27 ஜன., 2009

நெல்லையப்பன் கவிதைகள்-44: "அவர் வருவாரா?"

இழுபறியான நதிநீர்ப் பங்கீடு,
இலங்கையில் இனப்படுகொலை,
இட ஒதுக்கீடு 33 சதவிகிதம்,
இறக்கை கட்டும் பெட்ரோல்,
இன்டர்நெட் வழி கலாச்சார சீரழிவு,
பயமுறுத்தும் பணவீக்கம்,
பங்குச்சந்தை தொடர் சறுக்கல்,
பெரிதாகும் ஓசோன் ஓட்டை,
உயரும் பூமியின் வெப்பம்,
வளரும் வன்முறைக் கலாச்சாரம்,
அதிகரித்துவரும் எய்ட்ஸ் பயங்கரம்,
இருதுருவமாகும் பொருளாதாரம்:
பற்றி எரியும் பிரச்சினைகள் இவையல்ல;
தமிழனின் தலையாய பிரச்சினை -
அரசியலுக்கு அந்த நட்சத்திரம்
வருவாரா மாட்டாரா?

கருத்துகள் இல்லை: