2 பிப்., 2009

நலக்குறிப்புகள்-31: "கரிசாலை"

நாற்பது வகையான நோய்களைக் குணப்படுத்தும் சக்தி படைத்தது தெய்வீக மூளிகையான கரிசாலை. இதை நாள்தோறும் உண்டுவந்தால் பித்தமும், கபமும் வெளியேறும். கண்பார்வை மங்காது. கண்களில் ஒளி உண்டாகும். பல்வலி வராது. ஈளை மறையும். சுக்கிலம் கட்டும். ஆண்மை உண்டாகும். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும். புற்றுநோய் வராது. காசம், வெள்ளை, வெட்டை முதலியவை விலகும். நரையும், திரையும் மாறும். ஆன்மா மிளிரும். விதியே மாறும். நாள்தோறும் காலையில் வெறும் வயிற்றில் ஐந்து இலைகள் சாப்பிடுவது போதும். கரிசாலையை மென்று பல் துலக்கினால் பல்வலி மறையும்.

நன்றி: "இயற்கை மருத்துவம்", மாத இதழ், வெளியிடுவோர்: தமிழ்நாடு இயற்கை மருத்துவ சங்கம், காந்தி நினைவு நிதி, மதுரை-625020, மார்ச் 2005 இதழ்.

கருத்துகள் இல்லை: