14 அக்., 2008

நெல்லையப்பன் கவிதைகள்-25: "மகளிர் மட்டும்"

மகளிர் பள்ளி
மகளிர் கல்லூரி
மகளிர் மட்டும் பஸ்
மகளிர் விடுதி
என்றெல்லாம் பெண்களைத்
தனிமைப்படுத்தி,
தயார்ப்படுத்தி,
மணமுடித்து வைக்க -

ஆணைப் புரியாமல்
பெண்ணும்,
பெண்ணை பிரமிப்பாகப்
பார்க்கும் ஆணும்,
எதிர்பார்ப்புகள் வெவ்வேறாய்,
சிக்கலுடன்
தொடங்கும் வாழ்க்கை!

பெண்களை
இயல்பாய் பார்க்க ஆணும்,
ஆண்களுடன்
நட்புடன் பழக பெண்ணும்,
வாய்ப்பற்று இருப்பது
சிக்கல்களின் தொடக்கம்.

விலங்குகளும், பறவைகளும்
பால்பேதம் பார்ப்பதில்லை!
குழந்தைகளாக வளர்க்காமல்,
ஆண், பெண் என்று
ஆரம்பம் முதல் வளர்த்ததாலே,
உறவுச் சிக்கல்கள்;
பணியிடத்தில் குழப்பங்களை.

பணியில் தொடங்கி,
பாராளுமன்றம் வரை
வந்துவிட்டபின்
பள்ளி, கல்லூரியில் மட்டுமல்ல,
காவல் நிலையத்திலும்
தேவையில்லை,
மகளிர் மட்டும்.

கருத்துகள் இல்லை: