2 மார்., 2009

இன்று ஒரு தகவல்-20: "கையகலக் கருவியில் பத்தாயிரம் புத்தகங்கள்!"

'கிண்டில்' (Kindle) போன்ற கையகல 'எலெக்ட்ரானிக் ரீடர்' (Electronic Reader) தமிழ்நாட்டிற்கு இன்னும் மூன்று மாதத்தில் வரப்போகிறது. தமிழ் பதிப்பு நிறுவனமான 'கிழக்கு பதிப்பகம்' இந்த சாதனையை நிகழ்த்த இருக்கிறது. எட்டுக்கு ஆறு அளவில் உள்ள திரையில் அச்சுப்புத்தகத்தை படிக்கும் உணர்வோடு, விழிகள் சோர்வுறாமல் படிக்கலாம். சுமார் பத்தாயிரம் புத்தகங்கள் வரை நினைவில் கொள்ளமுடியும் இக்கருவியால். மேலும் குறிப்பெடுக்க, 'அசைன்மென்ட்' எழுத என்று பல வசதிகளைக் கொண்டிருக்கும் இக்கருவி. ஒரு தடை 'சார்ஜ்' செய்தால் ஆறு மணி நேரம் இக்கருவி இயங்கும். ஆன்லைன் விற்பனை நிலையமான 'அமேஜான் டாட் காமுடன்' (Amazon.com) இணைந்து கிழக்கு பதிப்பகம் இதை நடைமுறைப்படுத்த இருக்கின்றது. எழுத்துக்களை பெரிதாக்கிப் படிக்க, வேண்டும் பக்கத்தை மட்டும் படிக்க, மின்காந்த பேனா மூலம் குறிப்புகளை எழுதிக்கொள்ள - இப்படிப் பல வசதிகளைக் கொண்டிருக்கும் இக்கருவி. இதன் வழியாக புத்தகங்களை வாங்கும் பொது முப்பது சதவிகிதம் விலை குறைவாகக் கிடைக்கும். இப்படிப் பல அறிய வசதிகளைக்கொண்ட இக்கருவியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். மக்களின் தேவை உணர்ந்து இக்கருவியைத் தமிழகத்திற்கு கொண்டுவரவிருக்கும் கிழக்கு பதிப்பகத்திற்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்.
ஆதாரம்: தினகரன் வசந்தம், மார்ச் 1, 2009.
நன்றி: தினகரன் தமிழ் நாளிதழ்.

கருத்துகள் இல்லை: