20 அக்., 2008

நலக்குறிப்புகள்-16: "நலமுடன் வாழ..."

ஒருவர் ஆரோக்கிய வாழ்வு வாழ இயற்கையோடு இயைந்து வாழவேண்டும். உணவின் அளவு பற்றி ஒவ்வொருவருக்கும் அக்கறை வேண்டும். அளவாக உண்ணுதலிலேயே ஆரோக்கியம் அடங்கியிருக்கிறது. சோறு மிகக் குறைவாக இருந்தால் போதும். காய்கனிகளைத்தான் நிறைய உண்ணவேண்டும்.
நண்றாக மென்று உண்ணவேண்டும். எவ்வளவு சுவையானதாக இருப்பினும், ஒருவர் தனது தேவைதான் என்ன என்பதில் கவனம் செலுத்த வேண்டும். உணவுக்குப் பின்னால் முக்கியத்துவம் பெறுவது உடற்பயிற்சி.
பச்சைக்காய்கறிகள், பழங்கள் மிகுதியாய் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நன்றாக உடற்பயிற்சி செய்யுங்கள். எந்த உணவானாலும் அளவாக உண்ணப் பழகுங்கள். உணவு உண்ணப் போதுமான நேரம் கொடுங்கள். நீங்கள் எப்போதும் இளமையாகவும், நலமுடனும் வாழ முடியும்.
- டாக்டர் சத்தியவான்
நன்றி: டாக்டர் சத்தியவான் & 'இயற்கை மருத்துவம்', மாத இதழ், தமிழ்நாடு இயற்கை மருத்துவ சங்க வெளியீடு.

கருத்துகள் இல்லை: