaders #sundararamaswamy #bookrecommendations2025 #TamilBookReview  #theerakadhai

இன்றைய சிந்தனைக்கு

விழிப்புணர்வு பதிவு

சிரிப்புத்தான் வருகுதையா

ஆன்மீக மஞ்சரி

நன்றி தெரிவித்தல் நாள் - நவம்பர் 27

நலக்குறிப்புகள்

உங்கள் கவனத்திற்கு

26 நவ., 2025

ஆன்மீக சிந்தனை

இன்றைய புத்தகம்



சுந்தர ராமசாமியின் “திரைகள் ஆயிரம்”

வாசிப்பு அனுபவம்

“சுந்தர ராமசாமி எனும் எழுத்தாளுமையின் படைப்பென்பதே வாசிப்பதற்குப் போதுமான காரணம். Sensitive விஷயங்களை சொல்லும் விதம், எழுத்தில் பொதிந்து வைக்கும் குறியீடு, நையாண்டி, தனிப்பட்ட பார்வை என சுராவின் trademarkகள் கொண்ட அருமையான படைப்பு.”

நன்றி: சாய் ராம் (இன்ஸ்டாகிராம் பதிவு)

https://www.instagram.com/p/DRZUR7ikuJL/?hl=en

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு: 

https://books.kalachuvadu.com/catalogue/thiraikal-aayiram_223/

மின் நூலைப்பெற: 

https://books.kalachuvadu.com/catalogue/ThiraikalAayiram_1668/

அமேசானில் வாங்க:   

https://www.amazon.in/dp/B0FVMGCMQ7

மின் நூலைப்பெற: 

https://www.amazon.in/dp/B0C27XGXTK/

@followers @highlight D.i. Aravindan Kannan Sundaram

#bookrecommendations2025 #tamilbookreaders  #tamilliterature #kalachuvadupublications #bookreview #sundararamaswamy

அதிர்ச்சித் தகவல்கள்

நலக்குறிப்புகள்

அஞ்சலி

                                      கவிஞர் ஈரோடு தமிழன்பன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
      

இன்று ஒரு தகவல்

25 நவ., 2025

அருள்வாக்கு

இன்றைய புத்தகம்


சல்மான் ருஷ்டியின் 

'கத்தி' நூலுக்கான அறிமுகக் கூட்டம் 

 நவம்பர் 9 ஞாயிறு மாலை எட்டு மணிக்கு 

 கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான இணைப்பு:
https://us02web.zoom.us/j/9805204425

 நூலை வாங்குவதற்கான இணைப்பு :

காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/KaththiOrukolaimuyarchikkupinthayasinthanaigal_1478/

அமேசானில் வாங்க: 
https://www.amazon.in/dp/B0DST181Q4

மின் நூலைப்பெற:
https://www.amazon.in/dp/B0DSVRFMX6

@followers @highlight D.i. Aravindan Kalachuvadu Pathipagam Kannan Sundaram

கவிதை நேரம்

நலக்குறிப்புகள்

பயனுள்ள குறிப்புகள்

அன்றாட வாழ்வில் அபாயங்கள்

ஆன்மீக மஞ்சரி

அதிர்ச்சித் தகவல்கள்