8 ஆக., 2008

தள்ளல் மன்னர்கள்! - எஸ்.சத்தியமூர்த்தி, I.A. & A.S.

தள்ளல் மன்னர்கள்! - எஸ்.சத்தியமூர்த்தி, I.A. & A.S.

திரு மணியனுக்கு (இதயம் பேசுகிறது) இன்றைய வேலையை இன்றே முடிக்க வேண்டும். பெரிய தொழிலதிபர்களுக்கு நாளைய வேலையைக்கூட இன்றே முடிக்க வேண்டும். ஆனால் பல சாமானியருக்கு இன்றைய வேலையை நாளையோ அடுத்த நாளோ செய்தால் போதும். தள்ளல் மன்னர்கள் இவர்கள். இந்தத் தள்ளல் மன்னர்களுக்கு அமெரிக்காவில் ஒரு சங்கம் 1956-ல் ஆரம்பித்திருக்கிறார்கள்..... ஐந்து லட்சம் அங்கத்தினர்கள் சேர ஆசைப் படுகிறார்களாம். ஒரு செய்தி, அதையும் தள்ளிப் போட்டுக்கொண்டு இருக்கிறார்களாம்!

1823-ஆம் ஆண்டில் சின்சினாட்டி பல்கலைக்கழக நூலகத்திலிருந்து எம்.டூட் (M.Dood) என்பவர் திரு.ஜே.கர்ரி என்பவர் எழுதிய ஒரு மருத்துவப் புத்தகத்தை வாங்கிப் போனாராம். அவரும் ஒரு தள்ளல் மன்னர். புத்தகத்தைத் திருப்பித் தரவேயில்லை! அவருடைய கொள்ளுப்பேரன் 1968-ல் அந்தப் புத்தகத்தைத் திருப்பித் தந்தாராம், ஒரு லட்ச ரூபாய் நஷ்ட ஈட்டோடு!


(திரு எஸ்.சத்தியமூர்த்தி அவர்கள் எழுதிய "தள்ளல் மன்னர்கள்' என்ற கட்டுரையிலிருந்து ஒரு பகுதி).

"கடைசிப் பக்கம்: சின்னச் சின்ன பூக்கள்",
திரு எஸ்.சத்தியமூர்த்தி, I.A. & A.S., கலைஞன் பதிப்பகம், சென்னை.விலை ரூ பதினாறு மட்டும். ('இதயம் பேசுகிறது' இதழில் கடைசிப் பக்கத்தில் வாரா வாரம் வெளிவந்த சுவையான கட்டுரைகளின் தொகுப்பு).

கருத்துகள் இல்லை: