12 ஆக., 2008

எனக்குப் பிடித்த கவிதை-31: "புத்தகம்" - கவிஞர் வாலி

பிள்ளையில் படிக்கும் புத்தகம் மழலை
பள்ளியில் படிக்கும் புத்தகம் நட்பு
இளமையில் படிக்கும் புத்தகம் காதல்
வளமையில் படிக்கும் புத்தகம் வாழ்வு!

கட்டிலில் படிக்கும் புத்தகம் மனைவி
தொட்டிலில் படிக்கும் புத்தகம் மதலை
சட்டியில் படிக்கும் புத்தகம் சோறு
பெட்டியில் படிக்கும் புத்தகம் செல்வம்!

உறங்கையில் படிக்கும் புத்தகம் கனவு
கிறங்கையில் படிக்கும் புத்தகம் கள்ளு
உறவினில் படிக்கும் புத்தகம் காமம்
துறவினில் படிக்கும் புத்தகம் ஞானம்!

உவகையில் படிக்கும் புத்தகம் சிரிப்பு
உணர்ச்சியில் படிக்கும் புத்தகம் கோபம்
கவலையில் படிக்கும் புத்தகம் கண்ணீர்
கோவிலில் படிக்கும் புத்தகம் கடவுள்!

முதுமையில் படிக்கும் புத்தகம் ஏக்கம்
முடிவினில் படிக்கும் புத்தகம் தூக்கம்
பிறந்தது முதல்தான் எத்தனை படிப்பு
படித்ததை முடித்ததன் பரீட்சைதான் இறப்பு!

கருத்துகள் இல்லை: