6 பிப்., 2009

பாரதி கவிதைகள்-15: "சங்கு"

செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலா மென்றே எண்ணியிருப்பார்
பித்தமனிதர், அவர் சொலுஞ் சாத்திரம்
பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்!
இத்தரை மீதினி லேயிந்த நாளினில்
இப்பொழு தேமுக்தி சேர்ந்திடநாடிச்
சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்
தூயவ ராமென்றிங் கூதேடா சங்கம்!
பொய்யுறு மாயைப் பொய்யெனக் கொண்டு
புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே
ஐயுற லின்றிக் களித்திறுப் பாரவர்
ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம்!
மையுறு வாள்விழி யாரையும் பொன்னையும்
மண்ணெனக் கொண்டு மயக்கற் றிருந்தாரே,
செய்யுறு காரியம் தாமன்றிச் செய்வார்
சித்தர் களாமென்றிங் கூதேடா சங்கம்.

கருத்துகள் இல்லை: