8 ஆக., 2008

பாரதி பற்றி பட்டுக்கோட்டை (கல்யாணசுந்தரம்):

பாரதி பற்றி பட்டுக்கோட்டை (கல்யாணசுந்தரம்):
----------------------------------------------------------------
பாரதிக்கு நிகர் பாரதியே - மண்ணில்
யாரெதிர்த்தாலும் மக்கள்
சீருயர்த்தும் பணியில்...
பாரதிக்கு நிகர் பாரதியே!
பாதகம் செய்பவரைப்
பாட்டாலே உமிழ்ந்தான்.
பஞ்சைகளின் நிலையைப்
பார்த்துள்ளம் நெகிழ்ந்தான்
பேதங்கள் வளர்ப்பவரைப்
பித்தர் என்றே இகழ்ந்தான்
பெண்மையைச் சக்தியை
உண்மையைப் புகழ்ந்தான்.

கருத்துகள் இல்லை: