3 பிப்., 2009

நெல்லையப்பன் கவிதைகள்-46: "கண்ணீர் சிந்திய கடவுள்"

கனவில் வந்தார் கடவுள் -
முகத்தில் அப்பியிருந்தது கரி;
உடைந்திருந்தது மூக்கு;
கண்களில் உதிரம்.

நெடுஞ்சாண் கிடையாய்
கால்களில் விழுந்தேன்;
கதறி அழுதேன்;
காரணம் கேட்டேன்.

காரணம், ரணம் என்றார்.
கந்தமால் நிகழ்வுகள்
கன்னத்தில் கரிபூசியதை,
மாற்று மதத்தினரின்
சிலைகளை உடைத்ததால்
மூக்குடைபட்டதை,
கன்னியாஸ்திரிகள் மேல்
கைவைத்துக் கொன்றதால்,
கோயில்களை விட்டுவிட்டு
வெட்கப்பட்டு வெளியேறிய
வேதனையைச் சொன்னார்.

மதங்களை எல்லாம்விட
மனிதர்கள் முக்கியம்;
மனிதநேயமற்றவர்க்கு
கடவுளாய் இருக்க
சத்தியமாய் சம்மதியோம்;
கனவில் உரைத்தது
காதுகளில் ஒலிக்கிறது.

கருத்துகள் இல்லை: