29 அக்., 2008

நலக்குறிப்புகள்-18: "வில்வ இலைக்குடிநீர்"

ஒரு கைப்பிடி வில்வ இலையை ஒரு டம்ளர் நீரில் (௨00 மிலி) மாலையில் ஊற வைத்து பத்து மணி நேஅரம் ஊறியபின் அந்த நீரை (இல்லை வடிநீர்) வெறும் வயிற்றில் அருந்தி வரவேண்டும். (அருந்திய பின் இரண்டு மணி நேரம் வரை எதையும் சாப்பிடாமல் இருந்தால் நீர் நன்றாக வேலை செய்ய ஒரு வாய்ப்பு.) சுவைக்காகவோ, மணத்திாகவோ எதையும் சேர்க்கக் கூடாது.
நீங்கும் பிரச்னைகள்: மலச்சிக்கல் நீங்கும். அஜீரணம் போகும். வாயுத்தொல்லைகள் நீங்கும். அல்சர் பூரண குணம் கிடைக்கும். தொடர்ந்து பருகிவர, பெண்களுக்கு வெள்ளைபடுதல் பிரச்சனை தீரும். முடி உதிர்வதைத் தடுக்கும். கூந்தல் வளர்ச்சியைக் கொடுக்கும்.
நன்றி: எஸ்.கஜேந்திரன், செல் 9442669325 & 'இயற்கை மருத்துவம்', அக்டோபர் 2008, (தமிழ்நாடு இயற்கை மருத்துவ சங்க வெளியீடு).

கருத்துகள் இல்லை: