29 ஆக., 2008

சுக வாழ்க்கைக்கு விதிகள் - பிக்ஷூ சுவாமிகள்

1. கடவுளைத் துதிப்போம். அகம்பாவத்தை ஒழிப்போம். மனக் கவலையை ஒழிப்போம். எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டுவோம். ஆசாபாசங்களை விடுவோம்.
௨. சுத்தமான காற்றில் வாசிப்போம்.
3. யோகாசனம், பிராணயாமம் முதலிய பயிற்ச்சிகள் செய்வோம்.
4. சுத்தமான தண்ணீரையே பருகுவோம். காப்பி, டீ, சோடா, மது விலக்குவோம்.
5. பசித்தே உண்போம். மாமிசம் விலக்குவோம். சைவ ஆகாரத்தையே அளவாக உண்போம். சமைக்காத பச்சைக் காய்கறி உண்பது நலம். உப்பு, காரம், புளி குறைவாகப் பயன்படுத்துவோம்.
6. அபினி, கஞ்சா, புகையிலை நீக்குவோம்.
7. சுத்தமான உடையையே குறைவாக உடுத்துவோம்.
8. சுத்தமான தண்ணீரிலேயே குளிப்போம்.
9. வாரத்தில் ஒருநாள் உபவாசம் இருப்போம். 1
10. நோய் வந்தால் நோன்பு இருப்போம். கூடிய வரையில் மருந்துகளைத் தவிர்ப்போம்.
11. பிரம்மச்சரியம் கடைப் பிடிப்போம்.
12. உலக ஆடம்பரத்திர்காகச் செலவழித்து அடிமையாகாதிருப்போம்.
13. நம்மால் இயன்றவரை உதவி செய்வோம். யாருக்கும் தீங்கு இழைக்காமல் இருப்போம்.
14. ஒருபொழுதும் சூதாடாமல் இருப்போம்.
15. மெய்ப்பொருள் ஆராய்ச்சி செய்து தன்னை அறிந்து பிரம்மானந்த மயமாக வாழ்வோம்.

நன்றி: "இயற்கை மருத்துவம், ஏன்?" - பிக்ஷூ சுவாமிகள்,

தமிழ்நாடு இயற்கை மருத்துவ சங்க வெளியீடு (மதுரை), விலை: ரூபாய் பத்து மட்டும்.

கருத்துகள் இல்லை: