2 மார்., 2009

தேவாரம்-5:

நீருளான் தீ உளான் அந்தரத்துள்ளான்
நினைப்பவர் மனத்துளான் நித்தமாஎத்தும்
ஊருளான் எனதுரை தனதுரையாக
ஒற்றை வெள்ளேருகந் தேறியஒருவன்
பாருளார் பாடலோ டாடலறாத
பண்முரன் றஞ்சிறை வண்டினம்பாடும்
ஏருளார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்

இருக்கையாப் பேணிஎன் எழில்கொல்வதியல்பே.

யாருள் பிரபஞ்சம் தொகுத்தும், வகுத்தும் ஒன்றித்திருக்கிறதோ, அவர் உயிர்களுக்கு இறைவன். குறுக்கும் நெடுக்குமாக அவர் வியாபித்திருக்கிறார். அவர் அழிவற்றவர். எல்லார் உள்ளத்திலும் அவர் வீற்றிருக்கிறார்.
- சம்பந்தர் தேவாரம்.
நன்றி: தர்ம சக்கரம், ஆனி மாத இதழ், சர்வஜித் வருடம், சக்கரம் 56, ஆறாம் 6.
(திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவன வெளியீடு)

கருத்துகள் இல்லை: